|
Post by Amritha Varshini on Jul 31, 2021 10:49:43 GMT 5.5
உ
ராகம் : சாரமதி | ஆதி தாளம்
பல்லவி
தபோவனத்தில் வீற்றருளும் ஜகத்குருவே எமை கண்ணிமை காப்பது போல் காத்திடுவீரே
அனுபல்லவி
கோவிந்தபுரத்தினில் எழில்சூழ் நந்தவனத்தினில் காமகோடி குருமார்களுடன் ஆனந்தமாய் சரணம்
கற்றுக் கடைத்தேறிட ஞானம் எமக்கு நல்கிடுவாய் பற்றது நீங்கி பக்குவ நிலை எமக்கு அருளிடுவாய் உற்று நோக்கியே நின் அருட்பார்வை தந்திடுவாய் சற்று இறங்கியே எங்கள் இல்லந்தான் வந்திடுவாய்
( தபோவனத்தில் வீற்றருளும் ஜகத்குருவே ) சரணம்
நீலகண்டனாய் அன்று நீ காத்தருள் புரிந்திட்டாய் பாலகனாய் கலவையில் இன்று நீ குருபீடமேற்றாய் ஆலால விடம் உண்டு உலகினையும் நீ ரக்ஷித்தாய் காலனிடம் போராடும் நோயினைத்தான் நீ அழித்திடுவாய்
( தபோவனத்தில் வீற்றருளும் ஜகத்குருவே )
பாடல் - ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்
இசையமைத்து பாடியவர் – ஸ்ரீமதி சேதுலக்ஷ்மி சந்தானகோபாலன்
www.reverbnation.com/anandavarshini/song/32756585-thapovanam-mahaperiyava
|
|