|
Post by Amritha Varshini on Aug 7, 2021 5:38:57 GMT 5.5
உ
ராகம் – பாகேஸ்ரீ | தாளம் - கண்டசாப்பு
பல்லவி
உனையின்றி எமக்கு வேறேது கதி - சந்த்ரசேகரா
அனுபல்லவி
முப்பிறவியின் வினைப்பயன் இப்பிறவியில் கழிந்திட அப்பாவென்று நின் திருவடி தப்பாமல் பிடித்திட
(உனையின்றி)
சரணம்
நல்லோர் உறவமைத்து ஞானம் நல்கினாய் - பாரினில் பல்லோர் வாழ்த்திட செயலமைத்து அருளினாய் எல்லோர் வாழ்வும் கடைத்தேறிட வழி காட்டினாய் வல்லோர் மனதில் என்றும் நீங்கா மணம் வீசினாய்
(உனையின்றி)
மேற்பட்ட திசையெங்கிலும் நின்புகழ் வீசுதே - நின் கால்பட்ட இடமெல்லாம் பவித்ரமானதே - கந்தனின் வேல்பட்ட மலையெங்கும் நின் குரல் ஒலிக்குதே பேர்பெற்ற தேவர்களும் நின் புகழ் துதிக்கவே
(உனையின்றி)
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்
soundcloud.com/amritha-varshini-836751731/unaiyindri-emakku-verethu-kathi
|
|