|
Post by Amritha Varshini on Aug 7, 2021 5:24:40 GMT 5.5
உ
ராகம் - சஹானா
ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சஹானா ராகத்தில் அமைந்த பாடலை காணிக்கை செய்கிறோம்
பல்லவி
உனதருள் ஒன்றே போதும் எந்தை இராமானுஜா
அனுபல்லவி
பொன் வேண்டேன் பொருள் வேண்டேன் பேர் வேண்டேன் புகழ் வேண்டேன் - எனக்கு
(உனதருள்)
சரணம்
சம்சார கடல் கடக்கும் உபாயமதை மதில் மேல் நின்றுரைத்த கருணைக்கடலே ஹரி பக்தி அனைவர்க்கும் சமமென்று கருதியே சரணாகதி தத்துவத்தை உணர்த்திய உத்தமரே
(உனதருள்)
தமிழ் மண்ணில் உதித்த பெருந்தகையே திருமலையில் வழிபாட்டு முறை செய்த ஆசானே ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் உன் புகழ் எம்மனதில் என்றும் மறையாது - எனவே
(உனதருள்)
ஆக்கம் - ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்
|
|