Post by Amritha Varshini on Nov 8, 2018 5:43:33 GMT 5.5
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை
“நான் அகிஞ்சனன்”
எல்லாம் வல்ல கருணை தெய்வமாம் காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தான் சுகப்பிரம்மரிஷியின் மேன்மையோடு மிக்க எளிமையாய் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது, தான் சாட்சாத் ஈஸ்வரர் என்ற காருண்யரே என்பதை சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர் பிரும்மஸ்ரீ டி.எஸ். நடராஜசாஸ்திரிகள் தனக்கேற்பட்ட அனுபவத்தைச் சொல்கிறார் (தரிசன அனுபவங்கள்: பாகம் -7)
1907 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய்ப் போற்றப்படும் பெருந்தெய்வம் பதின்மூன்றுவயது பாலகனாய் அப்போதுதான் ஸ்ரீமடம் பொறுப்பை ஏற்றுத் திருக்குடந்தை நகருக்கு விஜயம் செய்திருந்தார். ஸ்ரீ நடராஜ சாஸ்திரிகளின் தகப்பனாரான பிரம்மஸ்ரீ சங்கர சாஸ்திரிகள்தான் அப்போது பங்காரு காமாட்சி அம்மன் கோயிலின் பிரதம ஸ்தானீகராக இருந்து வந்தார்.
புதிதாக பட்டத்துக்கு வந்துள்ள ஜகத்குருவிற்கு முதன்முதலாக பங்காரு காமாட்சி அம்மனின் பிரசாதங்களை சமர்ப்பிக்க எடுத்துச் செல்லும் பாக்யத்தை அவர் பெற்றிருந்தார். முதல் பிரசாதம் என்பதால் கூடவே ஒரு சால்வையையும் சங்கர சாஸ்திரிகள் எடுத்துச் சென்றிருந்தார். ஸ்ரீபெரியவாளெனும் பால சன்யாசிக்கு சால்வையைப் போர்த்தும் பெரும்பேறு அடைந்தார்.
ஸ்ரீபாலஞானி பிரசாதங்களை ஏற்று சால்வை சமர்ப்பித்ததை மிக பரவசமாக ஏற்றுக் கொண்டாராம். இவருக்கோ ரத்த நாளமெங்கிலும் அமுதம் பெருகியதுபோல் பேரானந்தம்.
ஆண்டுகள் ஓடின. எழுபது வருடங்கள் கடந்து 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் ஸ்ரீபெரியவா பாதயாத்திரையாக வடக்கே கிளம்பியாயிற்று.
ஸ்ரீமடத்தின் நிர்வாகத்திலுள்ள கோயில்களில் நித்ய பூஜை, விசேஷ பூஜைகள், உற்சவங்கள் எல்லாம் ஒழுங்காக நடைப்பெற வேண்டுமென்ற குறிக்கோளுடன் ஸ்ரீ புதுப்பெரியவாளின் கட்டளைப்படி ஸ்ரீ பங்காரு அம்மன் காமாட்சி நித்யஸ்ரீ டிரஸ்ட் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
ஸ்ரீ புதுப்பெரியவா அறக்கட்டளையின் முக்கிய பொறுப்பிலிருந்தவர்களை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் சென்று அறக்கட்டளை முழுவிபரங்களையும் கூறி ஸ்ரீ பெரியவாளின் ஆசியைப் பெற்றுவர வேண்டினார். அதன்படி முக்கியஸ்தர்களோடு கோயில் ஸ்தானீகரும் செல்வதாயிருந்தது.
ஸ்ரீ சங்கர சாஸ்திரிகளுக்குப் பின் அவர் மகன் ஸ்ரீ நடராஜ சாஸ்திரிகளுக்குத்தான் தஞ்சை காமாட்சியைத் தொட்டு பூஜை செய்யும் பாக்யம் கிடைத்திருந்தது.
