Post by gmkumaran on Aug 8, 2013 14:18:37 GMT 5.5
அன்பே சிவம். சிவமே பைரவம்.
குரு பூஜை:9-8-13ஸ்ரீ பாடகச்சேரி சுவாமி.
ஸ்ரீபைரவர் சித்தர் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகளை வணங்கி எம்பெருமானின் அருளினை பருகுவோம்.
நமக்குத் தெரியாமல், நம்மோடு கலந்து நம்மை அருளால் இயக்கும் காற்றைப் போன்றவர்கள் சித்தர்கள். ஜீவனுக்கும் சிவனுக்குமான அபேதத்தை உண்மையாக உணர்ந்தவர்கள் சித்தர்கள் (அவன் சிவன் தெரித்த ஞானி - சிவவாக்கியர் பா - 110).
சித்தர் ஸ்ரீராமலிங்க சுவாமி இளமையிலேயே பெற்றோரை இழந்து விட்டார். தன் பதினேழாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி துறவு மேற்கொண்டார். தஞ்சைப் பகுதியில் அகத்திய நதி எனப்படும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ள அமைதியான கிராமம் பாடகச்சேரி. இதற்கு மேற்கில் பட்டம் என்னும் ஒரு குக்கிராமம் உள்ளது. இங்கே தான் முதன் முதலில் வந்து தங்கினாராம் பாடகச் சேரி சுவாமிகள். அங்கிருந்த ஒரு மடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருப்பாராம்.
"சாமி வெளியூருக்குப் போயிட்டு வந்தா நிறைய பழங்களும் தின்பண்டங்களும் கொண்டு வருவார். எங்களை வரிசையாக அமரச் சொல்லி எல்லாருக்கும் கொடுப்பார்' என்கிறார்கள்- அன்று சிறுவர்களாக இருந்த இன்றைய முதியோர்கள்.
பாடகச்சேரியில் பால தண்டாயுதபாணி ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தார் சுவாமிகள். அப்போது அங்கு வந்த ஆதப்ப செட்டியாரின் தொழுநோயை சுவாமிகள் குணப்படுத்தியிருக்கிறார். அதன் நினைவாக அவர் பாடகச்சேரி கிராமத்தின் மேற்கு எல்லையில் சுவாமிகளுக்கு ஒரு மடம் கட்டித் தந்தார். சுவாமிகள் அங்கே தங்கியிருந்து அன்னதானம் செய்திருக்கிறார்.
கோவிலையும் மடத்தையும் பராமரிப்பதற்காக பிடியரிசித் திட்டத்தை கிராம மக்களிடம் செயல்படுத்தியிருக்கிறார். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும்முன் ஒரு பிடி அரிசியை தர்மத்திற்கென்று எடுத்து வைப்பது. இதை குடந்தையிலும் செயல்படுத்தியிருக்கிறார்.
பாடகச்சேரி சுவாமிகள் தன் கழுத்தில் கயிறு கட்டி உண்டியலைத் தொங்கவிட்டு, ஊரெங்கும் சென்று பணம் வசூலித்து, பல ஆலயங்களுக்கும் திருப்பணி செய்துள்ளார். அதில் கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அக்கோவிலின் ராஜகோபுரத்தில் சுவாமிகளின் சுதைச் சிற்பத்தைக் காணலாம். கோவிலுக்குள் சிங்க கிணற்றுக்கு அருகில் சுவாமிகளுக்கு ஒரு சந்நிதியும் அமைத்துள்ளனர். அதுபோல புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் திருப்பணிக்கும் உதவியுள்ளார். அந்த ஆலயத்திலும் இவரது திருவுருவத்தைக் காணலாம். மேலும் கர்நாடக மாநில அன்பர்களின் வேண்டு கோளின்படி அங்கே சென்று ஒரு சிவன் கோவிலும் அமைத்துள்ளார்.
அன்னதானமும் பைரவ பூஜையும் அங்கே நடத்தியிருக்கிறார். பைரவ பூஜையென்றால், ஆலயத்திலுள்ள பைரவர் பூஜையல்ல. நடமாடும் பைரவர்களை (நாய்களை) அங்கே வரவழைத்து, மனிதர்களுக்கு அளிப்பது போல வடை, பாயசத்துடன் விருந்து வைப்பாராம். அப்படி வரும் ஏராளமான நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிடாமல் வரிசை யாக அமர்ந்து கொள்ளுமாம். சுவாமிகள் சொல்லும்போதுதான் சாப்பிடுமாம். இந்த விருந்தை சேலம் ஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகளும் வியந்து பாராட்டியுள்ளார்.
