Post by Amritha Varshini on Jan 22, 2015 17:12:14 GMT 5.5
ஒரு விஷ்ணு பக்த ராஜாவின் கதை
அவன் பிறக்கும்போது மலையாள தேசத்து ராஜகுமாரன். இளவரசன். அரசனுக்குத்தேவையான யானையேற்றம், குதிரையேற்றம், வாள் , வில், மல்யுத்தம், போன்ற சகல பயிற்சிகளும் அவனுக்கு.கற்பிக்கப்பட்டன. ஆர்வமுடன் கற்று அவன் தேறி பிறகு ராஜாவானான். சிறந்த முறையில் ஆட்சி புரிந்த அவனை மக்கள் போற்றினர். அவனது வீரம் பலம் எல்லாம் ஒன்றும் அறியாத பாண்டிய சோழ ராஜாக்கள் அவன் நாட்டின் படையெடுத்து தோற்றுப் போனார்கள். அவனது வீரத்தை மெச்சித் தோற்ற பாண்டிய ராஜா தன் பெண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தான். ஒரு பிள்ளையும் பெண்ணும் கூட பிறந்துவிட்டது. ,
ராஜாவைப்பற்றி ஒன்று இங்கே சொல்லவேண்டும். அவனுக்கு பெருமாள் மீது அளவுகடந்த பக்தி. அதுவும் திருப்பதி வெங்கடாசலபதி என்றால் அலாதி பக்தி பிரேமை.
ராஜாவுக்கு ஒரு நாள் கனவு. வெங்கடாசலபதி தோன்றி அவனை ஆசீர்வாதம் பண்ணுவது போல. எப்போதுமே அவன் ராமர் கிருஷ்ணர் பற்றி உபன்யாசங்கள், கதைகள் ஆவலாக கேட்பான். பஜனைகளில் ரொம்ப ஈடுபடுவான். விஷ்ணுபக்தனாச்சே. நிறைய சம்பாவனை எல்லாம் கொடுப்பான்.
ஒரு தடவை ஒரு உபன்யாசகர் ராஜாவின் அரண்மனையில் ராம ராவண யுத்தம் கதை சொல்லிக்கொண்டிருந்தார். நேரம் ஆகிக்கொண்டே வந்தது. ஆர்வமாக ராஜா கேட்டுக்கொண்டிருந்தான். உபன்யாசகர் ராஜாவின் ஆர்வத்தில் லயித்து, மேலே மேலே நீளமாக யுத்தத்தை வர்ணித்துக்கொண்டு போனார். ராஜாவோ ராம பக்தன். ''என்ன இது என் ராமன் தனியனாக இந்த ராவணனிடம் போராடிக்கொண்டு இருக்கிறான். ராவணனோ மிகுந்த பலசாலி, படையெல்லாம் வேறு ஏராளமாக இருக்கு. எப்படி இந்த ராமன் பாவம் ஒத்தையா போராடி க்களைச்சு போயிருக்கிறான். யுத்தம் நீண்டு கொண்டே போகிறதே.''
''நிறுத்துங்கள் உடனே... பாகவதர் அரண்டு போனார். ராஜாவின் கோபம் எதில் கொண்டு சேர்க்குமோ, தலை தப்புமா?"''
எங்கே சேனாபதி, கூப்பிடுங்கள் அவரை. சேனாபதி உடனே வந்தார், கைகட்டி நின்றார்.
''எங்கேய்யா நமது சேனைகள். உடனே திரட்டு. இலங்கைக்கு போ. ராமன் ஒத்தையிலே ராவணனோடு போராடிக்கொண்டு இருக்கும்போது நாம் சும்மாவா இருப்பது. கிளம்பு உடனே '' என்றதும் பௌராணிகர் வெலவெலத்துப் போனார்.
