Post by jksivan on Jan 13, 2014 6:46:34 GMT 5.5
மார்கழி 29ம் நாள்
''சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்''
'' ஏண்டீ ஆண்டாள் நாமெல்லாம் இப்போ ரொம்ப சாத்வீகமாகவே சாப்பிடுறோம் இல்லே. நம்ப எல்லாம் பழயபடி இல்லையே. கிருஷ்ணனை சந்திச்சதும் ரொம்பவே மாறிட்டோம் இல்லே.''
''இப்படி இருக்கிறது உங்களுக்கு சந்தோஷம் தானே.''
''இதிலென்னடி சந்தேகம் உனக்கு. மனசு ரொம்ப லேசா இருக்கு. காத்திலே பறக்கிராப்போலே இருக்குடி''.
ஆகவே, சாத்வீக உணவு உண்பதன் மூலம் எப்போதுமே செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள் ஆண்டாள் மூலம் கோதை நாச்சியார்.
+++
''சுவாமி இத்தனை நாளா நீங்க சொல்ற திருப்பாவை பார்க்கறதுக்கு சின்னதா இருந்தாலும் உள்ளே ரொம்ப பெரிய விஷயங்களை அடக்கிண்டிருக்கு என்றார் வில்லிப்புத்தூர் வட பத்ர சாய் கோவில் பட்டாச்சர்யார்.''
''கோதை, திருப்பாவையிலே யோகங்களைப் பத்தியெல்லாம், பரம ரகசியமாக வச்சு பாடியிருக்கா. நான் கவனிச்ச வரைக்கும் நம் உடலில் பல முக்ய ஆதாரச் சக்கரங்கள் இருப்பது தெரியுமோ? அதில் அதி முக்யமானது தான் முதல்லே மூலாதாரம் என்கிற குண்டலினி. ரொம்ப சக்தி அதுக்கு. பார்க்க சுருண்டு படுத்திண்டிருக்கிற பாம்பு மாதிரி இருக்கு. இதை உலுக்கு உலுக்கி எழுப்பணும். அதுக்கு முறையாக தெரிஞ்சவா கிட்ட யோகம் கத்துக்கணும். உச்சாணிக்கிளைக்கு அதாவது நமது சிர்ரசிலே இருக்கிற சக்ரம் (அது பேர் சஹஸ்ராரம்) கிட்டே கொண்டு போய் சேக்கணும்.
இதைத்தான் ஒரு பாசுரத்திலே ( 6வது நாள் )
''கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்''
என்று சூசகமாக சொல்றாள்.
''சுவாமி, வாஸ்தவமான பேச்சு.. ரொம்ப யோசிச்சா, இந்த திருப்பாவையோட உள்ளர்த்தங்களைஎல்லாம் தெரிஞ்சிக்க ஒரு ஆயுசு போததுன்னே தோணறது.''
பரமாத்மாவோட ஜீவாத்மா கலக்கிறது தான் மனித பிறப்போடைய லட்சியம். (கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்)
இது நம்மாலே முடியுமா என்று பார்க்கவேகூடது. இது ஏன் நம்மாலே முடியாது என்று முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்.
நம்பிக்கை மனதில் இருப்பதுடன் இதயத்தில் ஆர்வம் எழவேண்டும். நெஞ்சில் உறுதி தானாகவே வந்தால் காரியம் கைகூட்டும்.
''சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்''
'' ஏண்டீ ஆண்டாள் நாமெல்லாம் இப்போ ரொம்ப சாத்வீகமாகவே சாப்பிடுறோம் இல்லே. நம்ப எல்லாம் பழயபடி இல்லையே. கிருஷ்ணனை சந்திச்சதும் ரொம்பவே மாறிட்டோம் இல்லே.''
''இப்படி இருக்கிறது உங்களுக்கு சந்தோஷம் தானே.''
''இதிலென்னடி சந்தேகம் உனக்கு. மனசு ரொம்ப லேசா இருக்கு. காத்திலே பறக்கிராப்போலே இருக்குடி''.
ஆகவே, சாத்வீக உணவு உண்பதன் மூலம் எப்போதுமே செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள் ஆண்டாள் மூலம் கோதை நாச்சியார்.
+++
''சுவாமி இத்தனை நாளா நீங்க சொல்ற திருப்பாவை பார்க்கறதுக்கு சின்னதா இருந்தாலும் உள்ளே ரொம்ப பெரிய விஷயங்களை அடக்கிண்டிருக்கு என்றார் வில்லிப்புத்தூர் வட பத்ர சாய் கோவில் பட்டாச்சர்யார்.''
''கோதை, திருப்பாவையிலே யோகங்களைப் பத்தியெல்லாம், பரம ரகசியமாக வச்சு பாடியிருக்கா. நான் கவனிச்ச வரைக்கும் நம் உடலில் பல முக்ய ஆதாரச் சக்கரங்கள் இருப்பது தெரியுமோ? அதில் அதி முக்யமானது தான் முதல்லே மூலாதாரம் என்கிற குண்டலினி. ரொம்ப சக்தி அதுக்கு. பார்க்க சுருண்டு படுத்திண்டிருக்கிற பாம்பு மாதிரி இருக்கு. இதை உலுக்கு உலுக்கி எழுப்பணும். அதுக்கு முறையாக தெரிஞ்சவா கிட்ட யோகம் கத்துக்கணும். உச்சாணிக்கிளைக்கு அதாவது நமது சிர்ரசிலே இருக்கிற சக்ரம் (அது பேர் சஹஸ்ராரம்) கிட்டே கொண்டு போய் சேக்கணும்.
இதைத்தான் ஒரு பாசுரத்திலே ( 6வது நாள் )
''கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்''
என்று சூசகமாக சொல்றாள்.
''சுவாமி, வாஸ்தவமான பேச்சு.. ரொம்ப யோசிச்சா, இந்த திருப்பாவையோட உள்ளர்த்தங்களைஎல்லாம் தெரிஞ்சிக்க ஒரு ஆயுசு போததுன்னே தோணறது.''
பரமாத்மாவோட ஜீவாத்மா கலக்கிறது தான் மனித பிறப்போடைய லட்சியம். (கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்)
இது நம்மாலே முடியுமா என்று பார்க்கவேகூடது. இது ஏன் நம்மாலே முடியாது என்று முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்.
நம்பிக்கை மனதில் இருப்பதுடன் இதயத்தில் ஆர்வம் எழவேண்டும். நெஞ்சில் உறுதி தானாகவே வந்தால் காரியம் கைகூட்டும்.