Post by Amritha Varshini on Aug 11, 2013 18:58:43 GMT 5.5
Article from Sage of Kanchi Facebook
ஆவணி அவிட்டம்-ஜபிக்கும் முறை
ஆவணி அவிட்டம்
ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திபூர்வமான பண்டிகை இது. இந்த நாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு, புதிய பூணூல் அணிந்து கொள்வர். இதை குருமுகமாகத்தான் செய்ய வேண்டும். வீட்டில் குருக்களை வைத்து காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பூணூல் போடுவார்கள். இப்போதெல்லாம் சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை குழுக்களாகக் கோவிலுக்குச் சென்று அனைவரும் குருக்கள் உதவியுடன் புதிய பூணூல் அணிந்து கொள்கின்றனர்.
மூன்று வயது முதல் ஐந்து வயதிற்குள் ஆண் குழந்தைகள் குருமுகமாக காயத்ரி மந்திரம் ஓதி, குழந்தையை தந்தை மடிமீது அமர வைத்து முதன் முதலாகப் புதிய பூணூல் போட்டு விடுவார்கள். இதை ஒரு திருமண விழா போலவே கொண்டாடுவார்கள். சிலர் தன் உறவினர் வீட்டுத் திருமண விழாவில் மணமகள் அமர்ந்த மேடையில் அமர்த்தியும் செய்து விடுவார்கள். (செலவும் சிரமமும் குறைவு). இதற்கு உபநயனம் என்று பெயர். உபநயனம் செய்து புதிய பூணூலை அணிந்துகொண்டபின், தினமும் காயத்ரி ஜபத்தை மூன்று முறை தவறாமல் ஓத வேண்டும். வருடம் ஒருமுறை ஆவணி அவிட்டத்தன்று புதிய பூணூல் அணிந்துகொள்ள வேண்டும்.
பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம் "ஓம், பூர்புவ, சுவஹ, தத், ஸவிதுர், வரோண்யம், பர்கோ, தேவஸ்ய, தீமஹி, தியோ யோந, ப்ரசோதயாத்' என்பதாகும். இம்மந்திரத்தை தினம் மூன்று வேளை கை மேல் துணி போட்டு மூடி, 108 அல்லது 1008 முறை ஜபிக்க பாவம் நிவர்த்தியாகும்.
ஜபிக்கும் முறை
சுண்டு விரல் அடியிலிருந்து ஒவ்வொரு கணுவாக எண்ணி (3), மோதிர விரல் நுனி (1), நடுவிரல் நுனி (1), ஆட்காட்டிவிரல் நுனி (1), கட்டை விரல் இரண்டு கணு (2), ஆள்காட்டி விரலின் கீழ்க்கணு (1), நடுவிரலின் கீழ்க்கணு (1), மோதிர விரல் கீழ்க்கணு (1) என்று மொத்தம் 11 எண்ணிக்கையில் எண்ணி இந்த மந்திரத்தை ஓத வேண்டும். "ஓம், பூர்புவ, சுவஹ' என சொல்லிக் கொண்டே எண்ணினால் 11 சொற்கள் வரும்.
இம்மந்திரம் உள்ளத்தை இதமாக்கும். மந்திரங்களிலேயே மிகவும் உயர்வான மந்திரம் இது. வேதங்களின் தாய் காயத்ரி. இந்த மந்திரம் வேத மந்திரங்களில் சிரேஷ்டமானது. இது பாவங்களைப் போக்கும். நல்ல ஆரோக்கியம், அழகு, பலம், வீர்யம், பிரும்ம தேஜஸ் முதலானவற்றைத் தருகிறது. மனதைப் பரிசுத்தப்படுத்து கிறது. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளைக் கொடுக்கிறது. சக்தி மானாகவும் புத்திமானா கவும் ஆக்குகிறது.
கீதையில் கண்ணன், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். மஹாவிஷ்ணுவின் திரு முகத்திலிருந்து தோன்றிய மந்திரம் இது! காயத்ரிக்கு மூன்று கண்கள், ஐந்து முகங்கள், பத்து கரங்கள் உண்டு. வாகனம்- அன்னம். சிவன்போல ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என ஐந்து தொழில்களை காயத்ரியின் ஐந்து முகங்களும் செய்கின்றன. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து சக்திகளின் முகங்களே காயத்ரியின் ஐந்து முகங்கள்.
விசுவாமித்திரரால் இம்மந்திரம் இராம பிரானுக்கு உபதேசிக்கப்பட்டு, அதன் பலனாக இராமன் இராவணனை வென்றார் எனக் கூறப் படுகிறது. காயத்ரி மந்திரத்தை 27 முறை ஜபித் தல் நலம். ஜபிக்கும்போது ஒழுக்க நெறியோடும் உள்ளத் தூய்மையோடும் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் விரும்பிய பலனை அடையலாம்; விரும்பிய லோகம் செல்லலாம் என்கிறது சாஸ்திரம்.