ராஜா எந்த அளவுக்கு ராம பக்தி உள்ளவன் என்று புரிந்துகொண்டு ரெண்டே வார்த்தையில் ராம ராவண யுத்தத்தை அழகாக முடித்து ராமன் ராவணனை வாதம் செய்து வென்று விபீஷணனை ராஜாவாக்கின வரையிலும் வேகமாக சொல்லி முடித்தார். ராஜாவும் இனி தனது உதவி ராமனுக்கு தேவையில்லை என்று புரிந்து கொண்டு மகிழ்ந்தான். ராமர் அன்று அவன் கனவில் தோன்றி அவனது பக்தியை மெச்சி இன்றிலிருந்து எனக்கு நீ லக்ஷ்மணனைப் போல உடன் பிறப்பு உனது பெயரோடு ....... பெருமாள் என்று பெயர் இன்றுமுதல் விளங்கும் என்றார். ராஜாவுக்கு மட்டற்ற ஆனந்தம். அந்த ராஜா தமிழிலும் சமஸ்க்ரிதத்திலும் நிறைய எழுதினான் பெருமாளைப்பற்றி.
ராமனுக்கு தங்கச்சிலை வடித்து பூஜை பண்ணினான். விலை உயர்ந்த நவரத்ன மாலையைச் சாற்றினான். கோவிலே கதி என்று சகலமும் மறந்து சந்தோஷமாக இருந்தபோது ஒரு நாள் ராமன் மீது போட்டிருந்த விலையுயர்ந்த மாலை காணவில்லை.''எங்கே கண்டுபிடியுங்கள் யார் எடுத்தது?'' மந்திரிகள் ஓடினர், தேடினர், காணோம். ஒருவர் மெதுவாக '' அரசே, இங்கு உபந்யாசகர்கள் அடிக்கடி வருவதால் யாரோ ஒருவர் எடுத்திருக்கலாம்.....'' என்று மென்று முழுங்கி சொன்னபோது ராஜா துடித்தான். வெகுண்டான். ''என்ன சொல்கிறாய் சொல்கிறாய்?'' அபசாரம், மகாபாவம், காதைபொத்திக்கொண்டான் . உடல் துடித்தது. வியர்த்தது. நடுங்கியது. ராமனின் பெருமை போற்றி சொல்லும் விஷ்ணு பக்தர்களையா அவமதித்து அவதூறாக சொன்னாய். இதை கேட்டதாலே நான் தண்டனைக்கு உள்ளாகிவிட்டேன். கொண்டுவா ஒரு விஷ நாகத்தை உடனே இங்கே. மந்திரி சேனாபதி அதிகாரிகள் நடுங்கிவிட்டனர். ராஜா சொன்னால் சொன்னதுதான். மறுவார்த்தை பேசக்கூடாது. மீறக்கூடாதே. பசியோடு ஒரு விஷநாகம் ஒரு பாத்திரத்தின் உள்ளே விடப்பட்டு கொண்டு வரப்பட்டது. அந்த பாத்திரத்தில் கையை விட்டான் ராஜா. ''பரம பாகவதர்களை அவமதித்ததைக் கேட்ட என்னை விஷநாகம் தீண்டி நான் மரணமடைகிறேன். இதுவே எனக்கு தக்க தண்டனை''. எல்லோரும் விதிர் விதிர்த்து வியர்க்க மூச்சு மாரடிக்க நின்றுகொண்டிருந்த அந்த நேரத்தில் கொடிய விஷ நாகப் பாம்பு பேசாமல் மல்லிகைப்பூவாக பாத்திரத்திற்குள் சுருண்டுகிடந்தது. உள்ளே கைவிட்ட ராஜாவின் கையைக் கடிக்கவே இல்லை.
