Post by jksivan on Jan 1, 2014 16:17:19 GMT 5.5
மார்கழி 20வது நாள்
மார்கழி 20வது நாளான இன்று ஆண்டாளும் சிறுமியர்களும் வழக்கம்போலவே இன்று காலையும் நந்தகோபன் மாளிகை சென்று துயிலெழுப்ப தயாராயினர் . யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பது ஆண்டாள் என்கிற கெட்டிக்கார சிறுமிக்கு
சுலபமாக தெரிந்து விட்டது. தங்கள் பாவை நோன்பு பலனளிக்க எவர்ஆசியும் அருளும் தேவையோ அவரையே இயங்க வைக்கும் சக்தி நப்பின்னை பிராட்டியே என்பதால் ஆண்டாளின் சிறுமியர் குழாம் நப்பின்னையையே வளைய வந்ததில் என்ன ஆச்சர்யம்! மாளிகையில் முன் வாசலில் அவர்களின் இனிமையான குரலில் நாராயணனையும்
கிருஷ்ணனையும் போற்றி பாடினர்.
ஆண்டாள் வேண்டினாள்: ''முப்பத்து முக்கோடி தேவர்கள் வணங்கும் தேவாதிதேவா,
நாராயணா, கேளாமலேயே அனைவரையும் ரட்சிக்கும் தேவனே துயிலெழு. அம்மா, நப்பின்னை பிராட்டியே, உலக நாயகியே, நீயும் துயிலெழு. உங்கள் ஆசியுடன் எங்கள் நோன்பு நன்று தொடர வாழ்த்தி அருளவேண்டும். தூய மனங்களில் என்றும் வீற்றிருக்கும் நாராயணனும் பிராட்டியும் தேவர்களை எல்லாம் காத்ததுபோல் நம்மையும், நாம் வேண்டாமலேயே, கேளாமலேயே, காப்பார்கள்.
அச்சிறுமிகள் அன்றும் யமுனை நீராடி விரதம் வழக்கம் போல் கொண்டாடினர் கை நிறைய புஷ்பங்களை எடுத்து கொண்டு வாய் நிறைய நாமாவளி சொல்லி கொண்டு வீதி வழியாக அருகே இருந்த பெருமாள் கோயில் சென்று வழிபட்டு அன்றைய விரதம் முடிந்தது.
மார்கழியில் இந்த புனித நாளில் கீழ் திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஊஞ்சல் சேவையுடன், மாடவீதி புறப்பாடு. காலம் மாறலாம். காட்சிகள் மாறுவதில்லை!!. கோலத்தில் சற்று வேறுபாடு. அவ்வளவே!
எப்போதோ யார் செய்த புண்ணியமோ, நமக்கெல்லாம் அந்த சிறுமி கோதை ஆண்டாளாக உருவேடுத்துக்கொண்டு அளித்த புதையல் இதோ
''முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்''
வாசலில் மாவு எடுத்து பெரிதாக கோலம் போட்டிருந்தாள் கோதை. செடி கோடிகலை தத்ரூபமாக வரைந்திருந்தாள் அல்லாவா? அவளுக்கு மிகவும் நெருக்கமான வைதேகி என்கிற பசு அந்த கோலத்தை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. பாவம் அந்த ப்பசு. செடிகொடிகள் நிஜம் என்று நம்பி ஆர்வமுடன் நக்கி தின்ன முயற்ச்சித்தது. கோலம் களைந்து விட்டது. நமக்கென்றால் மிக்க கோபம் வரும். வாயில்லா ஜீவன் என்று கூட பார்க்காமல் ஒரு கொம்பினால் அதை அடித்து விரட்டுவோம். ஆண்டாள் நம் போல் இல்லையே. மெச்சினாள் . கழுத்தைக் கட்டிக்கொண்டு '' வைதேகி ஏமாந்தாயா, நிஜம் என்று நம்பின நீ எமாரக்கூடாதே நிஜமாகவே உனக்கு இல்லை தருகிறேன் என்று உள்ளே சென்று நிறைய அகத்திக்கீரை கட்டாக கொண்டு வந்து வைதேகியின் வாயின் ஊட்டினாள் . வைதேகியின் கண்களில் தெரிந்த நிறைய வெளிப்பட்ட நன்றியையும், அன்பையும், பாசத்தையும் எனக்கு எழுதத் தெரியவில்லை. வார்த்தை தேடியும் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.
