Post by Amritha Varshini on Aug 3, 2013 10:35:34 GMT 5.5
"ஞானியும் யோகியும்"
இது பகவான் ரமணர் சொன்ன குட்டிகதை. ( சிவப்ரகாச சுவாமிகள் எழுதிய "பிரபுலிங்க லீலா" விலிருந்து)
கர்நாடகாவில் லிங்கயத்களின் குருவான பிரபுலிங்கா ஆன்மீக பிரசாரத்தில் ஈடுபட்டு கோகர்ணம் சென்றபோது அங்கு கோரக்நாத் என்ற ஒரு யோகியை சந்தித்தார்.
கோரக்நாத் தன்னுடைய யோக சக்தியால் அகிலத்தையே ஆட்டி படைக்க முடியும் என்று நம்புபவர். பிரபுலிங்கா தனக்கு சமமானவரா என்ற சம்சயமும் உண்டு. நேரில் பார்த்ததில்லை. எனவே அவரை சந்தித்தபோது "தாங்கள் யார்?" என்று பிரபுலிங்காவை கேட்டார்.
"எவனொருவன் உடல் நினைவின்றி தனது ஆன்மாவே தான் என்ற நினைப்பில் திளைக்கிறானோ, அவன் எவ்வாறு உடலே தான் என்ற உணர்வு உள்ளவனுக்கு தன்னை அறிமுகபடுத்திகொள்ள முடியும்? என்றார் பிரபுலிங்கா.
கோரக்நாத் சிரித்தார். "நான் சிவபக்தன் இந்த உடல் அழியாதது. சிவனருளால் காயகல்பம் உண்ணும் என் உடல் அழிவற்றது" என்றார். ஒருபடி மேலே போய் " இதோ என் உடலை அழித்து பாருங்கள்" என்று சொல்லி ஒரு கூரான கத்தியையும் அருகில் இருந்த ஒரு ஆசாமியிடம் கொடுத்தார்.
"பயப்படாதே எனக்கு ஒன்றும் ஆகாது. என் மீது இந்த கத்தியை செருகு " என்றார் கோரக்நாத்.
என்ன ஆச்சர்யம். கத்தி கோரக்நாத் உடலில் பட்டு மழுங்கியதே தவிர உள்ளே செருக முடியவில்லை. கோரக்நாத் வெற்றி புன்னகையுடன் பிரபு லிங்காவை பார்த்தார்.
அவர் அமைதியாக “என் உடலிலும் இந்த கத்தியை செருகுங்களேன்” என்றார். அந்த ஆசாமி பிரபுலிங்காவின் உடலில் கத்தியை பாய்ச்சினான். பிரபுலிங்காவின் உடலில் நுழைந்த கத்தி மறுபக்கம் வெளிவந்தது. ஏதோ காற்றில் நுழைவது போல் தோன்றியதே தவிர பிரபுலிங்காவின் உடலில் எந்த மாறுதலும் இல்லை. கோரக்நாத் நெடும்சாண் கிடையாக பிரபுலிங்காவின் பாதத்தில் விழுந்து "என்னை மன்னித்து அருளவேண்டும் என்றார்.
பிரபுலிங்கா அமைதியாக " உடல் நீயல்ல. உன் உள்ளே இருக்கும் ஆன்மா தான் நீ. அவனை உணர்ந்தால் பிறப்பு இறப்பு கிடையாது. மனம் ஒரு குகை அதில் வாசம் புரியும் இறைவனும் நீயே என உணர்வாய். " என்றார்.
கோரக்நாத் அடியோடு மாறி அழியா புகழ் பெற்றார் என்பது சரித்திரம்
இது பகவான் ரமணர் சொன்ன குட்டிகதை. ( சிவப்ரகாச சுவாமிகள் எழுதிய "பிரபுலிங்க லீலா" விலிருந்து)
கர்நாடகாவில் லிங்கயத்களின் குருவான பிரபுலிங்கா ஆன்மீக பிரசாரத்தில் ஈடுபட்டு கோகர்ணம் சென்றபோது அங்கு கோரக்நாத் என்ற ஒரு யோகியை சந்தித்தார்.
கோரக்நாத் தன்னுடைய யோக சக்தியால் அகிலத்தையே ஆட்டி படைக்க முடியும் என்று நம்புபவர். பிரபுலிங்கா தனக்கு சமமானவரா என்ற சம்சயமும் உண்டு. நேரில் பார்த்ததில்லை. எனவே அவரை சந்தித்தபோது "தாங்கள் யார்?" என்று பிரபுலிங்காவை கேட்டார்.
"எவனொருவன் உடல் நினைவின்றி தனது ஆன்மாவே தான் என்ற நினைப்பில் திளைக்கிறானோ, அவன் எவ்வாறு உடலே தான் என்ற உணர்வு உள்ளவனுக்கு தன்னை அறிமுகபடுத்திகொள்ள முடியும்? என்றார் பிரபுலிங்கா.
கோரக்நாத் சிரித்தார். "நான் சிவபக்தன் இந்த உடல் அழியாதது. சிவனருளால் காயகல்பம் உண்ணும் என் உடல் அழிவற்றது" என்றார். ஒருபடி மேலே போய் " இதோ என் உடலை அழித்து பாருங்கள்" என்று சொல்லி ஒரு கூரான கத்தியையும் அருகில் இருந்த ஒரு ஆசாமியிடம் கொடுத்தார்.
"பயப்படாதே எனக்கு ஒன்றும் ஆகாது. என் மீது இந்த கத்தியை செருகு " என்றார் கோரக்நாத்.
என்ன ஆச்சர்யம். கத்தி கோரக்நாத் உடலில் பட்டு மழுங்கியதே தவிர உள்ளே செருக முடியவில்லை. கோரக்நாத் வெற்றி புன்னகையுடன் பிரபு லிங்காவை பார்த்தார்.
அவர் அமைதியாக “என் உடலிலும் இந்த கத்தியை செருகுங்களேன்” என்றார். அந்த ஆசாமி பிரபுலிங்காவின் உடலில் கத்தியை பாய்ச்சினான். பிரபுலிங்காவின் உடலில் நுழைந்த கத்தி மறுபக்கம் வெளிவந்தது. ஏதோ காற்றில் நுழைவது போல் தோன்றியதே தவிர பிரபுலிங்காவின் உடலில் எந்த மாறுதலும் இல்லை. கோரக்நாத் நெடும்சாண் கிடையாக பிரபுலிங்காவின் பாதத்தில் விழுந்து "என்னை மன்னித்து அருளவேண்டும் என்றார்.
பிரபுலிங்கா அமைதியாக " உடல் நீயல்ல. உன் உள்ளே இருக்கும் ஆன்மா தான் நீ. அவனை உணர்ந்தால் பிறப்பு இறப்பு கிடையாது. மனம் ஒரு குகை அதில் வாசம் புரியும் இறைவனும் நீயே என உணர்வாய். " என்றார்.
கோரக்நாத் அடியோடு மாறி அழியா புகழ் பெற்றார் என்பது சரித்திரம்