Post by Amritha Varshini on Nov 1, 2023 5:22:35 GMT 5.5
“தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல்
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர்”
என்று பெரியாழ்வார் பாடுகிறார்.
இதன் கருத்து யாதெனில், ஒரு ஜீவாத்மா பற்பல தவறுகள் செய்துவிட்டு, பின்னொரு சமயம் மனம் திருந்தித் திருமகளின் திருவடிகளைப் பற்றி அவளது பரிந்துரை யோடு திருமாலிடம் சரண் அடைகிறான்.
திருமகளின் பரிந்துரையை ஏற்ற திருமால், அவனை ஏற்றுக்கொள்வதாகச் சம்மதித்து விடுகிறார்.திருமால் சம்மதித்த பின் திருமகள்,“சுவாமி! இவன் இதுவரை செய்த பாபங்களை எல்லாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்தீர்களா? பலப்பலப் பொய்கள் பேசி இருக்கிறான். பிறருக்கு எந்த உதவியும் இவன் செய்ததில்லை. மனதில் ஈரமோ இரக்கமோ இல்லாதவனாக இருந்திருக்கிறான். இவனுக்குப் போய் அருள்புரியப் போகிறீர்களா? உங்கள் முடிவைச் சற்றே மறுபரிசீலனை செய்யுங் களேன்!” என்று சொல்கிறாளாம்.
இப்படி மகாலட்சுமி சொன்னவாறே, திருமால், “இல்லை தேவி! அவன் எனது பக்தன் என்று அபிமானித்து விட்டேன்! அங்கீகரித்து விட்டேன்! என் பக்தன் அப்படிப்பட்ட தவறை ஒருநாளும் செய்ய மாட்டான்” என்று பதில் சொல்வாராம்.
அவன் குற்றம் செய்தமைக்கான ஆதாரத்தைத் திருமகள் எடுத்துக் காட்டினாலும், “அப்படி என் பக்தன் செய்திருக்கிறான் என்றால் அவன் நன்றாகத் தான் செய்திருக்கிறான், நல்ல செயல்தான் செய்திருக்கிறான் என்று பொருள்! எனவே, நான் அவனைக் காப்பாற்றியே தீருவேன்!” என்று பதில் சொல்வாராம்.
தான் பரிந்துரைத்துத் திருமால் திருவடிகளில் சேர்ந்த்த பக்தன் மீது திருமகளே ஏன் பழிசொல்ல வேண்டும்? ஏனெனில், நாம் ஒரு குச்சியைப் பூமியில் நட்டால் அதை ஆட்டிப் பார்ப்போம். அது குச்சியை வெளியே எடுப்பதற்காக அன்று. குச்சி நன்றாக ஊன்றி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தானே?
அதுபோலத்தான், மகாலட்சுமி பக்தனுக்காகத் திருமாலிடம் பரிந்துரை செய்து விட்டு அந்த பக்தனைக் காப்பதில் அவருக்கு எவ்வளவு தூரம் உறுதி இருக்கிறது என்பதைப் பரிசோதித்துப் பார்க்கவே அவரிடம் அப்பக்தனைப் பற்றிச் சில குறைகளைச் சொல்லிப் பார்க்கிறாள்.
“என் அடியார் அது செய்யார்!” என்றோ “என்னடியார் அது செய்யார்?” என்றோ திருமால் உறுதியாகப் பதில் சொன்னால், “நாம் செய்த பரிந்துரை பலித்துவிட்டது! இந்த பக்தனை இவர் நிச்சயம் காத்து விடுவார்!” என்ற நம்பிக்கையைப் பெற்று மகாலட்சுமி மகிழ்கிறாள் என்பதுதான் இதில் உள்ள நுட்பம்.
