|
Post by Amritha Varshini on Jan 18, 2019 6:21:53 GMT 5.5
ஸ்ரீமஹாஸ்வாமி தோடகாஷ்டகம் ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்ரீமஹாஸ்வாமி தோடகாஷ்டகம் (தமிழில்)
மறை யாவையும் போற்றிடும் சற்குருவே – அருட் சாத்திர போதமும் உணர்த்தியவா | இறை யாவையும் ஒன்றென போற்றியவா – சசி சேகர சங்கரரே சரணம் ||
நிறை பாரதம் முழுவதும் நடைபயின்றே – செகம் மேவிய துயரமும் கலைந்தனவா | நிறை பூரண குணமுடை புண்ணியமே – சசி சேகர சங்கரரே சரணம் ||
பிறை சூடிய சந்திர மௌளிபதம் – தினம் பூசனை செய்தருள் பூதியமே | வகை இல்லற நல்லறம் உணர்த்தியவா – சசி சேகர சங்கரரே சரணம் ||
இடர் யாவையும் கலிதனில் போக்கியவா – வினை யாவையும் நீக்கிடும் சந்திரரே | சுடர் போலருள் நாயகன் ஆதியனே – சசி சேகர சங்கரரே சரணம் ||
நினைந் தேயுனை அனுதினம் போற்றிடினும் – நிலை ஏகிலடும் நல்வழி சுடரொளியே | மனை ஏகிடு நன்னிலை பேரருளால் – சசி சேகர சங்கரரே சரணம் ||
கொடி மேலுரு நந்தியும் கொள்சிவமாய் – நிறை நாமமும் கொண்டொரு தூயவனே | கதி யாமிங்கு நின்பதம் நாடினமே – சசி சேகர சங்கரரே சரணம் ||
இருள் நீக்கிட பேரொளி பொங்கியவா – எமை காத்திடும் பெருமிறை நாயகனே | மருள் நீக்கிட நின்பதம் போற்றிடுவோம் – சசி சேகர சங்கரரே சரணம் ||
கலி வென்றிட தோன்றிய சங்கரரே – குரு நாயக மாயுரு கொண்டவரே | கிலி யில்லை யுனைதினம் துதிப்பவர்க்கே – சசி சேகர சங்கரரே சரணம் ||
பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீ மஹா பெரியவா அபயம்!! குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை! பெரியவா கடாக்ஷம் POEM BY SRI SAANU PUTHIRAN
|
|