|
Post by Amritha Varshini on Jan 21, 2022 15:50:32 GMT 5.5
உ
ஸ்ரீ தியாகராஜர் மீது ஓர் தமிழ்ப் பாடல்
ராகம் – கரஹரப்ரியா | தாளம் - ஆதி
பல்லவி
திருவாரூரில் உதித்த த்யாகப்ருஹ்மமே திருவையாறில் பொழிந்த நாதப்ருஹ்மமே
சரணம்
மூச்சுக் காற்றினிலே ராமநாமம் ஒலிக்கும் ரோம கூபத்திலும் திவ்யநாமம் இசைக்கும் சப்த ஸ்வரங்களும் உன்னிடம் அடைக்கலம் பக்தி ப்ரவாஹமே உந்தன் இலக்கணம்
( திருவாரூரில் உதித்த )
உஞ்சவிருத்தி எடுத்து காலக்ஷேபம் செய்தாய் கொஞ்சிடும் தெலுங்கினில் கீர்த்தனை இசைத்தாய் பஞ்சரத்னம் தொடுத்து அர்ச்சனை செய்தாய் விஞ்சிடும் பக்தியால் ராமனைக் கண்டாய்
( திருவாரூரில் உதித்த )
பாடல் இயற்றியவர் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
|
|