Post by Amritha Varshini on Jan 22, 2014 6:42:31 GMT 5.5
காக்காய்க்கு தெனோமும் சாதம் போடு
இந்த காக்காயோட உபத்ரவம் ரொம்ப தாங்கலே பெரியவா! தெருவுல போறச்சே கூட எங்கேர்ந்தோ வந்து தலைல உக்காந்துக்கறது... என்னிக்கோ ஒரு நாள் இப்டி நடக்கறதுன்னு இல்லே.. தெனோமும் இப்டியே நடக்கறது; ரொம்ப வேதனையா இருக்கு... பெரியவாதான் எனக்கு ஒரு வழி சொல்லணும். கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு இருக்கா... ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா. .. அனாதைகளா போயிடுமோ..ன்னு கவலையா இருக்கு"
"காக்காய்க்கு தெனோமும் சாதம் போடு !... தெனோமும் நல்லெண்ணெய் விளக்கு ஏத்தி வை! சனிக்கிழமையன்னிக்கு சிவன் கோவிலுக்குப் போய் ஸ்வாமி தர்சனம் பண்ணு !."
ப்ரஸாதம் வாங்கிக்கொண்டு நிம்மதியாக சென்றாள் அந்த பக்தை. பெரியவா பாரிஷதர்களிடம் சொன்னார்...
"நம்ம மடத்துக்கு, யானை,பசு, பூனை, நாய், பெருச்சாளி, எலி, குருவி, கொரங்குன்னு எல்லா ப்ராணிகளும் வருது... ஆனா, காக்கா மட்டும் வரதேயில்லை! கவனிச்சேளோ ?"
"பெரியவா சாக்ஷாத் பரமேஸ்வரனாச்சே! அதுனால சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ள நொழையக்கூட பயம்! அதான் தன்னோட வாஹனத்தை கூட அனுப்பறதில்லே !".... அழகாக பதில் சொன்னார் ஒரு பாரிஷதர். பெரியவா புன்முறுவல் பூத்தார்.
"நம்ம அஹங்கள்ள காக்காய்க்கு சாதம் போடறச்சே, "காக்காய், காக்காய்..ன்னோ காகம் காகம்..வா!வா! ..ன்னோ கூப்டறதில்லே! கா....கா..ன்னுதானே சொல்றா?... அப்டீன்னா என்ன அர்த்தம்?"
"காக்கா...சாப்ட வா!..ன்னு அர்த்தம்" என்றார் ஒரு பாரிஷதர்.
"அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! கா.....கா.....ன்னா, காப்பாத்து! காப்பாத்து..ன்னு அர்த்தம். நம்ம பித்ருக்கள் எல்லாருமே காக்கா ஸ்வரூபமா வர்றதா ஐதீகம்! கா....கா......ன்னா, பித்ருக்களே! எங்களை ரக்ஷியுங்கோ!..ன்னு அர்த்தம் சொல்லலாமோல்லியோ? அதுமட்டுமில்லே...பகவான் எல்லா ஜந்துக்கள்கிட்டயும் ஆத்மாவா இருக்கான். காக்காய்க்குள்ளேயும் இருக்கத்தானே செய்வான்? பகவானுக்கு நைவேத்யம் பண்ணறச்சே... அவன் சாப்டறதை நம்மளால பாக்க முடியலே! அவனே காக்காயா வந்து, நாம போடற சாதத்தை சாப்பிடறச்சே, நம்மளால பாக்க முடியறது. ஏதோ ஒரு ஜீவன், வினைப்பயனா,காக்காயா பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு, அதாவுது, நம்ம ஸரீரத்துக்குள்ள இருக்கற ஆத்மாவுக்கு, ஸ்வரூபம்தான் வேறே! சாதம் போடறோம்! இது அத்வைதம்தானே?"
அத்வைதம் இத்தனை எளிதா? அத்வைதம் ஆஸ்ரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறதா! அதைத்தான்
மஹாகவி "காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று அனுபவத்தில் பாடியிருக்கிறார்!