|
Post by Amritha Varshini on Jul 31, 2021 11:03:09 GMT 5.5
உ
ராகம் – ஹிந்தோளம்
பல்லவி
தஞ்சம் அடைந்தேன் நின் திருவடியில் நெஞ்சம் நெகிழ்ந்தேன் என் மனகுகையில்
அனுபல்லவி
அபயம் தந்து நற்றிசை காட்டி கரை சேர்த்திடுவாய் காஞ்சிநகர் உறையும் ஜகத்குருவே
( தஞ்சம் அடைந்தேன் )
சரணம்
இதயத்தில் எப்பொழுதும் நின்னுருவம் கண்டோம் உதயத்தில் அனுதினம் நின்பாதம் பணிந்தோம் நின்நாமம் சொல்லி பூமலர் தூவிடுவோம் நாளும் பணிந்து நின்புகழ் பாடிடுவோம்
( தஞ்சம் அடைந்தேன் )
பிழைகளைப் பொறுத்து சற்றே அருளிடுவாய் வினைகளைக் களைந்து எமக்கு ஒளிதருவாய் பாதம் பணிந்து உமைத்தொழ வரம் தந்திடுவாய் நாளும் நல்வழி காட்டி எமைக் காத்திடுவாய்
( தஞ்சம் அடைந்தேன் )
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன் இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி லக்ஷ்மி
www.reverbnation.com/anandavarshini/song/32618039-thanjam-adainthen
|
|