ராஜ்ய பாரத்தில் கவனமில்லாமல் எப்போதும் ராஜவைச்சூழ்ந்திருக்கும் பஜனை கோஷ்டி, உபநியாசகர்களை எல்லாம் அகற்றி ராஜாவின் கவனத்தை ராஜ்யபார விஷயங்களில் ஈர்க்க ஒரு மந்திரி சொன்ன யோசனையின் படி அவர்களே நவரத்னமாலையை ராமன் விக்ரஹத்தின் மேலிருந்து அகற்றி பழியை யாரோ ஒரு பௌராணிகர் மேல் போட்டு ராஜாவுக்கு அவர்கள் மேல் கோவம் வந்து விரட்டி, மீண்டும் ராஜ்யபாரத்தில் கவனம் வரும் என்று அவர்கள் போட்ட திட்டத்தை ராஜாவின் காலடியில் விழுந்து சொல்லி மன்னிப்பு கேட்டனர். ராஜா அவர்கள் என்னத்தை புரிந்துகொண்டான். தான் ஆன்மீக யாத்திரையில் முழுமையாக ஈடுபட்டு க்ஷேத்ராடனம் செய்ய முடிவெடுத்தான். தனது பிள்ளையை ராஜாவாக்கினான். கிளம்பிவிட்டான்.
எங்கு சென்றான். என்ன செய்தான். அவன் இனி ராஜா இல்லை, ஸ்ரீ குலசேகர பெருமாள், குலசேகர ஆழ்வார் என்று புகழ் பெற்றவர் ஆகிவிட்டாரே.
ஆழ்வார் பல க்ஷேத்ரங்களுக்கும் ஸ்தலங்களுக்கும் சென்றார். ராமனிடம் தன்னை இழந்தார். அவனுக்கு ராகவனே தாலேலோ என்று தாலாட்டு பாடி உறங்க வைத்தார். தான் உறங்கவில்லை. '' அடே கிருஷ்ணா, நீ கல் நெஞ்சன், அங்கே . அனால் உன்னைப் பெற்ற உன் தாய் உன் லீலைகளையெல்லாம் காணாமல் கேளாமல் ஏங்குகிறாளே தெரியவில்லையா, நான் சொல்கிறேன் அவளுக்கு என்று பல பாசுரங்கள் பாடினார். ''தொல்லை இன்பம்'' இப்படித்தான் தொடங்கியது.
ஆழ்வார் மிகவும் இளகிய நெஞ்சர் . திருப்பதிக்குச் சென்றவர் நம்மைப்போல் கடியாரத்தைப் பார்த்துக்கொண்டு தரிசனம் எவ்வளவு சீக்கிரம் என்று விசாரிக்கவில்லை. கல் படிகளைப் பார்த்ததுமே அடடா இவை எவ்வளவு பாக்கியம் செய்தவை. இதோ இந்தக் குளத்தில் வளையவரும் மீன் எவ்வளவு அதிருஷ்டம் செய்திருக்கிறது. இதோ பாரேன் இந்த செண்பக மரத்தின் கர்வத்தை. கோவில் வாசலில் கம்பீரமாக நின்று நிழல் கொடுக்கிறது பக்தர்களுக்கு, உள்ளேயும் அடிக்கடி எட்டிப்பார்த்து தரிசனம் வேறே. இந்த பெரும் பாறை மட்டும் லேசானதா? இங்கிருந்து எவரும் இதை அசைக்கக்கூட முடியாதே. ஜம்மென்று இங்கிருந்தே அதற்கு பெருமாள் தரிசனம் உண்டே. அந்த வைஷ்ணவரைப் பாருங்களேன். பெருமாள் எதிரே சதா சர்வ காலமும் தங்க பாத்திரத்தில் பெருமாள் வாய் கொப்புளிக்க நீரோடு, பல் துலக்கி பெருமாள் துப்பும் நீரை அந்த பாத்திரத்தில் தினமும் ஏந்த எந்த ஜன்மத்தில் புண்யம் பண்ணினவரோ.! ஒரு ராஜா, வீரமானவன். எப்படி குழந்தையாக மாறிவிட்டார். ஒன்றுமில்லாத நாம் என்னமாய் துள்ளுகிறோம்.
