Post by Amritha Varshini on Oct 3, 2014 19:14:32 GMT 5.5
ரமணஜோதி - 1
தேவையற்ற ஒரு அறிமுகம்
உலகில் நடப்பவையெல்லாம் ஒரு சக்கரத்தின் சுழற்சிதான். இந்த உண்மை மறக்கப்படும்போது அல்லது மறைக்கப் படும்போது நினைவூட்டும் முகத்தாய் புதிய புதிய குருமார்க்ள் தோன்றுகிறார்கள். கௌடபாதர், ஆதிசங்கரர், ராமானுஜர், பகவான் ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர் முதலியோர் அப்படிதோன்றியவர்கள்தான். எந்த ஒரு குருவும் புதிதாக ஒரு தத்துவத்தை கண்டுபிடிப்பதில்லை.புதிதாக ஒரு கடவுளையும் சிருஷ்டிப்பதும் இல்லை.இந்த நிதர்சன தத்துவதிற்க்கு மாறாக நான்தான் கடவுள் என்று யாராவது கூறியிருந்தால் அவர்களை நம்புவது சிறிது கவலைக்குரிய விஷயம். சில சமையங்களில் பக்தகோடிகள் தங்களது அதிகப்படியான குரு பக்தியின் காரணமாக ஆர்வமிகுதியால் குருவை கடவுளாக்குவதும் உண்டு. அதுவும் அடிப்படையான சத்யத்திற்க்கு புறம்பானது தான்.
கௌடபாதர் மாண்டுக்யோபனிஷதின் வாயிலாக அத்வைத சித்தாந்திற்க்கு அடித்தளம் அமைத்தார். ஆதி சங்கரர் அத்வைத சித்தாந்திற்கு விரிவான பாஷ்யங்கள் இயற்றினார். பகவான் ரமணர் இவர்களிலிருந்து மாறுபட்டு தனது முப்பது வருடத்திற்க்கும் மேலான மௌனத்தின் மூலமும் அதற்க்குப்பின் பேசிய சிறிய சிறிய விளக்கங்களின் மூலமும் இந்த உலகிற்க்கு வழிகாட்டினார். அவரின் முக்கியமான வழிகாட்டுதல் "நான் யார்’ என்ற விசார மார்க்கம் தான். அவர் தனது இகலோக வாழ்வில் ஒரே ஒரு முறை தான் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தரிசனதிற்கு சென்ற்றுள்ளார். ஏனென்றால் பகவான் தன்னிலிருந்து வேறுபட்ட ஒன்று இருக்கிறது என்று நினைக்கவில்லை. அவர் நமக்களித்த உபதேசங்களின் சாரத்தை ஒரு சிறிதளவு பருகுவது தான் இந்த பரம்பரையின் நோக்கம்
கடவுள் வணக்கம்
எந்த ஒரு முயற்சி மேற்க்கொள்வதற்க்கு முன்பும் இறை வழிபாடு அல்லது இறை வணக்கம் செய்வது மரபு..இதை மங்களாசரணம் என்று சிலர் கூறுவார்கள்.
அந்த மரபின் படி நான் இங்கு தாண்டவராயன் பிள்ளை நூற்றாண்டுகளுக்குமுன் இயற்றிய வரிகளையே இறை வணக்கமாக தருகிறேன்.(கைவல்ய நவனீதம்)
பொன்னில மாதராசை பொருந்தினர் பொருந்தா ருள்ளந்
தன்னிலந் தரத்திற் சீவ சாட்சி மாத்திரமாய் நிற்கு
மெந்நிலங் களினு மிக்க வெழு நில மவற்றின் மேலா
நன்னில மருவு மேக நாயகன் பதங்கள் போற்றி.
