|
Post by Amritha Varshini on Jan 2, 2022 6:14:21 GMT 5.5
உ
ராகம் – மதுவந்தி
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
- கம்ப ராமாயணம்
பல்லவி
அஞ்சலி செய்து நிற்கும் அஞ்சனை மைந்தனே உமை அனுதினம் தொழுதிட எமக்கருள்வாயே
சரணம்
அன்னையை மீட்கவே காற்றாய் விரைந்தாய் சோகம் நீங்கிடவே ராமகாதை உரைத்தாய் நம்பிக்கை வந்திட கணையாழி கொடுத்தாய் அன்பின் பரிசாக சூடாமணியைப் பெற்றாய்
( அஞ்சலி செய்து நிற்கும் )
ராவணனைக் கண்டு சரிசமமாய் அமர்ந்தாய் ராமனைச் சேவித்து கண்டேன் சீதையை என்றாய் ராமசேது அமைந்திட பேருதவி புரிந்தாய் ராமனை மனத்திருத்தி என்றும் சிரஞ்சீவியானாய்
( அஞ்சலி செய்து நிற்கும் )
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
|
|