|
Post by Amritha Varshini on Apr 1, 2022 5:31:27 GMT 5.5
உ
ஸ்ரீ ராமர் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்துப் பாடியவர் - ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
ராகம் – ஹிந்தோளம்
பல்லவி
தந்தை சொல் காத்த தனயனே எம்மைக் காத்தருள் புரிவாயே – ஸ்ரீ ராம
அனுபல்லவி
தர்மத்தில் வழுவாது நிலைத்த தலைவனே கர்மத்தை நழுவாது செய்த தவப்புதல்வனே
( தந்தை சொல் காத்த தனயனே )
சரணம்
அகலிகைக்கருள் செய்த காருண்ய மூர்த்தியே குகனை தமையனாய் கொண்ட அண்ணலே இகபர சுகம் துறந்த கோசலை மைந்தனே சபரிக்கு முக்தியளித்த சீதா நாயகனே
( தந்தை சொல் காத்த தனயனே )
எண்ணற்ற பக்தர்கள் உனை துதித்தக மகிழ்ந்திட கண்ணுற்ற அடியார்க்கு அருள் மழை பொழிந்திட விண்ணுற்ற தேவரும் நின் புகழ் போற்றிப் பாடிட பண்ணுற்ற சிறியேனுக்குந்தன் கடைக்கண் காட்டிட
( தந்தை சொல் காத்த தனயனே )
|
|