|
Post by Amritha Varshini on May 6, 2022 5:23:06 GMT 5.5
உ
ஸ்ரீ ஆதிசங்கரர் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் – கல்யாண வசந்தம்
பல்லவி
தொழுவோம் தொழுவோம் ஜகத்குருவினையே
பணிவோம் பணிவோம் அவர் கழலிணையே
சரணம்
காலடியில் உதித்த ஞான தீபமே - நின்
காலடி பணிவோர்க்கு அருள்நிதியே
காலனை இடறிய பரம் பொருளே
கால பயம் நீக்கும் மெய்ப் பொருளே
( தொழுவோம் தொழுவோம் )
சரணம்
கனக மழை பொழிவித்த காருண்ய மூர்த்தியே
பாமழையில் துதித்த அத்வைதப் பொருளே
வேதமழை பொழிவித்த குரு பீடமே யாவரும்
பூமழை தூவி வணங்கும் குருமூர்த்தியே
( தொழுவோம் தொழுவோம் )
தொழுவோம் தொழுவோம் ஜகத்குருவினையே
தொலையும் தொலையும் நம் பழவினையே
பணிவோம் பணிவோம் அவர் கழலிணையே
பெறுவோம் பெறுவோம் அவர் அருளினையே
( தொழுவோம் தொழுவோம் )
|
|