Post by jksivan on Oct 6, 2014 4:42:54 GMT 5.5
லிங்காஷ்டகம் 4
திருநாவுக்கரசர் என்கிற நம் அப்பர் சொன்னது நினைவிருக்கிறதா? ''உன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடைப்பதே''. பணி மனிதனுக்கு மனிதன் வேறு படும். அவனவன் செய்யும் தொழில் தான் அவனவனுக்கு தெய்வம். இறைவனை எதிலும் பார்ப்பது நமது இந்து தர்மம். நமது முன்னோர்கள் காட்டிய மெய் வழி.
இன்று சிதம்பரம் நடராஜனைப் பற்றி ஒரு அருமையான ருசிகர தகவல் தர விருப்பம். சொல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருக்கிறது. ஏற்கனவே தெரிந்தால் இன்னுமொரு முறை தெரிந்துகொள்வதில் தப்பில்லை. தெரியாதவர்களுக்கு இது ஒரு போனஸ்.
நாம் வாழும் ''பூமி'' யின் மையம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் அற்புதம் ஆச்சர்யம் என்று குதிப்பீர்கள்.
இதைக்காட்டிலும் ஒரு அதிசயம் சொல்லட்டுமா?
நமது பூமியின் மையத்தில், நாம் சொல்கிற 'நடு சென்டரில்'' உள்ள நாடு எது என்றாவது தெரியுமா?
இன்னும் கொஞ்சம் ரகசியமான கேள்வி. அப்படி உலகின் மையத்தில் உள்ள நாட்டில் ''நடு சென்டரில்' உள்ள இடத்தின் பெயர் என்ன?'
'மேற்கண்ட முதல் ரெண்டு கேள்விக்கு ''இந்தியா'' என்கிற பாரதம்' தான் விடை. இந்த விடை தெரிந்தவர்கள் அந்த விடையேறிய உமை பங்கனின் அருளைப் பெறுவார்கள்.
மூன்றாவது கேள்விக்கு ரகசியமான விடை ''சிதம்பரம்'' -- இது தெரிந்தவர்களுக்கு சிதம்பர ரகசியமே தெரிந்துவிட்டதாகக் கொள்ளலாம்.
ரகசியம் தெரிந்தால் மட்டும் போதுமா? பரம ரகசியம் தெரிய வேண்டுமே என்று ஆசைப்படுவோர்களே , இதோ தெரிந்து கொள்ளுங்கள்
உலகத்தின் நாடுகளில் மத்யமத்தை, புள்ளியாக துல்லியமாக சுட்டிக்காட்டுவது எது தெரியுமா சிதம்பரம் ஸ்ரீ நடராஜரின் தூக்கிய திருவடியின் இடது கால் கட்டைவிரல் நுனி.
இதை அறிந்து சொன்னவர்கள் ஞானிகள். நாம் நமது முன்னோர்களையும் அவர்களது ஞானத்தையும் அலட்சியம் செய்யும் கும்பலில் இருந்தால் சற்றே நகர்ந்து சயன்ஸ் படித்து ஊரினவர்கள் இதை சொல்லியிருக்கிறார்கள் என்பதாலாவது நம்புவோமாக.
உலகம் உருள்வது, நகர்வது எல்லாமே சாக்ஷாத் நடராஜனின் கால் கட்டைவிரல் நுனியிலிருந்து தான். தெரியாமலா மகான்கள் தீர்க்க தரிசியாக பாடியிருக்கிறார்கள் ''மானாட, மயிலாட, மங்கை சிவகாமியாட.......... சகலமும் ஆட, ஆடும் அந்த சுழற்சியே தான் பிரபஞ்சத்தின் ஓட்டம். அசைவில் தான் அகிலம் தழைக்கிறது. ஆட்டுவிப்பவன் ஆடலரசன்
. அந்த நடம் புரியும் நடராசன். அவனைத்தான் லிங்\காஷ்டகத்தின் 4 வது சுலோகம் மூலம் வணங்குகிறோம்.
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் (4)
பொன்னார் மேனி கொண்ட புண்ணியா, வைரம், கோமேதகம், மரகதம், முத்து, பவழம், மாணிக்கம் இவற்றால் ஆனா ஆபரணங்களை உனக்குச் சூட்டி மகிழ்கிறோம். இது பக்தர்கள் பூட்டி மகிழ்வது. உன்னைப் பொருத்தவரை, அரவமே ஆபரணம், அதன் கொடிய நஞ்சே உன் நீல கண்டம், உனக்குகந்த நகை நீயே விரும்பி அணியும் வில்வ இலலை. உன்னை அர்ச்சிக்கும் புஷ்பம் கூட ஒரு நாகம் -- நாக லிங்க புஷ்பம். உன்னை சுற்றி அலங்கரிப்பது அரவங்கள்.. அவமதித்த தக்ஷனை நாசம் செய்த பரம லிங்கா, சதா சிவா, சர்வேஸ்வரா, மகாதேவா, உன்னைபாட, போற்ற, ஒரு பிறவி எப்படி போதும் பல பிறவி வேண்டுமே.