ஆழ்வார் 67 வருஷ காலம் பூலோக வாசம் இருந்தார். அவர் மகள் இளையும் அவரோடு சேர்ந்து வைகுண்டம் ஏகி பெருமாள் திருவடிகளை அடைந்தார்கள்
பச்சைமாமலை என்ற பாசுரத்தை இன்று பாடினேன். மனது அவரது மற்ற பாசுரங்களையும் தேடியது. மகிழ்ந்தேன். இதை உங்களுக்கு பரிமாறுகிறேன். இதோ இன்னும் சில அருமையான பாசுரங்கள். உடனே மனப்பாடம் செய்யுங்கள் மகிழுங்கள்:
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்.
தேனார்ப் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
பச்சை மாமலை போல் மேனி பவழ வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவைத் தவிர யான் போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
இந்த திருப்பதியில் குளக்கரையில் ஒரு கொக்காகவோ ஒரு பறவையாகவோ பிறக்காமல் போனேனே? அது சரிஇல்லை. புத்தி ஒருவேளை மாறி, வேறெங்காவது பறந்து போய்விடுவேனே. பேசாமல் குளத்திலேயே மூழ்கிக்கிடக்கும் ஒரு மீனாகவாவது இந்த திருப்பதி குளத்தில் பிறந்திருக்க லாமே. ? அதுவும் சரியாக இருக்காது என்று தோன்றுகிறதே. ஒரு வேளை கொக்கு போன்ற பறவை மீனைக் விடுமே. நல்ல யோசனை. இதோ இந்த செண்பக மரமாக நிற்பது தான் சாலச் சிறந்தது. கொஞ்சம் நீண்டநாள் பெருமாளைப்பார்த்துக்கொண்டே நிற்கலாம். அடியார்களுக்கு நிழலையும் தரலாம். அதிலும் ஒரு சங்கடம். இந்த பக்தர்கள் என்னிடம் பூக்களைப் பறித்துக்கொண்டு எங்கோ மலையடிவாரத்துக்கு போய் விட்டால் என்ன செய்வது. பேசாமல் முள் மரமாக காட்டில் இங்கேயே ஒரு ஓரத்தில் நிற்பது தான் புத்திசாலித்தனம்.. ச்சே, அவசரப்பட்டு விட்டேனே. மரமாக இருந்தால் எவராவது வந்து வெட்டி அடுப்பில் போட்டு விடுவார்கள். அப்புறம் எப்படி இந்த வேங்கடேசனைப்பார்ப்பது. நல்ல உபாயம் ஒன்று தோன்றுகிறதே. இந்த மலைகளில் ஒன்றின் சிகரமாகவே ஆகிவிட்டால் எவனும் அசைக்க மாட்டானே. நாமும் காலம் காலமாக இங்கேயே அசையாமல் நின்று பெருமாளை திவ்யமாக தரிசிக்கலாமோ? ரொம்ப சுயநலம் கலந்து விட்டதே. பெரிய உயர சிகரமாக இருந்தால் பக்தன் மலை ஏற மாட்டானே. பகவானைக்காட்டிலும் அவன் பக்தன் பாத ஸ்பர்சம் ச்லாக்கியமாச்சே. அது கிடைக்காதே. ஒரு வழி என்னவென்றால். அந்த உயரிய மலைமீதிருந்து வீழும் நீர் வீழ்ச்சியாகவோ, நதியாகவோ, காட்டாராகவோ இருந்தால் கூட பரவாயில்ல. பக்தர்கள் பாத கமலங்களைத் தொடும் புண்ணியம் அதிகம் கிடைக்கலாமே. இதென்ன, சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறேனோ. நீராக மாறி பக்தர்களுக்கு கால் வைக்க எண்ணம் தோன்றினால் தானே என் ஆசை நிறைவேறும். சுலப வழி இந்த கோவில் இருக்கிறதே அதன் வாசலில் ஒரு பெரிய பாறையாக இருந்துவிடுவோம். என்னை மிதித்துக்கொண்டு தானே எல்லா பக்தர்களும் உள்ளே சென்று பெருமாளைக் காண முடியும். இதுவே சரியான முடிவு. -- எப்படி குலசேகர ஆழ்வார் யோசனை?