பொன்,மண்,பெண் { இன்றைய காலகட்டத்தில் பெண்ணாசை என்பதற்குப் பதிலாக பாலியல் ஆசைகள் என்று கூறலாம்} என்னும் முப்பெரும் ஆசைகளுடையவர்கள்-அறிவிலிகள், மற்றும் அவ்வாசைகள் எதுவும் இல்லாத ஞானிகள் எல்லாருடைய உள்ளிலும் ஆகாயம் போன்று ஜீவசாட்சி மாத்திரமாய் நிற்கின்றனர்,
சான்றோர் கூறும் ஞான பூமிகளெல்லாவற்றையும் விட மேலான, அயோத்தி, காசி, மதுரை, மாயை,, காஞ்சி, அவந்திகை, துவாரகை,
எனும் ஏழு புண்ணிய தலங்கலையும் விட மேலான திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் ஏகநாயகனாகிய நாரயணனை வணங்குகின்றேன்.
தாண்டவராயன் பிள்ளை அத்துடன் நிறுத்தவில்லை.அவர் அடுத்ததாக ஆன்ம சொரூபத்தை வணங்குகிறார். எப்படிப்பட்ட ஆன்ம சொரூப் மென்றால் ஞான சூரியனாக சதா சர்வகாலமும் தானே ஒளிருகின்ற நிர்மலமான ஆன்ம சொரூபம். இந்த ஆன்ம சொரூபம் மாயையின் ரஜத ,சத்துவ ,தாமச குணங்களால் உலகத்தை படைத்து, காத்து, அழிக்கவும் செய்கின்ற பிரமனாகவும், விஷ்ணுவாகவும், ஈஸ்வரனாகவும் இருக்கின்ற அனந்த மூர்த்தியே தான் என்று தாண்டவராயன் பிள்ளை கூறுகிறார்..இந்த அனந்த மூர்த்தி ஒரு பெரும் ஆனந்தகடல். அந்த பரிபூரண முக்தன் இந்த உலகத்திலிருக்கும் சகல இருளையும் போக்கி வெளிச்சம் பகருகிறான். ஆதலால் அவனை வணங்கி இந்த முயற்சியைத் தொடங்குகின்றேன்.
ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலா யான்றவீ சனுமாய்த் தானே யநன்ந்தமூர்த் தியுமாய் நிற்கும்
பூன்முத் த னுமா யின்பப் புணரியா தவனாய் நாளுந்
தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே
ஆண்டவனை ம்ட்டும் வணங்கினால் போதாது என்றறிந்த அவர் அடுத்தாற் போல் குரு வந்தனை செய்கிறார்.
எவருடை யருளால் யானே யெங்குமாம் பிரம மென்பால்
கவருடைப் புவனமெல்லாங் கற்பித மென்ற் றிந்து
சுவரி டை வெளிபோல் யானென் சொரூபசு பாவ மானே
னவருடைப் பதும பாத மநுதினம் பணிகின்றேனே
யாருடைய கருணையினால் “நானும் நீயும் எல்லாம் ஒன்று தான். நானும் பிரமம் நீயும் பிரமம்.எங்கும் நிறைந்த்திருப்பதும் பிரமமமே.” என்று தெரிந்துகொண்டேனோ அந்த குருவை வணங்குகின்றேன்.
‘எங்கும் நிறைந்திருக்கும் பிரமம் நானே என்று தெரிந்துகொண்டு,இந்த உலகமெல்லாம் மனித மனத்தின் கற்பனையே; சுவரின் இடையே தெரியும் ஆகாயம் எல்லாம் ஒன்றே; இவையெல்லாம் தெரிந்துகொண்ட என்னுடைய நிஜ சொரூபம் பிரமம்மே’ என்று எனக்கு உணர்த்திய என்னுடைய குருவின் தாமரை போன்ற பாதங்களை தினமும் வணங்கி நான் இந்த முயற்சியை ஆரம்பிகின்றேன்...
இதுவே தான் “அஹம் பிரஹ்மாஸ்மி” என்ற மஹா வாக்யத்தின் பொருளும்.