என்னை நம்பியிருப்பவர்களுக்கு என்றும் நான் துணையாக உடனிருப்பேன். நம்பாதவர்களுக்கும் என்மீது நம்பிக்கை வரும் பொருட்டு தொடர்ந்து உதவிகள் செய்து வருவேன்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள். தன்னை நம்பிய பக்தனை பாம்பு கடித்தபோது, ஒன்றும் ஆகாமல் இருக்க, மறுநாள் பைரவ சித்தருக்கு கால் வீங்கியிருந்தது. காரணம் கேட்டபோது, “ஒன்றுமில்லை. என் பக்தனின் பாம்புக் கடியை நான் வாங்கிக்கொண்டேன். குடும்பஸ்தன் பாவம் அவன் தாங்கமாட்டான்” என்றாராம்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் சீடரான இந்த பைரவ சித்தர், இறுதியாக சென்னை, திருவொற்றியூருக்கு வந்து, 1949-ஆம் ஆண்டு, ஆடிப்பூரம், வெள்ளிக்கிழமை அன்று தியாகேசரின் பொற்பாதங்களில் ஜோதி வடிவாகக் கலந்தார். பட்டினத்தாரைப் போல இவருக்கும் திருவொற்றியூரில் ஜீவசமாதி அடைந்தவர்.
பட்டினத்தார் கோயில் தெருவிலேயே அமைந்துள்ளது பைரவ சித்தர் ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் மடம். மடத்தின் வளாகத்தினுள்ளேதான் அவரின் ஜீவ சமாதியிருக்கிறது.. ஜீவ சமாதியின் மேல்தான் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
“மனத்தினில் ஏதேனும் ஒரு நியாயமான கோரிக்கையை வைத்து, ஒவ்வொரு வியாழன் மாலையும் விளக்கேற்றி சுற்றி வந்தால், சித்தர் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றிவிடுவார்.
பாடகச்சேரியில் இன்றும் பௌர்ணமி நாட்களில் ஒன்பது நாய்களுக்கு விருந்தளிக்கும் தொண்டு நடைபெற்று வருகிறது. இப்படி நாய்களுக்கு விருந்தளிப்பதால் பூர்வ ஜென்ம தீவினைகளிலிருந்து விடுபடலாம் என்பது சுவாமிகளின் சித்தம்.
சுவாமிகள் வள்ளலாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி வடலுர் சென்று வழிபட்டு வருவார். அருட்பாவை யாராவது தவறாகப் பாடினால் உடனே திருத்துவாராம். ஆண்களை "அண்ணா' என்றும்; பெண்களை "தாயே' என்றும் அழைப்பாராம். "ஆபத்சகாயம்' என்று சொல்லி திருநீறு கொடுத்தே பலரின் நோய்களைத் தீர்த்திருக்கிறார். "பா. இராமலிங் கம்' என்று கையெழுத்திடுவாராம்.
குரு பூஜை:9-8-13 friday....at thiruvottiyour padagachery swamy samaathi temple[chennai]& kumbakonam padagacherry village padagachery swamy birth temple[near valangaiman]
குரு பூஜை:9-8-13ஸ்ரீ பாடகச்சேரி சுவாமி.
ஸ்ரீபைரவர் சித்தர் ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகளை வணங்கி எம்பெருமானின் அருளினை பருகுவோம்.
நமக்குத் தெரியாமல், நம்மோடு கலந்து நம்மை அருளால் இயக்கும் காற்றைப் போன்றவர்கள் சித்தர்கள். ஜீவனுக்கும் சிவனுக்குமான அபேதத்தை உண்மையாக உணர்ந்தவர்கள் சித்தர்கள் (அவன் சிவன் தெரித்த ஞானி - சிவவாக்கியர் பா - 110).
சித்தர் ஸ்ரீராமலிங்க சுவாமி இளமையிலேயே பெற்றோரை இழந்து விட்டார். தன் பதினேழாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி துறவு மேற்கொண்டார். தஞ்சைப் பகுதியில் அகத்திய நதி எனப்படும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ள அமைதியான கிராமம் பாடகச்சேரி. இதற்கு மேற்கில் பட்டம் என்னும் ஒரு குக்கிராமம் உள்ளது. இங்கே தான் முதன் முதலில் வந்து தங்கினாராம் பாடகச் சேரி சுவாமிகள். அங்கிருந்த ஒரு மடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருப்பாராம்.
"சாமி வெளியூருக்குப் போயிட்டு வந்தா நிறைய பழங்களும் தின்பண்டங்களும் கொண்டு வருவார். எங்களை வரிசையாக அமரச் சொல்லி எல்லாருக்கும் கொடுப்பார்' என்கிறார்கள்- அன்று சிறுவர்களாக இருந்த இன்றைய முதியோர்கள்.
பாடகச்சேரியில் பால தண்டாயுதபாணி ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தார் சுவாமிகள். அப்போது அங்கு வந்த ஆதப்ப செட்டியாரின் தொழுநோயை சுவாமிகள் குணப்படுத்தியிருக்கிறார். அதன் நினைவாக அவர் பாடகச்சேரி கிராமத்தின் மேற்கு எல்லையில் சுவாமிகளுக்கு ஒரு மடம் கட்டித் தந்தார். சுவாமிகள் அங்கே தங்கியிருந்து அன்னதானம் செய்திருக்கிறார்.
