|
Post by Amritha Varshini on Aug 7, 2021 5:40:20 GMT 5.5
உ
ராகம் – பேஹாக்
பல்லவி
உனை மறவாநிலை தாருமய்யா ரமண சத்குரு நாதா எந்நாளும் எப்போதும்
அனுபல்லவி
அருட்கனியும் பார்வையும் சாந்தி நிலவும் கருணை முகமும் அகத்தில் நிதம் காணும்
சரணம்
அக்னிச்சுடரொன்று வாழ்வில் ஒளியேற்ற அருணை அடைந்தது இக்கணமே உண்மைப் பொருள் விளங்க அது கருணை புரிந்தது நெக்குருகி இதயம் கரைந்திடவே அது வழி செய்தது பக்கதுணை நீயே ரமணாவென்று மனம் புரிந்து கொண்டது
( உனை மறவாநிலை தாருமய்யா )
சரணம்
பற்பல நூல் கற்றும் மனமடங்க மறுக்குது கற்றவர் பலர் உரை கேட்டும் அது வெளியே தேடுது வெற்றுடல் இது அழியும் எனவே மெய்ப்பொருளை நாடிடு உற்றநிலை அடைந்திடவே உனை மனம் நாடுது
( உனை மறவாநிலை தாருமய்யா )
பாடல் - ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்
soundcloud.com/amritha-varshini-836751731/unai-marava-nilai-tharumayya
|
|