|
Post by Amritha Varshini on Oct 26, 2021 5:12:26 GMT 5.5
உ
ராகம் – ரஞ்சனி
பல்லவி
மன்னித்து அருள் புரிவாயம்மா காஞ்சி நகர் மேவும் காமாக்ஷியே
பல்லவி
எண்ணற்ற பிழைகளை செய்த இச்சிறியேனை கண்ணுற்று கைபிடித்து காத்தருள வேணுமம்மா
( மன்னித்து அருள் புரிவாயம்மா )
சரணம்
அன்பினால் என் மெய் விதிர்க்க வேணுமம்மா என்புருக எப்போதும் உனை நினைத்திட வேணுமம்மா கண்ணீர் ததும்பி உள்ளம் கரைந்திட வேணுமம்மா கழலினை நீங்காமல் பற்றி நின்றிட வேணுமம்மா
( மன்னித்து அருள் புரிவாயம்மா )
செடியாய வல்வினைகள் நீங்கிட வேணுமம்மா வடிவாய் நின் தரிசனம் கிடைத்திட வேணுமம்மா மிடியோர்க்கு பொருள் தந்து காத்திட வேணுமம்மா அடியார்க்கு அருள்நிதி என்றும் தந்திட வேணுமம்மா
( மன்னித்து அருள் புரிவாயம்மா )
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - கோவை ஸ்ரீமதி லக்ஷ்மி கௌசிகன்
soundcloud.com/user-919247127/manniththu-arul-purivai-amma
|
|