|
Post by Amritha Varshini on Dec 27, 2021 5:21:31 GMT 5.5
உ
ராகம் – காம்போதி
பல்லவி
ஆட்கொண்டருளிய அற்புதமே திருவாசகம் தந்த நம் மணிவாசகனை
சரணம்
வாதவூரினில் தோன்றியருளிய மணிவாசகம் வேதமிகு பெருமை கொண்ட அருள்வாசகம் கீதமினிய குயிலிசையாம் இவ்வாசகம் நாதன் பாதந்தனை அடைந்திடும் திருவாசகம்
( ஆட்கொண்டருளிய )
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கும் ஒருவாசகம் தேனினுமினிக்கும் தேவனைப் போற்றும் மணிவாசகம் பொன்னம்பலத்தவன் எழுதி கைச்சாத்திட்ட அருள்வாசகம் நானழித்து மறைபொருள் உணர்த்துமிந்த திருவாசகம்
( ஆட்கொண்டருளிய )
பாடல் இயற்றியவர் - திரு ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - திருமதி சுபாஷினி ஸ்ரீசைலன்
கீபோர்டு - திரு பிரசன்னா ஸ்ரீசைலன்
|
|