Post by Amritha Varshini on Oct 8, 2023 5:32:08 GMT 5.5
🌹🌺 நம்முடைய தாய் – தந்தையிடம்
தோற்றுப் போவதில் தப்பே
இல்லை என்பதை எவ்வளவு
சூசகமாக , அழகாக , தெளிவாகச்
சொல்லியிருக்கிறான்
ஸ்ரீகண்ணபிரான் ...... ** 🌹🌺
🌹🌺‘வெற்றி அடைவது,
தோல்வி பெறுவது…
இந்த இரண்டில் எது
பிடிக்கும் உங்களுக்கு?’
என்று எவரேனும்
உங்களிடம் கேட்டால்,
நீங்கள் என்ன பதில்
சொல்வீர்கள்?
🌺‘என்ன இது, பைத்தியக்காரத்
தனமான கேள்வியா
இருக்கே?
ஜெயிக்கறதுதான் சுகம்;
அதுதான் கம்பீரம்.
யாராவது தோத்துப்
போறதுக்கு ஆசைப்
படுவாங்களா?’
என்பீர்கள்.
🌺நீங்கள் மட்டுமல்ல…
இந்த உலகில்
உள்ள சகல மனிதர்களும்
வெற்றி பெறுவதற்குத்தான்
ஆசைப்படுவார்கள். அந்த
வெற்றியில் அகம் மகிழ்ந்து
போவார்கள்; நெஞ்சு
நிமிர்த்திக் கொள்வார்கள்.
அதேநேரம், தோல்வி
வந்துவிட்டால், துவண்டு
கதறுவார்கள்; கண்ணீர்
விட்டுப் புலம்புவார்கள்.
🌺வெற்றியும் தோல்வியும்
மாறி மாறி வருவதுதான்
வாழ்க்கை. அதே நேரத்தில்,
நாம் யாரிடம் வெற்றி
பெற வேண்டும், எவரிடம்
தோல்வியைத் தழுவ
வேண்டும் என்று மறை
முகமாக நமக்கு
அருளியிருக்கிறார்
பகவான்.
🌺பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத்
தாமோதரன் எனும் திருநாமம்
உண்டு. தாம்புக் கயிற்றால்
ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில்
கட்டியதையைத்தான் நாம்
அறிவோமே!
இந்த உலகையே கட்டியாள்கிற
கிருஷ்ண பரமாத்மா, ஒரு
சிறிய தாம்புக் கயிற்றுக்குக்
கட்டுண்டு கிடந்தான்.
🌺கயிற்றை எடுத்து அவனது
இடுப்பில் சுற்றிக் கட்டலாம்
என்றால், லேசாகப் பெருத்தான்
கண்ணபிரான். கயிற்று
முனைகளைக் கட்டுவதற்கு
இரண்டு அங்குல இடைவெளி
இருந்தது.
🌺இன்னொரு
கயிற்றைச் சேர்த்து,
முடிச்சுப் போட்டுக் கட்ட
முனைந்தார்கள். இன்னும்
சற்றுப் பெருத்தான்.
இப்போதும் இரண்டு
அங்குல இடைவெளி இருந்தது.
இன்னொரு கயிறு, இன்னொரு
இரண்டு அங்குல பருமன்…
என்றே இந்த விளையாட்டு
நிகழ்ந்து கொண்டிருக்க…
அவன் அம்மா சோர்ந்து
போனாள்.
🌺ஆனால், கண்ணன்
களைப்படையவில்லை.
அந்தத் தருணத்தில்தான்
பகவான் யோசித்தான்.
”அடேடே..! இப்போது நாம்
யாரிடம் நம் வீரத்தைக்
காட்டிக் கொண்டிருக்கிறோம்?
இதோ… தோல்வியைக்
கண்டு அம்மா
துவண்டுவிட்டாளே!
பாவம் அவள்’
என்று எண்ணியவன்,
🌺‘இந்த என்னுடைய திமிர்த்
தனத்தை உன்னிடம்
காட்டியது தவறுதான்
தாயே! இந்தாம்மா… என்னைக்
கயிற்றில் கட்டிக்கொள்’
என்பதுபோல், பருமனைக்
குறைத்துக் கொண்டு
நின்றான். உடனே, குறும்புக்
கண்ணனைக் கயிற்றில்
கட்டிப்போட்டாள் தாய்.
🌺நம்முடைய தாய் – தந்தையிடம்
தோற்றுப் போவதில் தப்பே
இல்லை என்பதை எவ்வளவு
சூசகமாக, அழகாக, தெளிவாகச்
சொல்லியிருக்கிறான்
ஸ்ரீகண்ணபிரான்.
🌺பகவான், கயிற்றுக்கெல்லாம்
கட்டுப்படாதவர். பிறகு..?
அவர் அன்புக்கும் பாசத்துக்கும்
கட்டுப்படுபவர். காதலுக்கும்
பிரேமைக்கும் கட்டுண்டு
கிடப்பவர்.
🌺இதனை, ‘கண்ணிநுண் சிறுத்தாம்புடன்
கட்டுண்டப் பண்ணிய பெரு
மாயன்…’ எனும் அழகிய பாடல்
அற்புதமாக விளக்குகிறது.
🌺ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பிலே
அந்தக் கயிற்றுத் தழும்பைக்
காணலாம். அது தழும்பு அல்ல;
பட்டம்.
🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க
🌷🌹🌺
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *🌹🌺
தோற்றுப் போவதில் தப்பே
இல்லை என்பதை எவ்வளவு
சூசகமாக , அழகாக , தெளிவாகச்
சொல்லியிருக்கிறான்
ஸ்ரீகண்ணபிரான் ...... ** 🌹🌺
🌹🌺‘வெற்றி அடைவது,
தோல்வி பெறுவது…
இந்த இரண்டில் எது
பிடிக்கும் உங்களுக்கு?’
என்று எவரேனும்
உங்களிடம் கேட்டால்,
நீங்கள் என்ன பதில்
சொல்வீர்கள்?
🌺‘என்ன இது, பைத்தியக்காரத்
தனமான கேள்வியா
இருக்கே?
ஜெயிக்கறதுதான் சுகம்;
அதுதான் கம்பீரம்.
யாராவது தோத்துப்
போறதுக்கு ஆசைப்
படுவாங்களா?’
என்பீர்கள்.
🌺நீங்கள் மட்டுமல்ல…
இந்த உலகில்
உள்ள சகல மனிதர்களும்
வெற்றி பெறுவதற்குத்தான்
ஆசைப்படுவார்கள். அந்த
வெற்றியில் அகம் மகிழ்ந்து
போவார்கள்; நெஞ்சு
நிமிர்த்திக் கொள்வார்கள்.
அதேநேரம், தோல்வி
வந்துவிட்டால், துவண்டு
கதறுவார்கள்; கண்ணீர்
விட்டுப் புலம்புவார்கள்.
🌺வெற்றியும் தோல்வியும்
மாறி மாறி வருவதுதான்
வாழ்க்கை. அதே நேரத்தில்,
நாம் யாரிடம் வெற்றி
பெற வேண்டும், எவரிடம்
தோல்வியைத் தழுவ
வேண்டும் என்று மறை
முகமாக நமக்கு
அருளியிருக்கிறார்
பகவான்.
🌺பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத்
தாமோதரன் எனும் திருநாமம்
உண்டு. தாம்புக் கயிற்றால்
ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில்
கட்டியதையைத்தான் நாம்
அறிவோமே!
இந்த உலகையே கட்டியாள்கிற
கிருஷ்ண பரமாத்மா, ஒரு
சிறிய தாம்புக் கயிற்றுக்குக்
கட்டுண்டு கிடந்தான்.
🌺கயிற்றை எடுத்து அவனது
இடுப்பில் சுற்றிக் கட்டலாம்
என்றால், லேசாகப் பெருத்தான்
கண்ணபிரான். கயிற்று
முனைகளைக் கட்டுவதற்கு
இரண்டு அங்குல இடைவெளி
இருந்தது.
🌺இன்னொரு
கயிற்றைச் சேர்த்து,
முடிச்சுப் போட்டுக் கட்ட
முனைந்தார்கள். இன்னும்
சற்றுப் பெருத்தான்.
இப்போதும் இரண்டு
அங்குல இடைவெளி இருந்தது.
இன்னொரு கயிறு, இன்னொரு
இரண்டு அங்குல பருமன்…
என்றே இந்த விளையாட்டு
நிகழ்ந்து கொண்டிருக்க…
அவன் அம்மா சோர்ந்து
போனாள்.
🌺ஆனால், கண்ணன்
களைப்படையவில்லை.
அந்தத் தருணத்தில்தான்
பகவான் யோசித்தான்.
”அடேடே..! இப்போது நாம்
யாரிடம் நம் வீரத்தைக்
காட்டிக் கொண்டிருக்கிறோம்?
இதோ… தோல்வியைக்
கண்டு அம்மா
துவண்டுவிட்டாளே!
பாவம் அவள்’
என்று எண்ணியவன்,
🌺‘இந்த என்னுடைய திமிர்த்
தனத்தை உன்னிடம்
காட்டியது தவறுதான்
தாயே! இந்தாம்மா… என்னைக்
கயிற்றில் கட்டிக்கொள்’
என்பதுபோல், பருமனைக்
குறைத்துக் கொண்டு
நின்றான். உடனே, குறும்புக்
கண்ணனைக் கயிற்றில்
கட்டிப்போட்டாள் தாய்.
🌺நம்முடைய தாய் – தந்தையிடம்
தோற்றுப் போவதில் தப்பே
இல்லை என்பதை எவ்வளவு
சூசகமாக, அழகாக, தெளிவாகச்
சொல்லியிருக்கிறான்
ஸ்ரீகண்ணபிரான்.
🌺பகவான், கயிற்றுக்கெல்லாம்
கட்டுப்படாதவர். பிறகு..?
அவர் அன்புக்கும் பாசத்துக்கும்
கட்டுப்படுபவர். காதலுக்கும்
பிரேமைக்கும் கட்டுண்டு
கிடப்பவர்.
🌺இதனை, ‘கண்ணிநுண் சிறுத்தாம்புடன்
கட்டுண்டப் பண்ணிய பெரு
மாயன்…’ எனும் அழகிய பாடல்
அற்புதமாக விளக்குகிறது.
🌺ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பிலே
அந்தக் கயிற்றுத் தழும்பைக்
காணலாம். அது தழும்பு அல்ல;
பட்டம்.
🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க
🌷🌹🌺
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *🌹🌺