Post by Amritha Varshini on Jul 13, 2014 17:33:22 GMT 5.5
நாயன்மார் கதை - முன்னுரை
“பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ"
என்று தமிழ்ப் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் , நாயன்மார்களுடைய வரலாற்றைக் கவிச் சுவையும், பக்தி ரசமும் துளும்பும் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரைப்பற்றிப் பாராட்டுகிறார்.
தமிழ் இலக்கியங்களில் நாயன்மார் கதைகளைச் சொல்லும்- பெரிய புராணத்துக்கு - ஒரு தனிச் சிறப்பு உண்டு.
அது சரித்திரங்களைச் சொல்வதனால் இதிகாசம் என்று சொல்வதற்குத் தகுந்த பெருமையை உடையது என்றே கூறலாம்.
அருள் மொழித் தேவர் என்ற பட்டப் பெயருடன் விளங்கிய சேக்கிழார், இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில், சென்னையை அடுத்த குன்றத்தூரில் அவதரித்தார்.
சோழ அரசனுடைய மந்திரியாய் விளங்கிய அவர் இயற்பெயர், இராமதேவர் என்பது, கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.
சோழ அரசனின் விருப்பப்படி, சிவனடியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகப் பாடச் சம்மதித்து அதன்படியே திருத்தொண்டர் புராணத்தை சிதம்பரத்து இறைவன் சந்நிதானத்தில் பாடி அரங்கேற்றினார்.
சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய "திருத்தொண்டத் தொகையே" முதன் முதலாக அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிக் கூறுகிறது .
"தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று தொடங்கும் அத்திருப்பதிகத்தின் அடியை ஒற்றி , நம்பியாண்டார் நம்பிகள் நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு , "திருத்தொண்டர் திருவந்தாதி" என்ற நூலை இயற்றினார்.
அது திருத்தொண்டத் தொகைக்கு வகையாக இருக்கிறது. சேக்கிழார் அந்த அந்தாதியை விரித்துப் புராணமாகக் கூறினார்.
திருத்தொண்டத் தொகை -- தொகை நூல் ;
திருத்தொண்டர் திருவந்தாதி – வகை ;
பெரியபுராணம்—விரி .
அதனால் பெரிய புராணத்துக்குத் ” திருத்தொண்டத்தொகைவிரி “ என்ற பெயரும் வழங்கும். திருத்தொண்டர் புராணம் என்பதே சேக்கிழார் வைத்த பெயராகும் .
ஓர் ஆண்டுகாலம் பெரிய புராண அரங்கேற்றம் சிதம்பரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அரங்கேற்ற முடிவில் சேக்கிழாரை யானைமேல் ஊர்வலம் வரும்படி செய்து, புவிச் சக்ரவர்த்தியாக இருப்பினும் , தொண்டர் சீர் பரவ வல்லார்க்குரிய பெருமைக்கு முன் தான் சிறியவன் என்ற உண்மையை உலகத்தாருக்குத் தெரிவிப்பதுபோல் , அரசனே சேக்கிழாருக்கு கவரிகளை வீசினான் .
தமிழில் உண்டான நூலான ’ பெரியபுராணம் ‘ தமிழ் நாட்டில் உலவத்தொடங்கிய பின் தேவார ஆராய்ச்சியும் , நாயன்மார் வழிபாடும் மிகுதியாயின. பக்தி வளர்ந்து , சைவம் தழைத்தது.
நாயன்மார் கதைகள் படிப்போருக்கு அமைதியும், பண்பும், உண்டாகி இறைவன் பால் பக்தியும் தழைத்து என்றென்றும் சிறப்பாக விளங்கி, மேன்மேலும் தெய்வீக அருள் கிட்டும் என்பது திண்ணம்.
Article by Smt Uma Balasubramanian (uma_kbs@yahoo.com)
“பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ"
என்று தமிழ்ப் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் , நாயன்மார்களுடைய வரலாற்றைக் கவிச் சுவையும், பக்தி ரசமும் துளும்பும் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரைப்பற்றிப் பாராட்டுகிறார்.
தமிழ் இலக்கியங்களில் நாயன்மார் கதைகளைச் சொல்லும்- பெரிய புராணத்துக்கு - ஒரு தனிச் சிறப்பு உண்டு.
அது சரித்திரங்களைச் சொல்வதனால் இதிகாசம் என்று சொல்வதற்குத் தகுந்த பெருமையை உடையது என்றே கூறலாம்.
அருள் மொழித் தேவர் என்ற பட்டப் பெயருடன் விளங்கிய சேக்கிழார், இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில், சென்னையை அடுத்த குன்றத்தூரில் அவதரித்தார்.
சோழ அரசனுடைய மந்திரியாய் விளங்கிய அவர் இயற்பெயர், இராமதேவர் என்பது, கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது.
சோழ அரசனின் விருப்பப்படி, சிவனடியார்களின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகப் பாடச் சம்மதித்து அதன்படியே திருத்தொண்டர் புராணத்தை சிதம்பரத்து இறைவன் சந்நிதானத்தில் பாடி அரங்கேற்றினார்.
சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய "திருத்தொண்டத் தொகையே" முதன் முதலாக அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிக் கூறுகிறது .
"தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று தொடங்கும் அத்திருப்பதிகத்தின் அடியை ஒற்றி , நம்பியாண்டார் நம்பிகள் நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு , "திருத்தொண்டர் திருவந்தாதி" என்ற நூலை இயற்றினார்.
அது திருத்தொண்டத் தொகைக்கு வகையாக இருக்கிறது. சேக்கிழார் அந்த அந்தாதியை விரித்துப் புராணமாகக் கூறினார்.
திருத்தொண்டத் தொகை -- தொகை நூல் ;
திருத்தொண்டர் திருவந்தாதி – வகை ;
பெரியபுராணம்—விரி .
அதனால் பெரிய புராணத்துக்குத் ” திருத்தொண்டத்தொகைவிரி “ என்ற பெயரும் வழங்கும். திருத்தொண்டர் புராணம் என்பதே சேக்கிழார் வைத்த பெயராகும் .
ஓர் ஆண்டுகாலம் பெரிய புராண அரங்கேற்றம் சிதம்பரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அரங்கேற்ற முடிவில் சேக்கிழாரை யானைமேல் ஊர்வலம் வரும்படி செய்து, புவிச் சக்ரவர்த்தியாக இருப்பினும் , தொண்டர் சீர் பரவ வல்லார்க்குரிய பெருமைக்கு முன் தான் சிறியவன் என்ற உண்மையை உலகத்தாருக்குத் தெரிவிப்பதுபோல் , அரசனே சேக்கிழாருக்கு கவரிகளை வீசினான் .
தமிழில் உண்டான நூலான ’ பெரியபுராணம் ‘ தமிழ் நாட்டில் உலவத்தொடங்கிய பின் தேவார ஆராய்ச்சியும் , நாயன்மார் வழிபாடும் மிகுதியாயின. பக்தி வளர்ந்து , சைவம் தழைத்தது.
நாயன்மார் கதைகள் படிப்போருக்கு அமைதியும், பண்பும், உண்டாகி இறைவன் பால் பக்தியும் தழைத்து என்றென்றும் சிறப்பாக விளங்கி, மேன்மேலும் தெய்வீக அருள் கிட்டும் என்பது திண்ணம்.
Article by Smt Uma Balasubramanian (uma_kbs@yahoo.com)