அப்போது ஸ்ரீமஹாபெரியவா ஷோலாப்பூரின் அருகே ஒரு கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்க, அறக்கட்டளையின் முக்கிய அங்கத்தினர்களோடு ஸ்ரீநடராஜ சாஸ்திரிகளும் ஸ்தானீகராக அம்மன் பிரசாதத்தைக் கொண்டு சென்றார்.
ஸ்ரீ பெரியவா சன்னதியில் போய் நின்றவுடன் அங்கிருந்த ஒரு கைங்கர்யக்காரர் உரத்த குரலில் “தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயில் டிரஸ்டிகள் தரிசனத்துக்கு வந்திருக்கா. ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்திருக்கார்” என்று ஸ்ரீபெரியவாளிடம் அறிவித்தார்.
“முதல்ல பிரசாதத்தைக் கொடு” என்றார் ஸ்ரீபெரியவா.
ஒரு மூங்கில் தட்டில், ஸ்ரீ காமாட்சி பிரசாதமான குங்குமம், வாடிப்போயிருந்த நிர்மால்ய மாலை இவைகளுடன் ஒரு சாதரா எனும் சால்வையும் வைக்கப்பட்டு ஸ்ரீபெரியவாளிடம் நடராஜ சாஸ்திரிகள் சமர்பித்து நின்றார்.
ஸ்ரீ பெரியவா தன் நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டு மாலையை கண்களில் ஒற்றிக் கொண்டார்.
“இன்னும் என்ன இருக்கு” குழந்தையாய் ஸ்ரீ பெரியவா கேட்டார்.
“அம்பாள் பிரசாதமாக ஒரு சால்வை வைச்சிக்ருகார்” என்றார்கள்.
உடனே ஸ்ரீபெரியவா எழுபதுஆண்டுகளுக்குப் பின் சென்றுவிட்ட பாலயோகியாய் கண்களில் ஒரு தேஜஸ் ஒளிவிட நெஞ்சில் ஒரு நினைவோட்டத்தோடு அந்த சால்வையை நோக்கினார்.
“ஸ்தானீகரைக் கூப்பிடு” என்று ஸ்ரீபெரியவா ஆக்ஞைப்படி இவரைக் கூப்பிட இவருக்கு பாதாதிகேசமும் அருட்புனலால் ஒரு நீராட்டு நடந்ததுபோல் ஸ்ரீ பெரியவாளின் அருகாமையில் போய் நின்று தரிசிக்கும் அனுபவம் ஏற்பட்டது.
“நீ சங்கர சாஸ்திரிகள் புத்திரன் தானே?” ஸ்ரீ பெரியவா கேட்கிறார்.
“ஆமாம்” என்று ஸ்ரீநடராஜ சாஸ்திரிகள் சொன்ன போது அவர் மனதில் ஸ்ரீபெரியவா தன் தகப்பனாரின் பெயரை ஞாபகமாக குறிப்பிட்டு கௌரவம் செய்ததில் பெருமிதமடைகிறது. இதுபோன்று எத்தனை ஆயிரம் கோயில்கள் எத்தனை ஆயிரம் ஸ்தானீகர்கள் என்று அத்தனை பேர்களின் பெயர்களையும் ஈஸ்வர சக்தியால் மட்டும் ஞாபகமாகக் கூறமுடியும் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இப்படி இவர் அதிசயத்துக் கொண்டிருந்தபோதே ஸ்ரீ பெரியவாளின் அபார ஞாபக சக்தியாக அடுத்தவாக்கு எழுந்தது.
“என்ன ஒற்றுமை பாத்தயா! நான் பட்டத்துக்கு வந்தபோது உன் தகப்பனார்தான் சாதரா கொண்டு வந்து பூவாலேயே அபிஷேகம் பண்ணி……அப்புறம் பிரசாதம் கொடுத்தார்…..மடத்தோட பதில் மரியாதை கூட பண்ணினோம் தெரியுமா” என்று எழுபது வருடங்களுக்கு முன் நடந்ததை ஸ்ரீபெரியவா மனக்கண் முன் நிறுத்திக் கேட்டார்.