Article by Sri J.K. Sivan (jksivan@gmail.com)
அவன் பிறக்கும்போது மலையாள தேசத்து ராஜகுமாரன். இளவரசன். அரசனுக்குத்தேவையான யானையேற்றம், குதிரையேற்றம், வாள் , வில், மல்யுத்தம், போன்ற சகல பயிற்சிகளும் அவனுக்கு.கற்பிக்கப்பட்டன. ஆர்வமுடன் கற்று அவன் தேறி பிறகு ராஜாவானான். சிறந்த முறையில் ஆட்சி புரிந்த அவனை மக்கள் போற்றினர். அவனது வீரம் பலம் எல்லாம் ஒன்றும் அறியாத பாண்டிய சோழ ராஜாக்கள் அவன் நாட்டின் படையெடுத்து தோற்றுப் போனார்கள். அவனது வீரத்தை மெச்சித் தோற்ற பாண்டிய ராஜா தன் பெண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தான். ஒரு பிள்ளையும் பெண்ணும் கூட பிறந்துவிட்டது. ,
ராஜாவைப்பற்றி ஒன்று இங்கே சொல்லவேண்டும். அவனுக்கு பெருமாள் மீது அளவுகடந்த பக்தி. அதுவும் திருப்பதி வெங்கடாசலபதி என்றால் அலாதி பக்தி பிரேமை.
ராஜாவுக்கு ஒரு நாள் கனவு. வெங்கடாசலபதி தோன்றி அவனை ஆசீர்வாதம் பண்ணுவது போல. எப்போதுமே அவன் ராமர் கிருஷ்ணர் பற்றி உபன்யாசங்கள், கதைகள் ஆவலாக கேட்பான். பஜனைகளில் ரொம்ப ஈடுபடுவான். விஷ்ணுபக்தனாச்சே. நிறைய சம்பாவனை எல்லாம் கொடுப்பான்.
ஒரு தடவை ஒரு உபன்யாசகர் ராஜாவின் அரண்மனையில் ராம ராவண யுத்தம் கதை சொல்லிக்கொண்டிருந்தார். நேரம் ஆகிக்கொண்டே வந்தது. ஆர்வமாக ராஜா கேட்டுக்கொண்டிருந்தான். உபன்யாசகர் ராஜாவின் ஆர்வத்தில் லயித்து, மேலே மேலே நீளமாக யுத்தத்தை வர்ணித்துக்கொண்டு போனார். ராஜாவோ ராம பக்தன். ''என்ன இது என் ராமன் தனியனாக இந்த ராவணனிடம் போராடிக்கொண்டு இருக்கிறான். ராவணனோ மிகுந்த பலசாலி, படையெல்லாம் வேறு ஏராளமாக இருக்கு. எப்படி இந்த ராமன் பாவம் ஒத்தையா போராடி க்களைச்சு போயிருக்கிறான். யுத்தம் நீண்டு கொண்டே போகிறதே.''
''நிறுத்துங்கள் உடனே... பாகவதர் அரண்டு போனார். ராஜாவின் கோபம் எதில் கொண்டு சேர்க்குமோ, தலை தப்புமா?"''
எங்கே சேனாபதி, கூப்பிடுங்கள் அவரை. சேனாபதி உடனே வந்தார், கைகட்டி நின்றார்.
''எங்கேய்யா நமது சேனைகள். உடனே திரட்டு. இலங்கைக்கு போ. ராமன் ஒத்தையிலே ராவணனோடு போராடிக்கொண்டு இருக்கும்போது நாம் சும்மாவா இருப்பது. கிளம்பு உடனே '' என்றதும் பௌராணிகர் வெலவெலத்துப் போனார்.
