|
Post by Amritha Varshini on Aug 7, 2021 5:26:13 GMT 5.5
உ
ராகம் - அடாணா
பல்லவி
இரெண்டெழுத்து மந்திரத்தை சொல் மனமே
அனுபல்லவி
மனக்கவலை நீக்கி அறவழி காட்டி இறைபக்தியும் நல்கும் ராம நாமமாம்
(இரெண்டெழுத்து)
சரணம்
வானரங்கள் பக்தியால் எழுதிய நாமத்தினால் கற்களும் மிதந்த அதிசயம் கேட்டு
(இரெண்டெழுத்து)
அஞ்சனை மைந்தன் பக்தியால் சொல்லிய நாமத்தினால் கடல் தாண்டிய சாகசம் கேட்டு
(இரெண்டெழுத்து)
அடியார்கள் பக்தியால் பாடிய நாமத்தினால் முக்தியும் அடைந்த சரித்திரம் கேட்டு
(இரெண்டெழுத்து)
ஆக்கம் - ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்
soundcloud.com/amritha-varshini-836751731/aud-20170405-wa0066
|
|