தன் தகப்பனார் இந்த விவரங்களை இவரிடம் சொல்லியிருக்க,
“அப்பா சொல்லியிருக்கா” என்றார் ஸ்தானீகர்.
நீயும் அவரைப் போலவே சாதரா, நிர்மால்யம், குங்கும்மெல்லாம் கொண்டு வந்துருக்கே…….உனக்கும் பதில் மரியாதையாய் ஏதாவது செய்யணும்……. ஆனா என்கிட்டே ஒண்ணுமேயில்லை……நான் அகிஞ்சனன் (ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்)” என்றார் ஸ்ரீ பெரியவா.
தான் ஸ்ரீமடத்தின் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலக்கிக் கொண்டபடியால் தனக்கு ஒரு சுவாதீனம் இல்லை என்ற தர்மத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்ரீபெரியவா இதைக் கூறியது போலிருந்தது.
அதன்பின் சிறிதுநேரம் மௌனமாக இருந்து ஸ்ரீபெரியவா “இவருக்கு ஒரு முத்திரப்பவுன் வாங்கி பதில் மரியாதை செய்தால் தேவலை. உங்களில் யாராலயாவது பண்ணமுடியுமா?” இப்படி ஒரு ஆதங்கத்தோடு வினவினார்.
அந்தச் சின்ன கிராமத்தில் நகைக்கடை ஏதுமில்லை. அப்படியே சூழ்ந்திருந்த பக்தர்களுக்குள் சில மாதர்கள் நகைகளைக் கழற்றிக் கொடுக்கத் தயாராய்த்தான் இருந்தனர்.
ஆனால் ஸ்ரீபெரியவா முத்திரைப் பவுன் அல்லவா கேட்கிறார்! இந்த பரப்பரப்பில் நடராஜ சாஸ்திரிகளுக்கு அழுகையே வந்துவிட்டது.
ஸ்ரீ பெரியவா தன்னை அகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லிக் கொள்ளலாமென்ற விசனத்தோடு, இத்தனை பிரசாதம் கொண்டு கொடுத்ததற்காக முத்திரைப் பவுன் தரவேண்டுமென்று பெருங்கருணை தெய்வம் இவர் பொருட்டு தன் இயலாமையைக் காட்டிக் கொள்கிறாரே என்ற ஆற்றாமையும் எழுந்தது.
“பெரியவா அனுக்ரஹம் மட்டும் இருந்தா போதும்……..காமாட்சி கருணையினாலே நாங்களெல்லாம் பரமசௌக்கியமா இருக்கோம்” என்ற கண்களில் தாரையாகப் பெருக சாஸ்திர்கள் ஸ்ரீ பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தார் விம்மலோடு நின்றவரை, ஸ்ரீ பெரியவா.
“இதே எண்ணத்தோடே இருந்துண்டிரு….. கடைசிவரை சௌக்கிமா இருப்பே” கோடி பவுன் ஈடுசெய்யாத அனுக்ரஹமாக ஸ்ரீபெரியவா வாக்கு வெளிப்பட்டது.
ஸ்ரீநடராஜ சாஸ்திரிகள் பெருமகிழ்ச்சியுடனும் சாந்தியுடனும் விடைப்பெற்றார். ஆனால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் அன்புத் தெய்வம் தன் வாக்கைத் தவறவிடாமல் தான் சொன்னதுபோல ஒரு முத்திரைப் பவுனை முடிகொண்டான் கிராமத்திலிருந்து ஒரு தணிகரிடம் சொல்லி இவரிடம் சேர்க்கச் சொன்னார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளா அகிஞ்சனன்? உலகோருக்கெல்லாம் படியளந்து, சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்கும் பெருவள்ளல் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் பாங்கின் உச்சமல்லவா இப்படிக் கூறிக்கொள்வது!