ராஜா எந்த அளவுக்கு ராம பக்தி உள்ளவன் என்று புரிந்துகொண்டு ரெண்டே வார்த்தையில் ராம ராவண யுத்தத்தை அழகாக முடித்து ராமன் ராவணனை வாதம் செய்து வென்று விபீஷணனை ராஜாவாக்கின வரையிலும் வேகமாக சொல்லி முடித்தார். ராஜாவும் இனி தனது உதவி ராமனுக்கு தேவையில்லை என்று புரிந்து கொண்டு மகிழ்ந்தான். ராமர் அன்று அவன் கனவில் தோன்றி அவனது பக்தியை மெச்சி இன்றிலிருந்து எனக்கு நீ லக்ஷ்மணனைப் போல உடன் பிறப்பு உனது பெயரோடு ....... பெருமாள் என்று பெயர் இன்றுமுதல் விளங்கும் என்றார். ராஜாவுக்கு மட்டற்ற ஆனந்தம். அந்த ராஜா தமிழிலும் சமஸ்க்ரிதத்திலும் நிறைய எழுதினான் பெருமாளைப்பற்றி.
ராமனுக்கு தங்கச்சிலை வடித்து பூஜை பண்ணினான். விலை உயர்ந்த நவரத்ன மாலையைச் சாற்றினான். கோவிலே கதி என்று சகலமும் மறந்து சந்தோஷமாக இருந்தபோது ஒரு நாள் ராமன் மீது போட்டிருந்த விலையுயர்ந்த மாலை காணவில்லை.''எங்கே கண்டுபிடியுங்கள் யார் எடுத்தது?'' மந்திரிகள் ஓடினர், தேடினர், காணோம். ஒருவர் மெதுவாக '' அரசே, இங்கு உபந்யாசகர்கள் அடிக்கடி வருவதால் யாரோ ஒருவர் எடுத்திருக்கலாம்.....'' என்று மென்று முழுங்கி சொன்னபோது ராஜா துடித்தான். வெகுண்டான். ''என்ன சொல்கிறாய் சொல்கிறாய்?'' அபசாரம், மகாபாவம், காதைபொத்திக்கொண்டான் . உடல் துடித்தது. வியர்த்தது. நடுங்கியது. ராமனின் பெருமை போற்றி சொல்லும் விஷ்ணு பக்தர்களையா அவமதித்து அவதூறாக சொன்னாய். இதை கேட்டதாலே நான் தண்டனைக்கு உள்ளாகிவிட்டேன். கொண்டுவா ஒரு விஷ நாகத்தை உடனே இங்கே. மந்திரி சேனாபதி அதிகாரிகள் நடுங்கிவிட்டனர். ராஜா சொன்னால் சொன்னதுதான். மறுவார்த்தை பேசக்கூடாது. மீறக்கூடாதே. பசியோடு ஒரு விஷநாகம் ஒரு பாத்திரத்தின் உள்ளே விடப்பட்டு கொண்டு வரப்பட்டது. அந்த பாத்திரத்தில் கையை விட்டான் ராஜா. ''பரம பாகவதர்களை அவமதித்ததைக் கேட்ட என்னை விஷநாகம் தீண்டி நான் மரணமடைகிறேன். இதுவே எனக்கு தக்க தண்டனை''. எல்லோரும் விதிர் விதிர்த்து வியர்க்க மூச்சு மாரடிக்க நின்றுகொண்டிருந்த அந்த நேரத்தில் கொடிய விஷ நாகப் பாம்பு பேசாமல் மல்லிகைப்பூவாக பாத்திரத்திற்குள் சுருண்டுகிடந்தது. உள்ளே கைவிட்ட ராஜாவின் கையைக் கடிக்கவே இல்லை.