கோவிலையும் மடத்தையும் பராமரிப்பதற்காக பிடியரிசித் திட்டத்தை கிராம மக்களிடம் செயல்படுத்தியிருக்கிறார். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும்முன் ஒரு பிடி அரிசியை தர்மத்திற்கென்று எடுத்து வைப்பது. இதை குடந்தையிலும் செயல்படுத்தியிருக்கிறார்.
பாடகச்சேரி சுவாமிகள் தன் கழுத்தில் கயிறு கட்டி உண்டியலைத் தொங்கவிட்டு, ஊரெங்கும் சென்று பணம் வசூலித்து, பல ஆலயங்களுக்கும் திருப்பணி செய்துள்ளார். அதில் கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அக்கோவிலின் ராஜகோபுரத்தில் சுவாமிகளின் சுதைச் சிற்பத்தைக் காணலாம். கோவிலுக்குள் சிங்க கிணற்றுக்கு அருகில் சுவாமிகளுக்கு ஒரு சந்நிதியும் அமைத்துள்ளனர். அதுபோல புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் திருப்பணிக்கும் உதவியுள்ளார். அந்த ஆலயத்திலும் இவரது திருவுருவத்தைக் காணலாம். மேலும் கர்நாடக மாநில அன்பர்களின் வேண்டு கோளின்படி அங்கே சென்று ஒரு சிவன் கோவிலும் அமைத்துள்ளார்.
அன்னதானமும் பைரவ பூஜையும் அங்கே நடத்தியிருக்கிறார். பைரவ பூஜையென்றால், ஆலயத்திலுள்ள பைரவர் பூஜையல்ல. நடமாடும் பைரவர்களை (நாய்களை) அங்கே வரவழைத்து, மனிதர்களுக்கு அளிப்பது போல வடை, பாயசத்துடன் விருந்து வைப்பாராம். அப்படி வரும் ஏராளமான நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிடாமல் வரிசை யாக அமர்ந்து கொள்ளுமாம். சுவாமிகள் சொல்லும்போதுதான் சாப்பிடுமாம். இந்த விருந்தை சேலம் ஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகளும் வியந்து பாராட்டியுள்ளார்.
என்னை நம்பியிருப்பவர்களுக்கு என்றும் நான் துணையாக உடனிருப்பேன். நம்பாதவர்களுக்கும் என்மீது நம்பிக்கை வரும் பொருட்டு தொடர்ந்து உதவிகள் செய்து வருவேன்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாராம் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள். தன்னை நம்பிய பக்தனை பாம்பு கடித்தபோது, ஒன்றும் ஆகாமல் இருக்க, மறுநாள் பைரவ சித்தருக்கு கால் வீங்கியிருந்தது. காரணம் கேட்டபோது, “ஒன்றுமில்லை. என் பக்தனின் பாம்புக் கடியை நான் வாங்கிக்கொண்டேன். குடும்பஸ்தன் பாவம் அவன் தாங்கமாட்டான்” என்றாராம்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் சீடரான இந்த பைரவ சித்தர், இறுதியாக சென்னை, திருவொற்றியூருக்கு வந்து, 1949-ஆம் ஆண்டு, ஆடிப்பூரம், வெள்ளிக்கிழமை அன்று தியாகேசரின் பொற்பாதங்களில் ஜோதி வடிவாகக் கலந்தார். பட்டினத்தாரைப் போல இவருக்கும் திருவொற்றியூரில் ஜீவசமாதி அடைந்தவர்.
பட்டினத்தார் கோயில் தெருவிலேயே அமைந்துள்ளது பைரவ சித்தர் ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் மடம். மடத்தின் வளாகத்தினுள்ளேதான் அவரின் ஜீவ சமாதியிருக்கிறது.. ஜீவ சமாதியின் மேல்தான் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது
“மனத்தினில் ஏதேனும் ஒரு நியாயமான கோரிக்கையை வைத்து, ஒவ்வொரு வியாழன் மாலையும் விளக்கேற்றி சுற்றி வந்தால், சித்தர் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றிவிடுவார்.
பாடகச்சேரியில் இன்றும் பௌர்ணமி நாட்களில் ஒன்பது நாய்களுக்கு விருந்தளிக்கும் தொண்டு நடைபெற்று வருகிறது. இப்படி நாய்களுக்கு விருந்தளிப்பதால் பூர்வ ஜென்ம தீவினைகளிலிருந்து விடுபடலாம் என்பது சுவாமிகளின் சித்தம்.
சுவாமிகள் வள்ளலாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி வடலுர் சென்று வழிபட்டு வருவார். அருட்பாவை யாராவது தவறாகப் பாடினால் உடனே திருத்துவாராம். ஆண்களை "அண்ணா' என்றும்; பெண்களை "தாயே' என்றும் அழைப்பாராம். "ஆபத்சகாயம்' என்று சொல்லி திருநீறு கொடுத்தே பலரின் நோய்களைத் தீர்த்திருக்கிறார். "பா. இராமலிங் கம்' என்று கையெழுத்திடுவாராம்.
குரு பூஜை:9-8-13 friday....at thiruvottiyour padagachery swamy samaathi temple[chennai]& kumbakonam padagacherry village padagachery swamy birth temple[near valangaiman]