|
Post by Amritha Varshini on Aug 5, 2021 5:21:25 GMT 5.5
உ
ராகம் - நாட்டை
பல்லவி
சிவசக்தி மைந்தனை பணி மனமே ப்ரணவ ஸ்வரூபனை காருண்ய மூர்த்தியை
அனுபல்லவி
தெருமுனையில் அமர்ந்து தொழுவோர்க்கு அருள்புரிந்து எண்ணுவது ஈடேற்றும் குழந்தைக் கடவுளாம்
(சிவசக்தி மைந்தனை)
சரணம்
முழுமுதற் கடவுளாம் விநாயகனை வணங்கிட விக்னங்கள் யாவும் விலகிடுமே ஆறுமுக சோதரனை ஆனைமுகனை துதிக்க இடர்களும் தடைகளும் நீங்கிடுமே
(சிவசக்தி மைந்தனை)
சிதறுகாய் உடைத்து ப்ரீதி செய்திடவே நம் கஷ்டங்கள் யாவும் சிதறிடுமே தோப்புக் கரணமதை நிதமும் செய்திட நம் ஞாபக சக்தியும் பெருகிடுமே
(சிவசக்தி மைந்தனை)
அவ்வை அகவலை நாமும் பாடிடவே ஞானம் அனைத்தும் நல்கிடுமே சுழி போட்டு துவங்கிய செயல் யாவும் துலங்கி செல்வங்கள் பெருகிடுமே
(சிவசக்தி மைந்தனை)
பாடல் - ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்
|
|