இதே கருத்தை ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான், தமது வரதராஜ ஸ்தவம் என்ற துதியில், காஞ்சிபுரம் அத்திகிரி வரதராஜப் பெருமாளைப் பார்த்து,
“அனன்யாதீனத்வம் தவ கில ஜகௌ வைதிக கிர:
பராதீனம் த்வாம் து ப்ரணதபரதந்த்ரம் மனுமஹே
உபாலம்போ யம் போ ச்ரயதி பத ஸார்வஜ்ஞம் அபி தே
யதோ தோஷம் பக்தேஷு இஹ வரத நைவாகலயஸி”
“வரதராஜா! நீ யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரமானவன்என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், நீயோ பக்தர்களுக்குக் கட்டுப்படுபவனாக இருக்கிறாய். நீ எல்லாம் அறிந்தவன் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், உனக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. உன் பக்தர்கள் செய்யும் தோஷங்கள் மட்டும் உன் கண்களுக்கு தெரிவதில்லை. அதாவது, அவற்றை நீ கண்டாலும், பக்தர்கள் மீதுள்ள அன்பால் கண்டு கொள்ளாமல் அவர்களை மன்னித்து விடுகிறாய்!” என்று தெரிவிக்கிறார்.
இப்படித் தன் அடியார்கள் செய்யும் குற்றங்களின் விஷயத்தில் அதை அறியாதவர் போல் இருந்து அவர்களை மன்னித்து விடுவதால், திருமால் அவிக்ஞாதா என்று அழைக்கப்படுகிறார். ‘அவிக்ஞாதா’ என்றால் அறியாதவர் - அடியார்கள் செய்யும் குற்றங்களை அறியாதவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 483-வது திரு நாமம். விளக்கவுரை வழங்கிய ஸ்ரீபராசர பட்டர், ‘ப்ரபன்ன க்ருத பாபானாம் கிஞ்சிதபி அவிசாரணாத் அவிக்ஞாதா’ என்று விளக்கியுள்ளார். சரணாகதர்கள் செய்த பிழை களைக் கொஞ்சமும் அறியாதவர் போல் இருப்பவர் என்பது இதன் பொருளாகும்.
“அவிக்ஞாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பிழைகளைத் திருமால் நிச்சயம் பொறுத்தருள்வார்.
ஓம் நமோ நாராயணாய..
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...
என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர்”
என்று பெரியாழ்வார் பாடுகிறார்.
இதன் கருத்து யாதெனில், ஒரு ஜீவாத்மா பற்பல தவறுகள் செய்துவிட்டு, பின்னொரு சமயம் மனம் திருந்தித் திருமகளின் திருவடிகளைப் பற்றி அவளது பரிந்துரை யோடு திருமாலிடம் சரண் அடைகிறான்.
திருமகளின் பரிந்துரையை ஏற்ற திருமால், அவனை ஏற்றுக்கொள்வதாகச் சம்மதித்து விடுகிறார்.திருமால் சம்மதித்த பின் திருமகள்,“சுவாமி! இவன் இதுவரை செய்த பாபங்களை எல்லாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்தீர்களா? பலப்பலப் பொய்கள் பேசி இருக்கிறான். பிறருக்கு எந்த உதவியும் இவன் செய்ததில்லை. மனதில் ஈரமோ இரக்கமோ இல்லாதவனாக இருந்திருக்கிறான். இவனுக்குப் போய் அருள்புரியப் போகிறீர்களா? உங்கள் முடிவைச் சற்றே மறுபரிசீலனை செய்யுங் களேன்!” என்று சொல்கிறாளாம்.
இப்படி மகாலட்சுமி சொன்னவாறே, திருமால், “இல்லை தேவி! அவன் எனது பக்தன் என்று அபிமானித்து விட்டேன்! அங்கீகரித்து விட்டேன்! என் பக்தன் அப்படிப்பட்ட தவறை ஒருநாளும் செய்ய மாட்டான்” என்று பதில் சொல்வாராம்.
அவன் குற்றம் செய்தமைக்கான ஆதாரத்தைத் திருமகள் எடுத்துக் காட்டினாலும், “அப்படி என் பக்தன் செய்திருக்கிறான் என்றால் அவன் நன்றாகத் தான் செய்திருக்கிறான், நல்ல செயல்தான் செய்திருக்கிறான் என்று பொருள்! எனவே, நான் அவனைக் காப்பாற்றியே தீருவேன்!” என்று பதில் சொல்வாராம்.
