|
Post by Amritha Varshini on Mar 19, 2022 12:31:19 GMT 5.5
உ
சத்குரு ஸ்ரீ சிவன் சார் மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி நிஹாரிகா ஸ்ரீகாந்த்
ராகம் - யமுனா கல்யாணி ; சாப்பு தாளம்
பல்லவி
சத்குரு சிவன் சார் திருவுருவை நினைத்திடுவோம் அவர் பதம் பணிந்து நாளும் வணங்கிடுவோம்
சரணம்
மனிதரில் எத்தனை விதம் என்று கண்டவராம் அதை நூலாக்கி நமக்கு விளக்கித் தந்தவராம் குழந்தையைப் போல் இவ்வுலகில் வாழ்ந்தவராம் அனைவர்க்கும் அருள் மழை பொழிந்தவராம்
( சத்குரு சிவன் சார் திருவுருவை )
புகைப்படம் எடுக்கும் திறன்மிகு வல்லுனராம் அகப்பட அழுக்கை பாங்காய் நீக்குபவராம் பார்வையால் நம் பாவங்களை களைபவராம் நேர்மையால் நமை ஆட்கொண்டு அருள்பவராம்
( சத்குரு சிவன் சார் திருவுருவை )
|
|