|
Post by Amritha Varshini on May 10, 2022 6:03:25 GMT 5.5
உ
உலகைக் காக்கும் அன்னை மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஶ்ரீகிருஷ்ணா
ராகம் – கல்யாணி / தாளம் - ஆதி
பல்லவி
அன்னையை எந்நாளும் வணங்கிடுவோம் அன்பினை எப்பொழுதும் பெற்றிடுவோம்
அனுபல்லவி
கல்லுக்குள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் ஊரும் எறும்பிற்கும் படியளக்கும்
( அன்னையை எந்நாளும் )
சோலை வனத்தில் பூக்களாய் மலர்பவள் பாலை வனத்தில் அருள்மழை பொழிபவள்
சாதிமத மொழியின பேதங்கள் இல்லை அன்னையின் அன்பிற்கோர் எல்லையும் இல்லை
( அன்னையை எந்நாளும் )
|
|