தான் பரிந்துரைத்துத் திருமால் திருவடிகளில் சேர்ந்த்த பக்தன் மீது திருமகளே ஏன் பழிசொல்ல வேண்டும்? ஏனெனில், நாம் ஒரு குச்சியைப் பூமியில் நட்டால் அதை ஆட்டிப் பார்ப்போம். அது குச்சியை வெளியே எடுப்பதற்காக அன்று. குச்சி நன்றாக ஊன்றி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தானே?
அதுபோலத்தான், மகாலட்சுமி பக்தனுக்காகத் திருமாலிடம் பரிந்துரை செய்து விட்டு அந்த பக்தனைக் காப்பதில் அவருக்கு எவ்வளவு தூரம் உறுதி இருக்கிறது என்பதைப் பரிசோதித்துப் பார்க்கவே அவரிடம் அப்பக்தனைப் பற்றிச் சில குறைகளைச் சொல்லிப் பார்க்கிறாள்.
“என் அடியார் அது செய்யார்!” என்றோ “என்னடியார் அது செய்யார்?” என்றோ திருமால் உறுதியாகப் பதில் சொன்னால், “நாம் செய்த பரிந்துரை பலித்துவிட்டது! இந்த பக்தனை இவர் நிச்சயம் காத்து விடுவார்!” என்ற நம்பிக்கையைப் பெற்று மகாலட்சுமி மகிழ்கிறாள் என்பதுதான் இதில் உள்ள நுட்பம்.
இதே கருத்தை ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான், தமது வரதராஜ ஸ்தவம் என்ற துதியில், காஞ்சிபுரம் அத்திகிரி வரதராஜப் பெருமாளைப் பார்த்து,
“அனன்யாதீனத்வம் தவ கில ஜகௌ வைதிக கிர:
பராதீனம் த்வாம் து ப்ரணதபரதந்த்ரம் மனுமஹே
உபாலம்போ யம் போ ச்ரயதி பத ஸார்வஜ்ஞம் அபி தே
யதோ தோஷம் பக்தேஷு இஹ வரத நைவாகலயஸி”
“வரதராஜா! நீ யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரமானவன்என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், நீயோ பக்தர்களுக்குக் கட்டுப்படுபவனாக இருக்கிறாய். நீ எல்லாம் அறிந்தவன் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், உனக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. உன் பக்தர்கள் செய்யும் தோஷங்கள் மட்டும் உன் கண்களுக்கு தெரிவதில்லை. அதாவது, அவற்றை நீ கண்டாலும், பக்தர்கள் மீதுள்ள அன்பால் கண்டு கொள்ளாமல் அவர்களை மன்னித்து விடுகிறாய்!” என்று தெரிவிக்கிறார்.
இப்படித் தன் அடியார்கள் செய்யும் குற்றங்களின் விஷயத்தில் அதை அறியாதவர் போல் இருந்து அவர்களை மன்னித்து விடுவதால், திருமால் அவிக்ஞாதா என்று அழைக்கப்படுகிறார். ‘அவிக்ஞாதா’ என்றால் அறியாதவர் - அடியார்கள் செய்யும் குற்றங்களை அறியாதவர் என்று பொருள்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 483-வது திரு நாமம். விளக்கவுரை வழங்கிய ஸ்ரீபராசர பட்டர், ‘ப்ரபன்ன க்ருத பாபானாம் கிஞ்சிதபி அவிசாரணாத் அவிக்ஞாதா’ என்று விளக்கியுள்ளார். சரணாகதர்கள் செய்த பிழை களைக் கொஞ்சமும் அறியாதவர் போல் இருப்பவர் என்பது இதன் பொருளாகும்.
“அவிக்ஞாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பிழைகளைத் திருமால் நிச்சயம் பொறுத்தருள்வார்.
ஓம் நமோ நாராயணாய..
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...