|
Post by Amritha Varshini on Dec 18, 2021 5:50:07 GMT 5.5
Namaskaram
We are glad to present a song on Sri Andal Nachiyar today on the auspicious Margazhi. The song is tuned and sung by Smt Rukmini Srikrishna. The lyrics and the YouTube link is shared below. Kindly hear and share your valuable comments and feedback. Pranams Anand Vasudevan உ
ராகம் – கானடா / தாளம் – ஆதி
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்
( நாச்சியார் திருமொழி - வாரணம் ஆயிரம் )
பல்லவி
ஆசை கொண்டாள் கோதை ஆண்டாள் கண்ணனின் அனுபவத்தில் ஆழ்ந்தாள்
அனுபல்லவி
வில்லிபுத்தூர் புண்ணிய தலத்தினிலே விஷ்ணுசித்தர் நந்தவனத்தினிலே
( ஆசை கொண்டாள் )
சரணம்
பாமாலை பாடிய பவித்ரமானவள் பூமாலை அணிந்த பரிமளவானவள் தோள் மாலையிட்ட ப்ரியமானவள் தமிழ் மாலை சூடிய கோலவிழியானவள்
( ஆசை கொண்டாள் )
ஓரைந்து பூதங்களும் தொழுதேத்தும் ஒப்பிலா உணர்வு கொண்ட தமிழ்ப்பாவை ஆரஞ்சு பழம் போலே இனிக்குமிந்த ஆறைந்து பாடல் கொண்ட திருப்பாவை
( ஆசை கொண்டாள் )
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
|
|