|
Post by Amritha Varshini on Feb 28, 2022 5:52:52 GMT 5.5
உ
ஸ்ரீ மஹாபெரியவா மீது ஓர் தமிழ்ப் பாடல்
பாடல் இயற்றியவர் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்துப் பாடியவர் - ஸ்ரீமதி மோஹனா கிருஷ்ணன்
ராகம் – சுமனேச ரஞ்சனி / மிஸ்ரசாபு தாளம் பல்லவி அனுஷ மலர் பூத்தது தோழி என் மனதில் அனுபல்லவி அதை சமர்ப்பணம் செய்திடுவேன் அனுதினமும் அவர் திருவடியில் ( அனுஷ மலர் ) சரணம் நினைக்காத நாளில்லை தொழாத பொழுதில்லை படிக்காத நேரமில்லை பாராது நிலையில்லை எண்ணாமல் முடியவில்லை காணாது காட்சியில்லை உருகாத மனமில்லை பாடியது போதவில்லை ( அனுஷ மலர் ) கலத்தில் சிறைப்பட்ட பறவை போலே சுற்றி வந்தேன் நிலத்தில் நடமாடிய தெய்வத்தை பற்றிக் கொண்டேன் தலத்தில் இன்மை நீக்கும் மஹானை அறிந்து கொண்டேன் நலத்தில் அருளும் குருவின் மேன்மை தெரிந்து கொண்டேன் ( அனுஷ மலர் )
|
|