ராஜ்ய பாரத்தில் கவனமில்லாமல் எப்போதும் ராஜவைச்சூழ்ந்திருக்கும் பஜனை கோஷ்டி, உபநியாசகர்களை எல்லாம் அகற்றி ராஜாவின் கவனத்தை ராஜ்யபார விஷயங்களில் ஈர்க்க ஒரு மந்திரி சொன்ன யோசனையின் படி அவர்களே நவரத்னமாலையை ராமன் விக்ரஹத்தின் மேலிருந்து அகற்றி பழியை யாரோ ஒரு பௌராணிகர் மேல் போட்டு ராஜாவுக்கு அவர்கள் மேல் கோவம் வந்து விரட்டி, மீண்டும் ராஜ்யபாரத்தில் கவனம் வரும் என்று அவர்கள் போட்ட திட்டத்தை ராஜாவின் காலடியில் விழுந்து சொல்லி மன்னிப்பு கேட்டனர். ராஜா அவர்கள் என்னத்தை புரிந்துகொண்டான். தான் ஆன்மீக யாத்திரையில் முழுமையாக ஈடுபட்டு க்ஷேத்ராடனம் செய்ய முடிவெடுத்தான். தனது பிள்ளையை ராஜாவாக்கினான். கிளம்பிவிட்டான்.
எங்கு சென்றான். என்ன செய்தான். அவன் இனி ராஜா இல்லை, ஸ்ரீ குலசேகர பெருமாள், குலசேகர ஆழ்வார் என்று புகழ் பெற்றவர் ஆகிவிட்டாரே.
ஆழ்வார் பல க்ஷேத்ரங்களுக்கும் ஸ்தலங்களுக்கும் சென்றார். ராமனிடம் தன்னை இழந்தார். அவனுக்கு ராகவனே தாலேலோ என்று தாலாட்டு பாடி உறங்க வைத்தார். தான் உறங்கவில்லை. '' அடே கிருஷ்ணா, நீ கல் நெஞ்சன், அங்கே . அனால் உன்னைப் பெற்ற உன் தாய் உன் லீலைகளையெல்லாம் காணாமல் கேளாமல் ஏங்குகிறாளே தெரியவில்லையா, நான் சொல்கிறேன் அவளுக்கு என்று பல பாசுரங்கள் பாடினார். ''தொல்லை இன்பம்'' இப்படித்தான் தொடங்கியது.
ஆழ்வார் மிகவும் இளகிய நெஞ்சர் . திருப்பதிக்குச் சென்றவர் நம்மைப்போல் கடியாரத்தைப் பார்த்துக்கொண்டு தரிசனம் எவ்வளவு சீக்கிரம் என்று விசாரிக்கவில்லை. கல் படிகளைப் பார்த்ததுமே அடடா இவை எவ்வளவு பாக்கியம் செய்தவை. இதோ இந்தக் குளத்தில் வளையவரும் மீன் எவ்வளவு அதிருஷ்டம் செய்திருக்கிறது. இதோ பாரேன் இந்த செண்பக மரத்தின் கர்வத்தை. கோவில் வாசலில் கம்பீரமாக நின்று நிழல் கொடுக்கிறது பக்தர்களுக்கு, உள்ளேயும் அடிக்கடி எட்டிப்பார்த்து தரிசனம் வேறே. இந்த பெரும் பாறை மட்டும் லேசானதா? இங்கிருந்து எவரும் இதை அசைக்கக்கூட முடியாதே. ஜம்மென்று இங்கிருந்தே அதற்கு பெருமாள் தரிசனம் உண்டே. அந்த வைஷ்ணவரைப் பாருங்களேன். பெருமாள் எதிரே சதா சர்வ காலமும் தங்க பாத்திரத்தில் பெருமாள் வாய் கொப்புளிக்க நீரோடு, பல் துலக்கி பெருமாள் துப்பும் நீரை அந்த பாத்திரத்தில் தினமும் ஏந்த எந்த ஜன்மத்தில் புண்யம் பண்ணினவரோ.! ஒரு ராஜா, வீரமானவன். எப்படி குழந்தையாக மாறிவிட்டார். ஒன்றுமில்லாத நாம் என்னமாய் துள்ளுகிறோம்.
ஆழ்வார் 67 வருஷ காலம் பூலோக வாசம் இருந்தார். அவர் மகள் இளையும் அவரோடு சேர்ந்து வைகுண்டம் ஏகி பெருமாள் திருவடிகளை அடைந்தார்கள்
பச்சைமாமலை என்ற பாசுரத்தை இன்று பாடினேன். மனது அவரது மற்ற பாசுரங்களையும் தேடியது. மகிழ்ந்தேன். இதை உங்களுக்கு பரிமாறுகிறேன். இதோ இன்னும் சில அருமையான பாசுரங்கள். உடனே மனப்பாடம் செய்யுங்கள் மகிழுங்கள்:
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்.