“நான் அகிஞ்சனன்”
எல்லாம் வல்ல கருணை தெய்வமாம் காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தான் சுகப்பிரம்மரிஷியின் மேன்மையோடு மிக்க எளிமையாய் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது, தான் சாட்சாத் ஈஸ்வரர் என்ற காருண்யரே என்பதை சுட்டிக்காட்டுவதுபோல் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர் பிரும்மஸ்ரீ டி.எஸ். நடராஜசாஸ்திரிகள் தனக்கேற்பட்ட அனுபவத்தைச் சொல்கிறார் (தரிசன அனுபவங்கள்: பாகம் -7)
1907 ஆம் ஆண்டு மே மாதம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய்ப் போற்றப்படும் பெருந்தெய்வம் பதின்மூன்றுவயது பாலகனாய் அப்போதுதான் ஸ்ரீமடம் பொறுப்பை ஏற்றுத் திருக்குடந்தை நகருக்கு விஜயம் செய்திருந்தார். ஸ்ரீ நடராஜ சாஸ்திரிகளின் தகப்பனாரான பிரம்மஸ்ரீ சங்கர சாஸ்திரிகள்தான் அப்போது பங்காரு காமாட்சி அம்மன் கோயிலின் பிரதம ஸ்தானீகராக இருந்து வந்தார்.
புதிதாக பட்டத்துக்கு வந்துள்ள ஜகத்குருவிற்கு முதன்முதலாக பங்காரு காமாட்சி அம்மனின் பிரசாதங்களை சமர்ப்பிக்க எடுத்துச் செல்லும் பாக்யத்தை அவர் பெற்றிருந்தார். முதல் பிரசாதம் என்பதால் கூடவே ஒரு சால்வையையும் சங்கர சாஸ்திரிகள் எடுத்துச் சென்றிருந்தார். ஸ்ரீபெரியவாளெனும் பால சன்யாசிக்கு சால்வையைப் போர்த்தும் பெரும்பேறு அடைந்தார்.
ஸ்ரீபாலஞானி பிரசாதங்களை ஏற்று சால்வை சமர்ப்பித்ததை மிக பரவசமாக ஏற்றுக் கொண்டாராம். இவருக்கோ ரத்த நாளமெங்கிலும் அமுதம் பெருகியதுபோல் பேரானந்தம்.
ஆண்டுகள் ஓடின. எழுபது வருடங்கள் கடந்து 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் ஸ்ரீபெரியவா பாதயாத்திரையாக வடக்கே கிளம்பியாயிற்று.
ஸ்ரீமடத்தின் நிர்வாகத்திலுள்ள கோயில்களில் நித்ய பூஜை, விசேஷ பூஜைகள், உற்சவங்கள் எல்லாம் ஒழுங்காக நடைப்பெற வேண்டுமென்ற குறிக்கோளுடன் ஸ்ரீ புதுப்பெரியவாளின் கட்டளைப்படி ஸ்ரீ பங்காரு அம்மன் காமாட்சி நித்யஸ்ரீ டிரஸ்ட் என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
ஸ்ரீ புதுப்பெரியவா அறக்கட்டளையின் முக்கிய பொறுப்பிலிருந்தவர்களை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் சென்று அறக்கட்டளை முழுவிபரங்களையும் கூறி ஸ்ரீ பெரியவாளின் ஆசியைப் பெற்றுவர வேண்டினார். அதன்படி முக்கியஸ்தர்களோடு கோயில் ஸ்தானீகரும் செல்வதாயிருந்தது.
ஸ்ரீ சங்கர சாஸ்திரிகளுக்குப் பின் அவர் மகன் ஸ்ரீ நடராஜ சாஸ்திரிகளுக்குத்தான் தஞ்சை காமாட்சியைத் தொட்டு பூஜை செய்யும் பாக்யம் கிடைத்திருந்தது.
அப்போது ஸ்ரீமஹாபெரியவா ஷோலாப்பூரின் அருகே ஒரு கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்க, அறக்கட்டளையின் முக்கிய அங்கத்தினர்களோடு ஸ்ரீநடராஜ சாஸ்திரிகளும் ஸ்தானீகராக அம்மன் பிரசாதத்தைக் கொண்டு சென்றார்.
