|
Post by Amritha Varshini on Aug 6, 2021 5:23:45 GMT 5.5
உ
ராகம் - ஆனந்த பைரவி | தாளம் - ஆதி
பல்லவி
வழித்துணை நீ இருக்க எனக்கென்ன பயமிருக்கு ரமண சற்குருநாதா
அனுபல்லவி
கடைக்கண் பார்வை தரிசனம் ஒருமுறை கண்டால் கர்ம வினைகள் யாவும் தொலையுமே
( வழித்துணை நீ இருக்க )
சரணம்
அசலமாய் அமர்ந்து தன்னை உணரும் அறிவைக் கொடுத்தது நீயன்றோ அக்ஷரமணமாலை தனை நித்தியம் படிப்பவரை ரக்ஷிக்கவே ஓடி நீயும் வருவாயன்றோ
( வழித்துணை நீ இருக்க )
அங்கிங்கென திரிந்து இறுதியில் உன்னைக் கண்டு வாழ்கையெனும் கடல் கடக்க உபாயமதை கண்டுகொண்டேன் நான் யார் என்பதை அறிந்து கொள்ளவே உன்னை நானும் சரணடைந்தேன் அய்யா
( வழித்துணை நீ இருக்க )
பாடல் - ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்து பாடியவர் - திருமதி காயத்ரி ஆனந்த் வாசுதேவன்
பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்
soundcloud.com/amritha-varshini-836751731/zkwt2u7yk48i
|
|