|
Post by Amritha Varshini on Jul 31, 2021 11:11:49 GMT 5.5
உ
ராகம் - கானடா / தாளம் - ஆதி
பல்லவி
கவலை தோன்றினால் காஞ்சி நீ வந்திடு காஞ்சி மகானின் சன்னிதி நீயும் அடைந்திடு
அனுபல்லவி
தெய்வத்தின் குரலினை பொருள் உணர்ந்து நீ படித்திடு நடமாடும் தெய்வம் பகர்ந்ததை புரிந்து நீயும் தெளிந்திடு
( கவலை தோன்றினால் )
சரணம்
எளிமையே உருவான குருவை நீ வணங்கிடு ஒருமையுடன் அவர் திருவடி ஏற்றி நீயும் போற்றிடு துயரம் அனைத்தும் அவர் காலில் நீ போட்டிடு உயரம் சென்றிட அவர் கழலினை நீயும் பற்றிடு
( கவலை தோன்றினால் )
சரணம்
தர்மத்தின் வழியினில் தவறாமல் நீ சென்றிடு கர்ம யோகத்தில் வழுவாது நீயும் நிலைத்திடு போட்டி பொறாமை என்பதை சற்றே நீ விலக்கிடு நாளும் அவர்தாள் வணங்கி நல்லதை நீயும் செய்திடு
( கவலை தோன்றினால் )
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி சுபாஷிணி ஸ்ரீசைலன் கீ போர்டு - ஸ்ரீ பிரசன்னா ஸ்ரீசைலன்
www.reverbnation.com/anandavarshini/song/32618140-kavalai-thondrinalmp3
|
|