|
Post by Amritha Varshini on Jan 26, 2022 17:28:22 GMT 5.5
உ
குருவின் மேன்மை பற்றி ஓர் தமிழ்ப் பாடல்
ராகம் – தர்மவதி / ஏக தாளம்
பல்லவி
குருவருள் ஒன்றே நமக்கு போதுமே திருவருள் என்றும் நமக்கு நல்கிடுமே
அனுபல்லவி
இக்கலிதனிலே உழலும் நம்மைக் கடைத்தேற்றிட இப்புவிதனிலே என்றும் சிறப்பாய் நாம் வாழ்ந்திட
( குருவருள் ஒன்றே நமக்கு போதுமே )
சரணம்
குருவின் திருவுருவை நித்தம் நாம் நினைத்திடுவோம் குருவின் திருவடியைப் போற்றி நாம் வணங்கிடுவோம்
( குருவருள் ஒன்றே நமக்கு போதுமே )
குருவின் கீதை கேட்டு அதன்வழி நாம் நடந்திடுவோம் குருவின் பாதுகை நமை காத்திடும் என்றே தெளிந்திடுவோம்
( குருவருள் ஒன்றே நமக்கு போதுமே )
பாடல் இயற்றியவர் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி சுபாஷினி ஸ்ரீசைலன் கீபோர்டு - ஸ்ரீ பிரசன்னா ஸ்ரீசைலன்
|
|