ஸ்ரீ பெரியவா சன்னதியில் போய் நின்றவுடன் அங்கிருந்த ஒரு கைங்கர்யக்காரர் உரத்த குரலில் “தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயில் டிரஸ்டிகள் தரிசனத்துக்கு வந்திருக்கா. ஸ்தானீகர் பிரசாதம் கொண்டு வந்திருக்கார்” என்று ஸ்ரீபெரியவாளிடம் அறிவித்தார்.
“முதல்ல பிரசாதத்தைக் கொடு” என்றார் ஸ்ரீபெரியவா.
ஒரு மூங்கில் தட்டில், ஸ்ரீ காமாட்சி பிரசாதமான குங்குமம், வாடிப்போயிருந்த நிர்மால்ய மாலை இவைகளுடன் ஒரு சாதரா எனும் சால்வையும் வைக்கப்பட்டு ஸ்ரீபெரியவாளிடம் நடராஜ சாஸ்திரிகள் சமர்பித்து நின்றார்.
ஸ்ரீ பெரியவா தன் நெற்றியில் குங்குமத்தை இட்டுக் கொண்டு மாலையை கண்களில் ஒற்றிக் கொண்டார்.
“இன்னும் என்ன இருக்கு” குழந்தையாய் ஸ்ரீ பெரியவா கேட்டார்.
“அம்பாள் பிரசாதமாக ஒரு சால்வை வைச்சிக்ருகார்” என்றார்கள்.
உடனே ஸ்ரீபெரியவா எழுபதுஆண்டுகளுக்குப் பின் சென்றுவிட்ட பாலயோகியாய் கண்களில் ஒரு தேஜஸ் ஒளிவிட நெஞ்சில் ஒரு நினைவோட்டத்தோடு அந்த சால்வையை நோக்கினார்.
“ஸ்தானீகரைக் கூப்பிடு” என்று ஸ்ரீபெரியவா ஆக்ஞைப்படி இவரைக் கூப்பிட இவருக்கு பாதாதிகேசமும் அருட்புனலால் ஒரு நீராட்டு நடந்ததுபோல் ஸ்ரீ பெரியவாளின் அருகாமையில் போய் நின்று தரிசிக்கும் அனுபவம் ஏற்பட்டது.
“நீ சங்கர சாஸ்திரிகள் புத்திரன் தானே?” ஸ்ரீ பெரியவா கேட்கிறார்.
“ஆமாம்” என்று ஸ்ரீநடராஜ சாஸ்திரிகள் சொன்ன போது அவர் மனதில் ஸ்ரீபெரியவா தன் தகப்பனாரின் பெயரை ஞாபகமாக குறிப்பிட்டு கௌரவம் செய்ததில் பெருமிதமடைகிறது. இதுபோன்று எத்தனை ஆயிரம் கோயில்கள் எத்தனை ஆயிரம் ஸ்தானீகர்கள் என்று அத்தனை பேர்களின் பெயர்களையும் ஈஸ்வர சக்தியால் மட்டும் ஞாபகமாகக் கூறமுடியும் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இப்படி இவர் அதிசயத்துக் கொண்டிருந்தபோதே ஸ்ரீ பெரியவாளின் அபார ஞாபக சக்தியாக அடுத்தவாக்கு எழுந்தது.
“என்ன ஒற்றுமை பாத்தயா! நான் பட்டத்துக்கு வந்தபோது உன் தகப்பனார்தான் சாதரா கொண்டு வந்து பூவாலேயே அபிஷேகம் பண்ணி……அப்புறம் பிரசாதம் கொடுத்தார்…..மடத்தோட பதில் மரியாதை கூட பண்ணினோம் தெரியுமா” என்று எழுபது வருடங்களுக்கு முன் நடந்ததை ஸ்ரீபெரியவா மனக்கண் முன் நிறுத்திக் கேட்டார்.