திருநாவுக்கரசர் என்கிற நம் அப்பர் சொன்னது நினைவிருக்கிறதா? ''உன் கடன் அடியேனையும் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடைப்பதே''. பணி மனிதனுக்கு மனிதன் வேறு படும். அவனவன் செய்யும் தொழில் தான் அவனவனுக்கு தெய்வம். இறைவனை எதிலும் பார்ப்பது நமது இந்து தர்மம். நமது முன்னோர்கள் காட்டிய மெய் வழி.
இன்று சிதம்பரம் நடராஜனைப் பற்றி ஒரு அருமையான ருசிகர தகவல் தர விருப்பம். சொல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருக்கிறது. ஏற்கனவே தெரிந்தால் இன்னுமொரு முறை தெரிந்துகொள்வதில் தப்பில்லை. தெரியாதவர்களுக்கு இது ஒரு போனஸ்.
நாம் வாழும் ''பூமி'' யின் மையம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் அற்புதம் ஆச்சர்யம் என்று குதிப்பீர்கள்.
இதைக்காட்டிலும் ஒரு அதிசயம் சொல்லட்டுமா?
நமது பூமியின் மையத்தில், நாம் சொல்கிற 'நடு சென்டரில்'' உள்ள நாடு எது என்றாவது தெரியுமா?
இன்னும் கொஞ்சம் ரகசியமான கேள்வி. அப்படி உலகின் மையத்தில் உள்ள நாட்டில் ''நடு சென்டரில்' உள்ள இடத்தின் பெயர் என்ன?'
'மேற்கண்ட முதல் ரெண்டு கேள்விக்கு ''இந்தியா'' என்கிற பாரதம்' தான் விடை. இந்த விடை தெரிந்தவர்கள் அந்த விடையேறிய உமை பங்கனின் அருளைப் பெறுவார்கள்.
மூன்றாவது கேள்விக்கு ரகசியமான விடை ''சிதம்பரம்'' -- இது தெரிந்தவர்களுக்கு சிதம்பர ரகசியமே தெரிந்துவிட்டதாகக் கொள்ளலாம்.
ரகசியம் தெரிந்தால் மட்டும் போதுமா? பரம ரகசியம் தெரிய வேண்டுமே என்று ஆசைப்படுவோர்களே , இதோ தெரிந்து கொள்ளுங்கள்
உலகத்தின் நாடுகளில் மத்யமத்தை, புள்ளியாக துல்லியமாக சுட்டிக்காட்டுவது எது தெரியுமா சிதம்பரம் ஸ்ரீ நடராஜரின் தூக்கிய திருவடியின் இடது கால் கட்டைவிரல் நுனி.
இதை அறிந்து சொன்னவர்கள் ஞானிகள். நாம் நமது முன்னோர்களையும் அவர்களது ஞானத்தையும் அலட்சியம் செய்யும் கும்பலில் இருந்தால் சற்றே நகர்ந்து சயன்ஸ் படித்து ஊரினவர்கள் இதை சொல்லியிருக்கிறார்கள் என்பதாலாவது நம்புவோமாக.
உலகம் உருள்வது, நகர்வது எல்லாமே சாக்ஷாத் நடராஜனின் கால் கட்டைவிரல் நுனியிலிருந்து தான். தெரியாமலா மகான்கள் தீர்க்க தரிசியாக பாடியிருக்கிறார்கள் ''மானாட, மயிலாட, மங்கை சிவகாமியாட.......... சகலமும் ஆட, ஆடும் அந்த சுழற்சியே தான் பிரபஞ்சத்தின் ஓட்டம். அசைவில் தான் அகிலம் தழைக்கிறது. ஆட்டுவிப்பவன் ஆடலரசன்
. அந்த நடம் புரியும் நடராசன். அவனைத்தான் லிங்\காஷ்டகத்தின் 4 வது சுலோகம் மூலம் வணங்குகிறோம்.
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் (4)
பொன்னார் மேனி கொண்ட புண்ணியா, வைரம், கோமேதகம், மரகதம், முத்து, பவழம், மாணிக்கம் இவற்றால் ஆனா ஆபரணங்களை உனக்குச் சூட்டி மகிழ்கிறோம். இது பக்தர்கள் பூட்டி மகிழ்வது. உன்னைப் பொருத்தவரை, அரவமே ஆபரணம், அதன் கொடிய நஞ்சே உன் நீல கண்டம், உனக்குகந்த நகை நீயே விரும்பி அணியும் வில்வ இலலை. உன்னை அர்ச்சிக்கும் புஷ்பம் கூட ஒரு நாகம் -- நாக லிங்க புஷ்பம். உன்னை சுற்றி அலங்கரிப்பது அரவங்கள்.. அவமதித்த தக்ஷனை நாசம் செய்த பரம லிங்கா, சதா சிவா, சர்வேஸ்வரா, மகாதேவா, உன்னைபாட, போற்ற, ஒரு பிறவி எப்படி போதும் பல பிறவி வேண்டுமே.