|
Post by Amritha Varshini on Aug 4, 2013 16:42:59 GMT 5.5
"பகவான் மாறுதல் இல்லாதவர். மாற்றத்துக்கும் உட்படாதவர். எனவே அவர் கூறியதை நாம் மாற்றக்கூடாது"
(இன்றைய தினமணி)
""ஒருவன் கார் ஓட்டிக் கொண்டிருக்கிறான். சாலையில்தான் ஓட்டவேண்டும். நடைபாதை அதைவிட அழகாக அமைந்திருக்கலாம். அதற்காக, காரை நடைபாதையில் ஓட்டக்கூடாது. நடப்பவர்கள் நடைபாதையில்தான் செல்லவேண்டும். அதைவிடச் சாலை அகலமாக இருக்கிறதே, தாராளமாக நடக்கலாமே என்று சாலையில் நடக்கக்கூடாது. சாலை என்பதும் நடைபாதை என்பதும் அரசாங்கம் அமைத்ததுதானே? அதில் இஷ்டப்படி செல்ல வரிகட்டும் எங்களுக்கு உரிமை இல்லையா? எனக் கேட்கக்கூடாது. விதியை மீறி நடந்தால் விபத்து; சரீர பாகம் இழப்பு; அல்லது உயிர் இழப்புதான் பலன்.
சட்டப் புத்தகத்தை யார் எழுதினார்கள் என்றோ சட்டத்தில் இருப்பது தெரியாது என்றோ சொன்னால் நீதிபதி, குற்றவாளியை மன்னித்து விட்டுவிடுவாரா? விடமாட்டார். அதேபோல, சட்டப் புத்தகத்தை எழுதியவரைத் தெரிந்து கொண்டிருந்தாலோ, பார்த்திருந்தாலோ தான் அதை ஒப்புக்கொள்வேன் என்றும் சொல்லமுடியுமா? சொல்லமுடியாது. சட்டத்தில் உள்ளபடிதான் நீதிபதியும் தீர்ப்பு வழங்குவார். அதே போலவே வேதங்களில் கூறப்பட்டுள்ள தர்ம, அதர்மங்களைக் கடைப்பிடிப்பதும் அதற்கேற்ப நடந்துகொள்வதும்.''
வேதங்கள் பகவானால் சொல்லப்பட்டவை. அவற்றில் நாம் செய்ய வேண்டும் என எவற்றைச் சொல்லுகிறதோ அவை அனைத்தும் தர்மம் ஆகும். பகவான் மாறுதல் இல்லாதவர். மாற்றத்துக்கும் உட்படாதவர். எனவே அவர் கூறியதை நாம் மாற்றக்கூடாது. அவை மாறுதலுக்கு உட்பட்டதும் இல்லை. வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் சில விதிகள் கூறப்பட்டுள்ளன. உலக இயல்புக்குப் பொருந்தாதது எதுவும் அதில் கூறப்படவில்லை...''
("ஆன்மாவும் ஆன்மிகமும்' என்ற நூலில் எழுத்தாளர்
ஜனகன். சிருங்கேரி மடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்தகாரிய மகா சுவாமிகள் அருளியது மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.)
|
|