Article by Sri Harihara Sarma (iyerha2@gmail.com)
தேவையற்ற ஒரு அறிமுகம்
உலகில் நடப்பவையெல்லாம் ஒரு சக்கரத்தின் சுழற்சிதான். இந்த உண்மை மறக்கப்படும்போது அல்லது மறைக்கப் படும்போது நினைவூட்டும் முகத்தாய் புதிய புதிய குருமார்க்ள் தோன்றுகிறார்கள். கௌடபாதர், ஆதிசங்கரர், ராமானுஜர், பகவான் ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர் முதலியோர் அப்படிதோன்றியவர்கள்தான். எந்த ஒரு குருவும் புதிதாக ஒரு தத்துவத்தை கண்டுபிடிப்பதில்லை.புதிதாக ஒரு கடவுளையும் சிருஷ்டிப்பதும் இல்லை.இந்த நிதர்சன தத்துவதிற்க்கு மாறாக நான்தான் கடவுள் என்று யாராவது கூறியிருந்தால் அவர்களை நம்புவது சிறிது கவலைக்குரிய விஷயம். சில சமையங்களில் பக்தகோடிகள் தங்களது அதிகப்படியான குரு பக்தியின் காரணமாக ஆர்வமிகுதியால் குருவை கடவுளாக்குவதும் உண்டு. அதுவும் அடிப்படையான சத்யத்திற்க்கு புறம்பானது தான்.
கௌடபாதர் மாண்டுக்யோபனிஷதின் வாயிலாக அத்வைத சித்தாந்திற்க்கு அடித்தளம் அமைத்தார். ஆதி சங்கரர் அத்வைத சித்தாந்திற்கு விரிவான பாஷ்யங்கள் இயற்றினார். பகவான் ரமணர் இவர்களிலிருந்து மாறுபட்டு தனது முப்பது வருடத்திற்க்கும் மேலான மௌனத்தின் மூலமும் அதற்க்குப்பின் பேசிய சிறிய சிறிய விளக்கங்களின் மூலமும் இந்த உலகிற்க்கு வழிகாட்டினார். அவரின் முக்கியமான வழிகாட்டுதல் "நான் யார்’ என்ற விசார மார்க்கம் தான். அவர் தனது இகலோக வாழ்வில் ஒரே ஒரு முறை தான் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தரிசனதிற்கு சென்ற்றுள்ளார். ஏனென்றால் பகவான் தன்னிலிருந்து வேறுபட்ட ஒன்று இருக்கிறது என்று நினைக்கவில்லை. அவர் நமக்களித்த உபதேசங்களின் சாரத்தை ஒரு சிறிதளவு பருகுவது தான் இந்த பரம்பரையின் நோக்கம்
கடவுள் வணக்கம்
எந்த ஒரு முயற்சி மேற்க்கொள்வதற்க்கு முன்பும் இறை வழிபாடு அல்லது இறை வணக்கம் செய்வது மரபு..இதை மங்களாசரணம் என்று சிலர் கூறுவார்கள்.
அந்த மரபின் படி நான் இங்கு தாண்டவராயன் பிள்ளை நூற்றாண்டுகளுக்குமுன் இயற்றிய வரிகளையே இறை வணக்கமாக தருகிறேன்.(கைவல்ய நவனீதம்)
பொன்னில மாதராசை பொருந்தினர் பொருந்தா ருள்ளந்
தன்னிலந் தரத்திற் சீவ சாட்சி மாத்திரமாய் நிற்கு
மெந்நிலங் களினு மிக்க வெழு நில மவற்றின் மேலா
நன்னில மருவு மேக நாயகன் பதங்கள் போற்றி.
