Post by jksivan on Dec 17, 2013 7:24:43 GMT 5.5
மார்கழி 8ம் நாள்,
இன்றும், ஆண்டாள் மற்ற சில பெண்களை துயிலெழுப்பி கூட்டி சென்று பாவை நோன்பை வழக்கம் போல் தொடர்ந்தாள். அந்தச் சிறிய கிராமத்தில் என்ன இருக்கிறது? ஒரு பக்கம் உயிர்நாடியாக ஓடும் யமுனை, ஊர்க்கோடியில் பெருமாள் கோயில், நீண்ட வயல்கள், மரங்கள், செடி கொடிகள், கோபர்களின் மாளிகைகள், வீடுகள்,ஒரு சில வீதிகள், தூர தெரியும் காடு, மலை,அங்கே தான் யாரும் செல்வதில்லையே!
''என்னடி இது, ஆண்டாள் வந்து எழுப்பினா தான் நோன்புக்கு வரதுன்னு வழக்கமாயிட்டுது. நாம வந்து கதவை தட்டி எழுப்பினா தான் வரதுகள்"" என்று ஒரு சிறுமி பரிந்து பேசினாள்
''வாங்க போய் எழுப்புவோம் அவர்களை எல்லாம்'' என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் ஆண்டாள்
''எழுந்திருங்கோ உள்ளேயிருக்கும் எருமைகளே !! கிழக்கே வெளுத்துடுத்து. வெளிச்சம் வந்ததாலே வெளியிலே கறவை எருமை எல்லாம் கூட நிதானமா அசைந்து மேச்சலுக்கு வந்துடுத்து. சிலது காத்திருக்கு', எங்களைப் போல!! அந்த கிருஷ்ணனை, சாணுரனை வாய் பிளந்து கொன்றவனை, தேவாதி தேவனை எவ்வளவு போற்றினாலும் மேலும் மேலும் புகழ்ந்து பாட வைக்கிறவனை பூஜிப்போம் எழுந்து வாங்கோ.!!''
++++
மேற்கண்ட ஆயர்பாடி ஆண்டாளின் துயிலெழுப்பலை வில்லிப்புத்தூர் கோதை பல ஆயிரம் வருஷங்கள் கழித்து எப்படி யூகித்து பாசுரமாய் எழுதினாள் என்று யோசிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறதே! எவ்வளவு அழகாக அந்த கண்ணனின் வீரத்தை, அவன் சானூரனை வதம் செய்த காட்சியை மனதில் கொண்டு போற்றி, அந்த சிறுமியரின் நோன்பு சிறப்பாக நடைபெற மாதவனைப் போற்றி பாட அழைக்கிறாள். இதோ அந்தப்பாடல்.
''கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
''
சற்று தாமதமாக எழுந்த பெரியாழ்வார் இந்த பாடலைத் தானே படித்து மகிழ்ந்து அதன் உள்ளர்த்தத்தை அழகாக புரிந்து புளகாங்கித மடைகிறார்:
ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் இதைவிட சரணாகதி அடைவதை யாரும் சுருக்கமாக சொல்லமுடியாது. தூக்கத்தை விட்டு எழும்பு என்பதே உலகமாயையிலிருந்து விடுபடு, பரமனடி பாடு. மோக்ஷம் பெறு என்கிற விஷயம் தான். வெளிச்சம் வந்துவிட்டது என்பதே உன்னை நீ புரிந்துகொண்டாய் என்று பொருள் கொள்ளலாம். இருட்டு என்பதே இந்த பாசுரங்களில் அஞ்ஞானம் தான். கிழக்கே வெளுத்தது என்பது பனியைப்போக்கும் சூர்யன். மாயையிலிருந்து நம்மை நீக்கும் கண்ணன் பாதங்களின் சுடரொளி.
இன்றும், ஆண்டாள் மற்ற சில பெண்களை துயிலெழுப்பி கூட்டி சென்று பாவை நோன்பை வழக்கம் போல் தொடர்ந்தாள். அந்தச் சிறிய கிராமத்தில் என்ன இருக்கிறது? ஒரு பக்கம் உயிர்நாடியாக ஓடும் யமுனை, ஊர்க்கோடியில் பெருமாள் கோயில், நீண்ட வயல்கள், மரங்கள், செடி கொடிகள், கோபர்களின் மாளிகைகள், வீடுகள்,ஒரு சில வீதிகள், தூர தெரியும் காடு, மலை,அங்கே தான் யாரும் செல்வதில்லையே!
''என்னடி இது, ஆண்டாள் வந்து எழுப்பினா தான் நோன்புக்கு வரதுன்னு வழக்கமாயிட்டுது. நாம வந்து கதவை தட்டி எழுப்பினா தான் வரதுகள்"" என்று ஒரு சிறுமி பரிந்து பேசினாள்
''வாங்க போய் எழுப்புவோம் அவர்களை எல்லாம்'' என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் ஆண்டாள்
''எழுந்திருங்கோ உள்ளேயிருக்கும் எருமைகளே !! கிழக்கே வெளுத்துடுத்து. வெளிச்சம் வந்ததாலே வெளியிலே கறவை எருமை எல்லாம் கூட நிதானமா அசைந்து மேச்சலுக்கு வந்துடுத்து. சிலது காத்திருக்கு', எங்களைப் போல!! அந்த கிருஷ்ணனை, சாணுரனை வாய் பிளந்து கொன்றவனை, தேவாதி தேவனை எவ்வளவு போற்றினாலும் மேலும் மேலும் புகழ்ந்து பாட வைக்கிறவனை பூஜிப்போம் எழுந்து வாங்கோ.!!''
++++
மேற்கண்ட ஆயர்பாடி ஆண்டாளின் துயிலெழுப்பலை வில்லிப்புத்தூர் கோதை பல ஆயிரம் வருஷங்கள் கழித்து எப்படி யூகித்து பாசுரமாய் எழுதினாள் என்று யோசிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறதே! எவ்வளவு அழகாக அந்த கண்ணனின் வீரத்தை, அவன் சானூரனை வதம் செய்த காட்சியை மனதில் கொண்டு போற்றி, அந்த சிறுமியரின் நோன்பு சிறப்பாக நடைபெற மாதவனைப் போற்றி பாட அழைக்கிறாள். இதோ அந்தப்பாடல்.
''கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
''
சற்று தாமதமாக எழுந்த பெரியாழ்வார் இந்த பாடலைத் தானே படித்து மகிழ்ந்து அதன் உள்ளர்த்தத்தை அழகாக புரிந்து புளகாங்கித மடைகிறார்:
ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால் இதைவிட சரணாகதி அடைவதை யாரும் சுருக்கமாக சொல்லமுடியாது. தூக்கத்தை விட்டு எழும்பு என்பதே உலகமாயையிலிருந்து விடுபடு, பரமனடி பாடு. மோக்ஷம் பெறு என்கிற விஷயம் தான். வெளிச்சம் வந்துவிட்டது என்பதே உன்னை நீ புரிந்துகொண்டாய் என்று பொருள் கொள்ளலாம். இருட்டு என்பதே இந்த பாசுரங்களில் அஞ்ஞானம் தான். கிழக்கே வெளுத்தது என்பது பனியைப்போக்கும் சூர்யன். மாயையிலிருந்து நம்மை நீக்கும் கண்ணன் பாதங்களின் சுடரொளி.