|
Post by Amritha Varshini on Mar 22, 2015 19:15:10 GMT 5.5
திருமந்திரம் - திருமூலர்
அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்வியன் ஆகிப் பிறர்பொருள் வவ்வன்மின் செவ்வியன் ஆகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விக் கொடுண்மின் தலைப்பட்ட போதே
பொருள்
பொறாமை கொண்டு மற்றவர்களை இழித்துப் பேசி, தரும நெறி கெடும்படியாக வாழக்கூடாது. கொடியவன் ஆகி, அடுத்தவர் பொருள் மேல் ஆசை கொண்டு, அப்பொருளைக் கவரக் கூடாது. உண்ணும்போது, ஓர் அகப்பை உண வையாவது ஏழைகளுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.
|
|