Post by jksivan on Dec 17, 2013 7:12:51 GMT 5.5
மார்கழி 7ம் நாள்
தான் ஒரு தரம் கீழ்க்கண்ட பாசுரத்தைத் தன் கையால் எழுதிப்படித்தார் விஷ்ணு சித்தர். பலமுறை படித்தார். கோதை எழுதிய ஓலைச்சுவடியை கண்களில் ஒற்றிக்கொண்டார். ரங்கா ரங்கா... என்று வாய் முணுமுணுத்தது.
""கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.
கண்களை மூடிக்கொண்டு இந்த பாவைப்பாடலில் வரும் காட்சியை ஆயர்பாடியில் மனக்கண்ணால் கண்டு களித்தார் அந்த மகான்.
+++
பொழுது விடிந்து விட்டதே. ஆண்டாள் தான் வேக வேகமாக வருகிறாள். தோழிகளைத் தேடுகிறாள்.
''அதுக்குள்ள, இன்னியோடு மார்கழி 7 நாள் ஆயிட்டுதே!! இன்னிக்கும் நாம போய் கதவை தட்டினால் தான் இந்த பெண்கள் எழுந்திருப்பாளோ !
சரி''
வீடு வீடாக ஏறி கதவைத் தட்டுகிறாள்.
"ஏய்! எழுந்து வாங்கோடி சீக்ரம். மரத்திலே எல்லா பட்சிகளின் கானம்,வண்டுகளின் கீச் கீச் சத்தம், எல்லா வீட்லேயும் கை வளை குலுங்க சர் சர் னு கயிற்றை மத்துல கட்டி தயிர் கடையற சத்தமோ எதுவுமே உங்கள் காதிலே விழவில்லையா? வாங்கடி அழகிகளா, வழக்கம் போல நாராயணன் பெருமை பாடுவோம், எழுந்திருங்கோ, கதவை திறங்கோ சீக்ரம் “
நோன்புக்கு ஆள் சேர்க்கிறாள்.
++++
''கோதை கோதை'' பெரியாழ்வாரின் குரல் கோதைக்குக் கேட்கவில்லை. அவள் கண்ணை மூடி ரங்கனின் சிலை முன்னே அமர்ந்திருக்கிறாள். அவள் தான் ஆயர்பாடியில் வீடு வீடாக போய் கதவைத் தட்டுகிறாளே !.
அமைதிநிலவும் அந்த விடியற்போதிலே விஷ்ணு சித்தர் வெளியே நின்று கைகட்டி யோசிக்கிறார் . பாசுரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று அலசுகிறார்.
+++
''கிருஷ்ணனை துதிக்க எல்லாப் பெண்களையும் எழுப்புகிறாள் ஆண்டாள்.
''எதுக்குடி இவ்வளவு சீக்ரம் எழுப்பறே. ஒரு பெண் புலம்புகிறாள்.'' ஏய் எழுந்திருடி, வெளிச்சமே வந்துட்டுது. வலியன் குருவி கீச் கீச் என்று கத்தறதே கேக்கலையா உனக்கு. ஆகாரம் தேட கிளம்பிட்டுதே. பகவானைக்காட்டிலும் பாகவதாள் தான் ஒசத்தி. ஆய்ச்சியர் தயிர் கடைய ஆரம்பிச்சாச்சு. கை வலை, மத்து சத்தம், கழுத்தி மணி மாலைகள் அசையற சத்தம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து வினோதமா கேட்கலையா உனக்கு. வெண்ணை வாசனை மூக்கை துளைக்கலையா. இவ்வளவு பாலும் வெண்ணையும் எப்படி தெரியுமா. அந்த மாயக்கண்ணன் ஆயர்பாடி வந்ததிலிருந்து பசுக்களுக்கு கொண்டாட்டம். நிறைய தருது. சரி ஒரு விஷயம் சொல்றேன். கேளு. கேசின்னு ஒரு ராக்ஷசன் குதிரையா வந்து நம்ம கிருஷ்ணனை கொல்ல வந்தானாம். அவனையே கொன்னுட்டான் நம்ம கிருஷ்ணன். அப்படியா என்று குதித்து எழுந்தாள் அந்தப்பெண்.
''அப்பறம்?''
'' எழுந்து யமுனைக்கு வா. மீதியை அங்கு சொல்றேன்.
