|
Post by Amritha Varshini on Mar 24, 2022 5:10:49 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - ஸ்ரீமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் – அஹிர் பைரவி - ஆதி தாளம்
பல்லவி
கண்ணிமை மூடினால் பொன்னுருவம் தெரிய வேண்டும்
அகத்திரையில் நின் எழிற் கோலம் காண வேண்டும்
அனுபல்லவி
கமல முகம் கண்டு ஆனந்தம் கொள்ள வேண்டும்
விமல குணம் வியந்து போற்றிப் பாடிட வேண்டும்
( கண் இமை மூடினால் )
சரணம்
தண்டம் ஏந்திய திருக்கோலம் மனதில் பதிய வேண்டும்
அண்டம் முழுதும் நின் புகழ் ஒலித்திட வேண்டும்
பாத யாத்திரை செல்லும் காட்சி மனதில் தெரிய வேண்டும்
பாதம் பற்றியே எங்கள் வாழ்வு சிறந்திட வேண்டும்
( கண் இமை மூடினால் )
கனகாபிஷேகம் திவ்யமாய் தரிசித்திட வேண்டும்
மனம் மகிழ உமக்கு அர்ச்சனை செய்திட வேண்டும்
குளக்கரையில் நின் அனுஷ்டானம் கண்டிட வேண்டும்
கலங்கரை விளக்காக எங்களை கரை சேர்த்திட வேண்டும்
( கண் இமை மூடினால் )
|
|