தேனார்ப் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்பிறக்கும் விதியுடையேன் ஆவேனே
பச்சை மாமலை போல் மேனி பவழ வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவைத் தவிர யான் போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
இந்த திருப்பதியில் குளக்கரையில் ஒரு கொக்காகவோ ஒரு பறவையாகவோ பிறக்காமல் போனேனே? அது சரிஇல்லை. புத்தி ஒருவேளை மாறி, வேறெங்காவது பறந்து போய்விடுவேனே. பேசாமல் குளத்திலேயே மூழ்கிக்கிடக்கும் ஒரு மீனாகவாவது இந்த திருப்பதி குளத்தில் பிறந்திருக்க லாமே. ? அதுவும் சரியாக இருக்காது என்று தோன்றுகிறதே. ஒரு வேளை கொக்கு போன்ற பறவை மீனைக் விடுமே. நல்ல யோசனை. இதோ இந்த செண்பக மரமாக நிற்பது தான் சாலச் சிறந்தது. கொஞ்சம் நீண்டநாள் பெருமாளைப்பார்த்துக்கொண்டே நிற்கலாம். அடியார்களுக்கு நிழலையும் தரலாம். அதிலும் ஒரு சங்கடம். இந்த பக்தர்கள் என்னிடம் பூக்களைப் பறித்துக்கொண்டு எங்கோ மலையடிவாரத்துக்கு போய் விட்டால் என்ன செய்வது. பேசாமல் முள் மரமாக காட்டில் இங்கேயே ஒரு ஓரத்தில் நிற்பது தான் புத்திசாலித்தனம்.. ச்சே, அவசரப்பட்டு விட்டேனே. மரமாக இருந்தால் எவராவது வந்து வெட்டி அடுப்பில் போட்டு விடுவார்கள். அப்புறம் எப்படி இந்த வேங்கடேசனைப்பார்ப்பது. நல்ல உபாயம் ஒன்று தோன்றுகிறதே. இந்த மலைகளில் ஒன்றின் சிகரமாகவே ஆகிவிட்டால் எவனும் அசைக்க மாட்டானே. நாமும் காலம் காலமாக இங்கேயே அசையாமல் நின்று பெருமாளை திவ்யமாக தரிசிக்கலாமோ? ரொம்ப சுயநலம் கலந்து விட்டதே. பெரிய உயர சிகரமாக இருந்தால் பக்தன் மலை ஏற மாட்டானே. பகவானைக்காட்டிலும் அவன் பக்தன் பாத ஸ்பர்சம் ச்லாக்கியமாச்சே. அது கிடைக்காதே. ஒரு வழி என்னவென்றால். அந்த உயரிய மலைமீதிருந்து வீழும் நீர் வீழ்ச்சியாகவோ, நதியாகவோ, காட்டாராகவோ இருந்தால் கூட பரவாயில்ல. பக்தர்கள் பாத கமலங்களைத் தொடும் புண்ணியம் அதிகம் கிடைக்கலாமே. இதென்ன, சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறேனோ. நீராக மாறி பக்தர்களுக்கு கால் வைக்க எண்ணம் தோன்றினால் தானே என் ஆசை நிறைவேறும். சுலப வழி இந்த கோவில் இருக்கிறதே அதன் வாசலில் ஒரு பெரிய பாறையாக இருந்துவிடுவோம். என்னை மிதித்துக்கொண்டு தானே எல்லா பக்தர்களும் உள்ளே சென்று பெருமாளைக் காண முடியும். இதுவே சரியான முடிவு. -- எப்படி குலசேகர ஆழ்வார் யோசனை?
Article by Sri J.K. Sivan (jksivan@gmail.com)