|
Post by Amritha Varshini on Aug 18, 2014 7:10:56 GMT 5.5
அலை பாயுதே கண்ணா
ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யர்
கானடா
பல்லவி
அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அனுபல்லவி
நிலை பெயராது சிலை போலவே நின்று நேரமாவதறியாமலே மிக விநோதமான முரளிதரா என் மனம் அலை பாயுதே கண்ணா
சரணம்
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கனித்த மனத்தில் உருக்கி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்த வா ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
அலைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழல் எனக்களித்தவா கதறி மனமுருகி நான் அழைக்கவா இதர மாதருடன் நீ களிக்கவோ இது தகுமோ? இது முறையோ? இது தருமம் தானோ? குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவோடு
Here is the link to hear this divine song sung by :
Sri Pithukuli Murugadas
Smt Sudha Raghunathan
|
|