தன் தகப்பனார் இந்த விவரங்களை இவரிடம் சொல்லியிருக்க,
“அப்பா சொல்லியிருக்கா” என்றார் ஸ்தானீகர்.
நீயும் அவரைப் போலவே சாதரா, நிர்மால்யம், குங்கும்மெல்லாம் கொண்டு வந்துருக்கே…….உனக்கும் பதில் மரியாதையாய் ஏதாவது செய்யணும்……. ஆனா என்கிட்டே ஒண்ணுமேயில்லை……நான் அகிஞ்சனன் (ஒரு பைசா கூட வைத்துக் கொள்ளாதவன்)” என்றார் ஸ்ரீ பெரியவா.
தான் ஸ்ரீமடத்தின் பொறுப்பிலிருந்து முற்றிலும் விலக்கிக் கொண்டபடியால் தனக்கு ஒரு சுவாதீனம் இல்லை என்ற தர்மத்தை வெளிப்படுத்தும் வகையில் ஸ்ரீபெரியவா இதைக் கூறியது போலிருந்தது.
அதன்பின் சிறிதுநேரம் மௌனமாக இருந்து ஸ்ரீபெரியவா “இவருக்கு ஒரு முத்திரப்பவுன் வாங்கி பதில் மரியாதை செய்தால் தேவலை. உங்களில் யாராலயாவது பண்ணமுடியுமா?” இப்படி ஒரு ஆதங்கத்தோடு வினவினார்.
அந்தச் சின்ன கிராமத்தில் நகைக்கடை ஏதுமில்லை. அப்படியே சூழ்ந்திருந்த பக்தர்களுக்குள் சில மாதர்கள் நகைகளைக் கழற்றிக் கொடுக்கத் தயாராய்த்தான் இருந்தனர்.
ஆனால் ஸ்ரீபெரியவா முத்திரைப் பவுன் அல்லவா கேட்கிறார்! இந்த பரப்பரப்பில் நடராஜ சாஸ்திரிகளுக்கு அழுகையே வந்துவிட்டது.
ஸ்ரீ பெரியவா தன்னை அகிஞ்சனன் என்று எப்படிச் சொல்லிக் கொள்ளலாமென்ற விசனத்தோடு, இத்தனை பிரசாதம் கொண்டு கொடுத்ததற்காக முத்திரைப் பவுன் தரவேண்டுமென்று பெருங்கருணை தெய்வம் இவர் பொருட்டு தன் இயலாமையைக் காட்டிக் கொள்கிறாரே என்ற ஆற்றாமையும் எழுந்தது.
“பெரியவா அனுக்ரஹம் மட்டும் இருந்தா போதும்……..காமாட்சி கருணையினாலே நாங்களெல்லாம் பரமசௌக்கியமா இருக்கோம்” என்ற கண்களில் தாரையாகப் பெருக சாஸ்திர்கள் ஸ்ரீ பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தார் விம்மலோடு நின்றவரை, ஸ்ரீ பெரியவா.
“இதே எண்ணத்தோடே இருந்துண்டிரு….. கடைசிவரை சௌக்கிமா இருப்பே” கோடி பவுன் ஈடுசெய்யாத அனுக்ரஹமாக ஸ்ரீபெரியவா வாக்கு வெளிப்பட்டது.
ஸ்ரீநடராஜ சாஸ்திரிகள் பெருமகிழ்ச்சியுடனும் சாந்தியுடனும் விடைப்பெற்றார். ஆனால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் அன்புத் தெய்வம் தன் வாக்கைத் தவறவிடாமல் தான் சொன்னதுபோல ஒரு முத்திரைப் பவுனை முடிகொண்டான் கிராமத்திலிருந்து ஒரு தணிகரிடம் சொல்லி இவரிடம் சேர்க்கச் சொன்னார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளா அகிஞ்சனன்? உலகோருக்கெல்லாம் படியளந்து, சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளி வழங்கும் பெருவள்ளல் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் பாங்கின் உச்சமல்லவா இப்படிக் கூறிக்கொள்வது!