Post by jksivan on Dec 17, 2013 7:33:13 GMT 5.5
மார்கழி 10வது நாள்
மார்கழி பத்து. இன்றும் விடப் போவதில்லை, வழக்கம் போல் கதவை பிளப்போம்.
''பெண்களே உங்களுக்கு ராமனைத் தெரியுமா?
''ரொம்பத் தெரியாதுடி ஆண்டாள்? பாட்டி சொல்வாளே அந்த ராமன் தானே? கோவில்லே வில் வச்சிண்டு நிக்கறவர்? ''
''சொல்றேன் கேளுங்கோ! போன ஜன்ம புண்யத்தாலே நாம பாவை நோன்பிலே புகழ்ந்து பாடும் கிருஷ்ணனாக வந்த நாராயணன் அதற்கு முன்னாலே ராமனாக வந்து நல்ல வேலை செய்தான். ராவணன் என்கிற அரக்கனை கொல்வதற்கு முன்னால் ராமனோடு சண்டை போட அவனது தம்பி கும்பகர்ணன் என்கிற பலம் கொண்ட அரக்கன் வந்தான். ஆனால் அவன் ஒரு வரத்தைத் தப்பாக கேட்டு அதனால் எப்போதும் மீளாத் தூக்கத்தில் எப்போதும் மாட்டிக்கொண்டான். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அந்த பொல்லாத ராமன், கும்பர்கணன், தன்னிடம் சண்டையிட்டு இறந்துபோவதற்கு முன்னால் அவனுடைய மீளா தூக்கத்தை கும்பர்கணன் இந்த வீட்டில் இருக்கும் நமது தோழியிடம் கொடுக்க வைத்தான் பார்!!
சீக்ரம் எழுந்து ஓடி வந்து கதவை திற. நின்னு நின்னு 11ம் நாள் வந்துடும் போல இருக்கு!!''
இதைக்கேட்டு அனைவரும் சிரித்தார்கள்.
இதுவரை தூங்கிய அந்தப் பெண்ணும் வெட்கப்பட்டுக் கொண்டு எழுந்து வெளியே வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
அனைவரும் யமுனையில் நீராடி, அந்த மாயக்ரிஷ்ணனை, வாயாரப்பாடி புகழ்ந்தனர். துளசி கமகமக்க மாலையை போட்டுண்டு, நாம் பாடும் அவன் நாமங்களை நம் வாயாலே கேக்க காத்திண்டிருக்கான் பார்த்தீர்களா அந்த கிருஷ்ணன் ! . இன்னிக்கு உண்டான பாவை நோன்பை சீக்கிரம் முடிப்போம்.
உற்சாகம் பொங்க அவர்கள் நோன்பை முடித்து வீடு திரும்பினர். ஆயர்பாடியை விட்டு நாமும் வில்லிப்புத்தூர் செல்வோம்.
+++
ஆண்டாளும் அவளது தோழியரும் எப்படி அந்த தூங்குமூஞ்சி பெண்ணை எழுப்பினர் என்பதை எவ்வளவு அழகாக தனது ஈடிணையற்ற தமிழில் எளிய நடையில் கோதை பாசுரமாக எழுதியுள்ளாள் என்று வியக்கும் விஷ்ணு சித்தரோடு சேர்ந்து ரசித்து நாமும் பலத்த கரக்கம்பமும் சிரக்கம்பமும் செய்வோம்.
' நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.''
விஷ்ணு சித்தர் பூஜா விக்ரஹங்களை அபிஷேகம் செய்து கொண்டே மேற்கண்ட பாசுரத்தை பாடினார்.
சொல்லாமல் சொல்லி ஆண்டாளாக மாறி கோதை எதை விளக்கினாள் என்று அவர் மனம் உள்ளே ஆராய்ந்து கொண்டிருந்தது
''சுவர்க்கம்'' என்று சொல்வது அந்த நாராயணனோடு ஒன்றுவது. ''அருங்கலமே'' என்று எதை கோதை குறிப்பிடுகிறாள். ஒருவேளை, இந்த உடலே ஒரு பாத்திரம் அதில் அந்த நாராயணனை நிரப்பவேண்டும் என்பதற்காகவா? உடைக்கும் கலம் என்று ஒரு பொருள் உண்டே1 . எது உடை? நாராயணன் என்கிற அந்த கிருஷ்ணன், ரங்கனின் பெருமைகளை வாய் சொல்வது தான் இந்த உடலுக்கு உடை, அவனை சுற்றி வந்து சரண் புகுவது தான் இந்த உடலுக்கு உடையோ? ஆபரணமோ?