பொன்,மண்,பெண் { இன்றைய காலகட்டத்தில் பெண்ணாசை என்பதற்குப் பதிலாக பாலியல் ஆசைகள் என்று கூறலாம்} என்னும் முப்பெரும் ஆசைகளுடையவர்கள்-அறிவிலிகள், மற்றும் அவ்வாசைகள் எதுவும் இல்லாத ஞானிகள் எல்லாருடைய உள்ளிலும் ஆகாயம் போன்று ஜீவசாட்சி மாத்திரமாய் நிற்கின்றனர்,
சான்றோர் கூறும் ஞான பூமிகளெல்லாவற்றையும் விட மேலான, அயோத்தி, காசி, மதுரை, மாயை,, காஞ்சி, அவந்திகை, துவாரகை,
எனும் ஏழு புண்ணிய தலங்கலையும் விட மேலான திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் ஏகநாயகனாகிய நாரயணனை வணங்குகின்றேன்.
தாண்டவராயன் பிள்ளை அத்துடன் நிறுத்தவில்லை.அவர் அடுத்ததாக ஆன்ம சொரூபத்தை வணங்குகிறார். எப்படிப்பட்ட ஆன்ம சொரூப் மென்றால் ஞான சூரியனாக சதா சர்வகாலமும் தானே ஒளிருகின்ற நிர்மலமான ஆன்ம சொரூபம். இந்த ஆன்ம சொரூபம் மாயையின் ரஜத ,சத்துவ ,தாமச குணங்களால் உலகத்தை படைத்து, காத்து, அழிக்கவும் செய்கின்ற பிரமனாகவும், விஷ்ணுவாகவும், ஈஸ்வரனாகவும் இருக்கின்ற அனந்த மூர்த்தியே தான் என்று தாண்டவராயன் பிள்ளை கூறுகிறார்..இந்த அனந்த மூர்த்தி ஒரு பெரும் ஆனந்தகடல். அந்த பரிபூரண முக்தன் இந்த உலகத்திலிருக்கும் சகல இருளையும் போக்கி வெளிச்சம் பகருகிறான். ஆதலால் அவனை வணங்கி இந்த முயற்சியைத் தொடங்குகின்றேன்.
ஈன்றளித் தழிக்குஞ் செய்கைக் கேதுவா மயனாய் மாலா யான்றவீ சனுமாய்த் தானே யநன்ந்தமூர்த் தியுமாய் நிற்கும்
பூன்முத் த னுமா யின்பப் புணரியா தவனாய் நாளுந்
தோன்றிய விமல போத சொரூபத்தைப் பணிகின் றேனே
ஆண்டவனை ம்ட்டும் வணங்கினால் போதாது என்றறிந்த அவர் அடுத்தாற் போல் குரு வந்தனை செய்கிறார்.
எவருடை யருளால் யானே யெங்குமாம் பிரம மென்பால்
கவருடைப் புவனமெல்லாங் கற்பித மென்ற் றிந்து
சுவரி டை வெளிபோல் யானென் சொரூபசு பாவ மானே
னவருடைப் பதும பாத மநுதினம் பணிகின்றேனே
யாருடைய கருணையினால் “நானும் நீயும் எல்லாம் ஒன்று தான். நானும் பிரமம் நீயும் பிரமம்.எங்கும் நிறைந்த்திருப்பதும் பிரமமமே.” என்று தெரிந்துகொண்டேனோ அந்த குருவை வணங்குகின்றேன்.
‘எங்கும் நிறைந்திருக்கும் பிரமம் நானே என்று தெரிந்துகொண்டு,இந்த உலகமெல்லாம் மனித மனத்தின் கற்பனையே; சுவரின் இடையே தெரியும் ஆகாயம் எல்லாம் ஒன்றே; இவையெல்லாம் தெரிந்துகொண்ட என்னுடைய நிஜ சொரூபம் பிரமம்மே’ என்று எனக்கு உணர்த்திய என்னுடைய குருவின் தாமரை போன்ற பாதங்களை தினமும் வணங்கி நான் இந்த முயற்சியை ஆரம்பிகின்றேன்...
இதுவே தான் “அஹம் பிரஹ்மாஸ்மி” என்ற மஹா வாக்யத்தின் பொருளும்.
Article by Sri Harihara Sarma (iyerha2@gmail.com)