|
Post by Amritha Varshini on Jul 31, 2021 10:54:54 GMT 5.5
உ
ராகம் : பௌளி | தாளம் : மிஸ்ரசாபு
பல்லவி
முக்காலமும் உணர்ந்த தவமுனியே உமை எக்காலமும் வணங்கிட அருள் புரிவாய் சரணம் கண்ணிமை மூடினால் நின்னுருவம் தோன்றிட வேண்டும் தண்ணொளி போல் எமக்கு அருள் பொழிந்திட வேண்டும் ஆறெழுத்து மந்திரச்சொல் எங்கும் ஒலித்திட வேண்டும் மஹாபெரியவா எனும் நாமம் எமைக் காத்திட வேண்டும் ( முக்காலமும் உணர்ந்த தவமுனியே ) சரணம் நோய்கள் தாக்கிடும் போது தடுத்திட வேண்டும் சேயினை நீங்கா தாய் போல காத்திட வேண்டும் சோதனை யாவும் முற்றிலும் விலகிட வேண்டும் சாதனை புரிந்திட வாழ்த்தி அருளிட வேண்டும் ( முக்காலமும் உணர்ந்த தவமுனியே )
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் - ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
www.reverbnation.com/anandavarshini/song/32664947-mukaalamum-unarntha-thavamuniye
|
|