மார்கழி பத்து. இன்றும் விடப் போவதில்லை, வழக்கம் போல் கதவை பிளப்போம்.
''பெண்களே உங்களுக்கு ராமனைத் தெரியுமா?
''ரொம்பத் தெரியாதுடி ஆண்டாள்? பாட்டி சொல்வாளே அந்த ராமன் தானே? கோவில்லே வில் வச்சிண்டு நிக்கறவர்? ''
''சொல்றேன் கேளுங்கோ! போன ஜன்ம புண்யத்தாலே நாம பாவை நோன்பிலே புகழ்ந்து பாடும் கிருஷ்ணனாக வந்த நாராயணன் அதற்கு முன்னாலே ராமனாக வந்து நல்ல வேலை செய்தான். ராவணன் என்கிற அரக்கனை கொல்வதற்கு முன்னால் ராமனோடு சண்டை போட அவனது தம்பி கும்பகர்ணன் என்கிற பலம் கொண்ட அரக்கன் வந்தான். ஆனால் அவன் ஒரு வரத்தைத் தப்பாக கேட்டு அதனால் எப்போதும் மீளாத் தூக்கத்தில் எப்போதும் மாட்டிக்கொண்டான். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அந்த பொல்லாத ராமன், கும்பர்கணன், தன்னிடம் சண்டையிட்டு இறந்துபோவதற்கு முன்னால் அவனுடைய மீளா தூக்கத்தை கும்பர்கணன் இந்த வீட்டில் இருக்கும் நமது தோழியிடம் கொடுக்க வைத்தான் பார்!!
சீக்ரம் எழுந்து ஓடி வந்து கதவை திற. நின்னு நின்னு 11ம் நாள் வந்துடும் போல இருக்கு!!''
இதைக்கேட்டு அனைவரும் சிரித்தார்கள்.
இதுவரை தூங்கிய அந்தப் பெண்ணும் வெட்கப்பட்டுக் கொண்டு எழுந்து வெளியே வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
அனைவரும் யமுனையில் நீராடி, அந்த மாயக்ரிஷ்ணனை, வாயாரப்பாடி புகழ்ந்தனர். துளசி கமகமக்க மாலையை போட்டுண்டு, நாம் பாடும் அவன் நாமங்களை நம் வாயாலே கேக்க காத்திண்டிருக்கான் பார்த்தீர்களா அந்த கிருஷ்ணன் ! . இன்னிக்கு உண்டான பாவை நோன்பை சீக்கிரம் முடிப்போம்.
உற்சாகம் பொங்க அவர்கள் நோன்பை முடித்து வீடு திரும்பினர். ஆயர்பாடியை விட்டு நாமும் வில்லிப்புத்தூர் செல்வோம்.
+++
ஆண்டாளும் அவளது தோழியரும் எப்படி அந்த தூங்குமூஞ்சி பெண்ணை எழுப்பினர் என்பதை எவ்வளவு அழகாக தனது ஈடிணையற்ற தமிழில் எளிய நடையில் கோதை பாசுரமாக எழுதியுள்ளாள் என்று வியக்கும் விஷ்ணு சித்தரோடு சேர்ந்து ரசித்து நாமும் பலத்த கரக்கம்பமும் சிரக்கம்பமும் செய்வோம்.
' நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.''
விஷ்ணு சித்தர் பூஜா விக்ரஹங்களை அபிஷேகம் செய்து கொண்டே மேற்கண்ட பாசுரத்தை பாடினார்.
சொல்லாமல் சொல்லி ஆண்டாளாக மாறி கோதை எதை விளக்கினாள் என்று அவர் மனம் உள்ளே ஆராய்ந்து கொண்டிருந்தது
''சுவர்க்கம்'' என்று சொல்வது அந்த நாராயணனோடு ஒன்றுவது. ''அருங்கலமே'' என்று எதை கோதை குறிப்பிடுகிறாள். ஒருவேளை, இந்த உடலே ஒரு பாத்திரம் அதில் அந்த நாராயணனை நிரப்பவேண்டும் என்பதற்காகவா? உடைக்கும் கலம் என்று ஒரு பொருள் உண்டே1 . எது உடை? நாராயணன் என்கிற அந்த கிருஷ்ணன், ரங்கனின் பெருமைகளை வாய் சொல்வது தான் இந்த உடலுக்கு உடை, அவனை சுற்றி வந்து சரண் புகுவது தான் இந்த உடலுக்கு உடையோ? ஆபரணமோ?