''
தான் ஒரு தரம் கீழ்க்கண்ட பாசுரத்தைத் தன் கையால் எழுதிப்படித்தார் விஷ்ணு சித்தர். பலமுறை படித்தார். கோதை எழுதிய ஓலைச்சுவடியை கண்களில் ஒற்றிக்கொண்டார். ரங்கா ரங்கா... என்று வாய் முணுமுணுத்தது.
""கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.
கண்களை மூடிக்கொண்டு இந்த பாவைப்பாடலில் வரும் காட்சியை ஆயர்பாடியில் மனக்கண்ணால் கண்டு களித்தார் அந்த மகான்.
+++
பொழுது விடிந்து விட்டதே. ஆண்டாள் தான் வேக வேகமாக வருகிறாள். தோழிகளைத் தேடுகிறாள்.
''அதுக்குள்ள, இன்னியோடு மார்கழி 7 நாள் ஆயிட்டுதே!! இன்னிக்கும் நாம போய் கதவை தட்டினால் தான் இந்த பெண்கள் எழுந்திருப்பாளோ !
சரி''
வீடு வீடாக ஏறி கதவைத் தட்டுகிறாள்.
"ஏய்! எழுந்து வாங்கோடி சீக்ரம். மரத்திலே எல்லா பட்சிகளின் கானம்,வண்டுகளின் கீச் கீச் சத்தம், எல்லா வீட்லேயும் கை வளை குலுங்க சர் சர் னு கயிற்றை மத்துல கட்டி தயிர் கடையற சத்தமோ எதுவுமே உங்கள் காதிலே விழவில்லையா? வாங்கடி அழகிகளா, வழக்கம் போல நாராயணன் பெருமை பாடுவோம், எழுந்திருங்கோ, கதவை திறங்கோ சீக்ரம் “
நோன்புக்கு ஆள் சேர்க்கிறாள்.
++++
''கோதை கோதை'' பெரியாழ்வாரின் குரல் கோதைக்குக் கேட்கவில்லை. அவள் கண்ணை மூடி ரங்கனின் சிலை முன்னே அமர்ந்திருக்கிறாள். அவள் தான் ஆயர்பாடியில் வீடு வீடாக போய் கதவைத் தட்டுகிறாளே !.
அமைதிநிலவும் அந்த விடியற்போதிலே விஷ்ணு சித்தர் வெளியே நின்று கைகட்டி யோசிக்கிறார் . பாசுரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று அலசுகிறார்.
+++
''கிருஷ்ணனை துதிக்க எல்லாப் பெண்களையும் எழுப்புகிறாள் ஆண்டாள்.
''எதுக்குடி இவ்வளவு சீக்ரம் எழுப்பறே. ஒரு பெண் புலம்புகிறாள்.'' ஏய் எழுந்திருடி, வெளிச்சமே வந்துட்டுது. வலியன் குருவி கீச் கீச் என்று கத்தறதே கேக்கலையா உனக்கு. ஆகாரம் தேட கிளம்பிட்டுதே. பகவானைக்காட்டிலும் பாகவதாள் தான் ஒசத்தி. ஆய்ச்சியர் தயிர் கடைய ஆரம்பிச்சாச்சு. கை வலை, மத்து சத்தம், கழுத்தி மணி மாலைகள் அசையற சத்தம் எல்லாம் ஒண்ணா சேர்ந்து வினோதமா கேட்கலையா உனக்கு. வெண்ணை வாசனை மூக்கை துளைக்கலையா. இவ்வளவு பாலும் வெண்ணையும் எப்படி தெரியுமா. அந்த மாயக்கண்ணன் ஆயர்பாடி வந்ததிலிருந்து பசுக்களுக்கு கொண்டாட்டம். நிறைய தருது. சரி ஒரு விஷயம் சொல்றேன். கேளு. கேசின்னு ஒரு ராக்ஷசன் குதிரையா வந்து நம்ம கிருஷ்ணனை கொல்ல வந்தானாம். அவனையே கொன்னுட்டான் நம்ம கிருஷ்ணன். அப்படியா என்று குதித்து எழுந்தாள் அந்தப்பெண்.
''அப்பறம்?''
'' எழுந்து யமுனைக்கு வா. மீதியை அங்கு சொல்றேன்.
''