Post by Amritha Varshini on May 10, 2015 6:09:27 GMT 5.5
Raga – Kalyani – Lyrics by Sri Vaalee – Music & Singer Sri Ilayaraja
Shivah Shakthya Yukto Yadi Bhavati Shaktah Prabhavitum
Na Chedevam Devo Na Khalu Kusalah Spanditumapi
Atas tvam Aaradhyam Hari-Hara-Virinchadibhir api
Pranantum Stotum Vaa Katham Akrta-punyah Prabhavati
(Soundarya Lahari – Verse 1)
Lord Shiva, only becomes able, to do creation in this world along with Shakthi. Without her, Even an inch he cannot move. And so how can, one who does not do good deeds, Or one who does not sing your praise, Become adequate to worship you. Oh, goddess mine, Who is worshipped by the trinity.
ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி
சிவன் எனும் பொருளும் ஆதி சக்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம்; இவள் பிரிந்திடின் இயங்குதற்கு அரிதரிது என மறை இரைக்குமால் நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில், நடத்தி யாவரும் வழுத்து தாள், அவனியின் கண், ஒரு தவம் இலார், பணியல் ஆவதோ பரவல் ஆவதோ
பொருள்:
அன்னையே! பராசக்தியான உன்னுடன் பரமசிவன் சேர்ந்திருந்தால்தான் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் (ஆக்கல், காத்தல்,அழித்தல்) என்னும் முத்தொழில்களையும் செய்ய முடியும். அவ்வாறில்லையேல் அவரால் அசையவும் இயலாது. எனவே ஹரி, ஹரன், பிரம்மன் ஆகியோர் அனைவரும் போற்றித் துதிக்கும் பெருமை பெற்றவளான உன்னைத் துதிக்க முற்பிறவிகளில் புண்ணியம் செய்யாதவனால் எப்படி முடியும்?
ஜனனீ ஜனனீ! ஜகம் நீ அகம் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடைவார் குழலும் இடை வாகனமும்!
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே!
ஜகன் மோகினி நீ! சிம்ம வாஹினி நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே! மலை மாமகளே!
அலை மாமகள் நீ! கலை மாமகள் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பீகையே!
பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்!
சக்தி பீடமும் நீ! சர்வ மோட்சமும் நீ!
ஜகத் காரணி நீ! பரிபூரணி நீ!