இப்போதெல்லாம் வடபத்ர சாயி கோவிலில் விஷ்ணு சித்தரைச்சுற்றி நிறைய பக்தர்கள் அன்றாடம் ஆண்டாள் எழுதிய பாசுரங்களை படிக்கச்சொல்லி கேட்டு அர்த்தமும் அவர் சொல்லி புரிந்துகொண்டு மகிழ்கிறார்களே. மேற்கண்ட 20வது நாள் பாசுரம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மார்கழி 20வது நாளான இன்று ஆண்டாளும் சிறுமியர்களும் வழக்கம்போலவே இன்று காலையும் நந்தகோபன் மாளிகை சென்று துயிலெழுப்ப தயாராயினர் . யாரைப் பிடித்தால் காரியம் ஆகும் என்பது ஆண்டாள் என்கிற கெட்டிக்கார சிறுமிக்கு
சுலபமாக தெரிந்து விட்டது. தங்கள் பாவை நோன்பு பலனளிக்க எவர்ஆசியும் அருளும் தேவையோ அவரையே இயங்க வைக்கும் சக்தி நப்பின்னை பிராட்டியே என்பதால் ஆண்டாளின் சிறுமியர் குழாம் நப்பின்னையையே வளைய வந்ததில் என்ன ஆச்சர்யம்! மாளிகையில் முன் வாசலில் அவர்களின் இனிமையான குரலில் நாராயணனையும்
கிருஷ்ணனையும் போற்றி பாடினர்.
ஆண்டாள் வேண்டினாள்: ''முப்பத்து முக்கோடி தேவர்கள் வணங்கும் தேவாதிதேவா,
நாராயணா, கேளாமலேயே அனைவரையும் ரட்சிக்கும் தேவனே துயிலெழு. அம்மா, நப்பின்னை பிராட்டியே, உலக நாயகியே, நீயும் துயிலெழு. உங்கள் ஆசியுடன் எங்கள் நோன்பு நன்று தொடர வாழ்த்தி அருளவேண்டும். தூய மனங்களில் என்றும் வீற்றிருக்கும் நாராயணனும் பிராட்டியும் தேவர்களை எல்லாம் காத்ததுபோல் நம்மையும், நாம் வேண்டாமலேயே, கேளாமலேயே, காப்பார்கள்.
அச்சிறுமிகள் அன்றும் யமுனை நீராடி விரதம் வழக்கம் போல் கொண்டாடினர் கை நிறைய புஷ்பங்களை எடுத்து கொண்டு வாய் நிறைய நாமாவளி சொல்லி கொண்டு வீதி வழியாக அருகே இருந்த பெருமாள் கோயில் சென்று வழிபட்டு அன்றைய விரதம் முடிந்தது.
மார்கழியில் இந்த புனித நாளில் கீழ் திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் ஊஞ்சல் சேவையுடன், மாடவீதி புறப்பாடு. காலம் மாறலாம். காட்சிகள் மாறுவதில்லை!!. கோலத்தில் சற்று வேறுபாடு. அவ்வளவே!
எப்போதோ யார் செய்த புண்ணியமோ, நமக்கெல்லாம் அந்த சிறுமி கோதை ஆண்டாளாக உருவேடுத்துக்கொண்டு அளித்த புதையல் இதோ
''முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்''
வாசலில் மாவு எடுத்து பெரிதாக கோலம் போட்டிருந்தாள் கோதை. செடி கோடிகலை தத்ரூபமாக வரைந்திருந்தாள் அல்லாவா? அவளுக்கு மிகவும் நெருக்கமான வைதேகி என்கிற பசு அந்த கோலத்தை அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்தது. பாவம் அந்த ப்பசு. செடிகொடிகள் நிஜம் என்று நம்பி ஆர்வமுடன் நக்கி தின்ன முயற்ச்சித்தது. கோலம் களைந்து விட்டது. நமக்கென்றால் மிக்க கோபம் வரும். வாயில்லா ஜீவன் என்று கூட பார்க்காமல் ஒரு கொம்பினால் அதை அடித்து விரட்டுவோம். ஆண்டாள் நம் போல் இல்லையே. மெச்சினாள் . கழுத்தைக் கட்டிக்கொண்டு '' வைதேகி ஏமாந்தாயா, நிஜம் என்று நம்பின நீ எமாரக்கூடாதே நிஜமாகவே உனக்கு இல்லை தருகிறேன் என்று உள்ளே சென்று நிறைய அகத்திக்கீரை கட்டாக கொண்டு வந்து வைதேகியின் வாயின் ஊட்டினாள் . வைதேகியின் கண்களில் தெரிந்த நிறைய வெளிப்பட்ட நன்றியையும், அன்பையும், பாசத்தையும் எனக்கு எழுதத் தெரியவில்லை. வார்த்தை தேடியும் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.
இப்போதெல்லாம் வடபத்ர சாயி கோவிலில் விஷ்ணு சித்தரைச்சுற்றி நிறைய பக்தர்கள் அன்றாடம் ஆண்டாள் எழுதிய பாசுரங்களை படிக்கச்சொல்லி கேட்டு அர்த்தமும் அவர் சொல்லி புரிந்துகொண்டு மகிழ்கிறார்களே. மேற்கண்ட 20வது நாள் பாசுரம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.