இம்மந்திரத்தை வாயால் உச்சரித்து ஜபித்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். அதிக சப்தமில்லாமல் ஜபித்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். உதடு அசைத்து ஜபித்தால் நூறு மடங்கு பலன் கிட்டும். மனதில் ஜபித்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். அதுபோல் பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து காயத்ரி மந்திரம் ஜபித்தால் ஒரு பங்கு பலனும், நதிக்கரையில் அமர்ந்து ஜபித்தால் இரு மடங்கு பலனும், பசுவின் கொட்டடியில் அமர்ந்து ஜபித்தால் பத்து மடங்கு பலனும், யாக சாலை யில் ஜபித்தால் நூறு மடங்கு பலனும், பாடல் பெற்ற ஸ்தலங்களில் அமர்ந்து ஜபித்தால் நூறாயிரம் மடங்கு பலனும் கிடைக்கும். பெருமாள் சந்நிதியில் செய்யும் காயத்ரி ஜபப் பலனுக்கு எல்லையே இல்லை!
இம்மந்திரம் ஜபித்த மூடனும் மகா ஞானி ஆவான். தரித்திரன் தனவந்தனாவான். தினமும் உச்சாடனம் செய்தால் வாழ்வில் மேன்மையும் எடுத்த காரியத்தில் வெற்றியும் பெறுவது சர்வ நிச்சயம். காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமாகக் கொண்டது. எனவே சூரியனை வணங் குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சம மாகும். இப்போது விநாயக காயத்ரி, சண்முக காயத்ரி, அனுமன் காயத்ரி என ஒவ்வொரு தெய்வத்தையும் முழு முதலாகக் கொண்ட காயத்ரி மந்திரங்களும் வழிபாட்டில் உள்ளன.
காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும்.
காயத்ரி மந்திர சக்தி
ஒரு பிராமணர் முறைப்படி காயத்ரி ஜபத் தினை தன் மூன்று வயதிலிருந்து தவறாமல் ஓதி வந்தார். இவருக்கு ஒருசமயம் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அரசனிடம் சென்று தன் பூணூல் எடைக்குத் தங்கம் தர வேண்டுமெனக் கேட்டார். மன்னனும் பூணூலை தராசில் வைத்து மறு தட்டில் தங்கத்தை வைத்தார். எவ்வளவு தங்கம் வைத்தாலும் தராசு சமமாகவில்லை.
மந்திரியிடம் ஆலோசனை கேட்ட மன்னர், அந்தணரை மறுநாள் வந்து சன்மானம் வாங்கிக் கொள்ளுமாறு கூறி அனுப்பி விட்டார். மறுநாள் வந்தவரின் பூணூலை எடை போடச் செய்தனர். என்ன ஆச்சரியம்! உடனே எடை சமமாகி விட்டது. இதற்கான காரணத்தை மந்திரியிடம் கேட்டார் மன்னர்.
""மன்னா... இவர் எப்போதும் காயத்ரி மந்திரத்தை முறைப்படி ஜபிப்பவர். மூன்று வயது முதல் நேற்று வரை ஜபிக்கத் தவறவில்லை. ஆனால் நேற்று அவர் ஜபித்தலை சரியாகச் செய்யவில்லை. அதனால் காயத்ரி மந்திர ஜபத்தின் பலன் குறைந்துவிட்டதால் எடை எளிமையாகச் சமமாகி விட்டது'' என்றார்!
ஒரு கேரள அரசனின் நோயை எவ்வித மருத் துவத்தாலும் குணப்படுத்த முடியவில்லை. அந்த நிலையில் கனவில் ஓர் உருவம் வந்து, "மன்னா, உன் பூர்வ ஜென்ம பாவத்தினால்தான் உன் நோய் குணமாகவில்லை. இதற்கு நீ ஒரு பரிகாரம் செய்' எனக் கூறியது.
"எள்ளினால் உன் போன்ற ஒரு பொம்மை செய்து, அதனுள் தங்கத்தை நிரப்பி தானம் செய்துவிடு. உடனே உன் ரோகம் தீரும்' என்று கூறி மறைந்தது.
மன்னனும் அப்படியே செய்தான். ஆனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அப்போது ஒரு கன்னட பிரம்மச்சாரி வாங்க வந்தார். மன்னரிடம் பொம்மையைப் பெற்றவுடன் அதை உற்றுப் பார்த்தார். பொம்மை முதலில் மூன்று விரலைக் காட்டியது. பின் இரண்டு விரலைக் காட்டியது. எதற்கும் பிரம்மச்சாரி சம்மதிக்கவில்லை. பின் பொம்மை ஒரு விரலைக் காட்ட, பிரம்மச்சாரி சம்மதித்தார். பொம்மையிலிருந்து காலபுருஷன் வெளியேறிய வுடன் மன்னன் குணமடைந்தான்.
இதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, "பொம்மையிலிருந்த காலபுருஷன் காயத்ரி மந்திர ஜபப் பலன் மூன்று காலம் கேட்டான். பின் இரண்டு காலம் கேட்டான். நான் சம்மதிக்கவில்லை. பின் ஒரு காலம் கேட்டதும் தந்து விட்டேன். நீங்களும் குணமடைந்தீர்' என்றார் பிரம்மச்சாரி.
இதுதான் காயத்ரி ஜபப் பலனாகும்.