|
Post by Amritha Varshini on Mar 22, 2015 6:50:42 GMT 5.5
ஆடிக்கொண்டார் - முத்துத்தாண்டவர் - ராகம் : மாயமாளவகௌளை
பல்லவி
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ
அனுபல்லவி
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர் திருச்செம்பொன் அம்பல வாணனார் சரணம்-1
பங்கயச் சிலம்பைந்தாடப் பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப் பொங்குமுடனே உரித்து சரித்த புலித்தோல் அசைந்தாட செங்கையில் ஏந்திய மான் மழுவாட செம்பொற்குழை கண் முயலகனாட கங்கை இளம்பிறை செஞ்சடையாடக் கனக சபைதனிலே
சரணம்-2
ஆர நவமணி மாலைகளாட ஆடும் அரவம் படம் விரித்தாட சீரணி கொன்றை மலர்த்தொடையாடச் சிதம்பரத்தேர் ஆட பேரணி வேதியர் தில்லைமூவாயிரம் பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட காரணி காளி எதிர்த்து நின்றாட கனகசபை தனிலே
சரணம்-3
நிர்த்த கணபதி வேலார் நின்றாட நின்று அயன் மாலுடன் இந்திரன் ஆட முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட மெய்ப்பதி மேவும் பதஞ்சலியாட வியாக்கிர பாதரும் நந்தியும் ஆட ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட
Here is the link to hear the divine music sung by
Sri Unnikrishnan
Sri Bharat Sundar
|
|