Post by jksivan on Dec 6, 2013 4:59:14 GMT 5.5
மார்கழி 2ம் நாள்
''எப்போ பொழுது விடியும்னு காத்திண்டிருக்கேன் கொழந்தே. இன்னிக்கு என்ன பாசுரம் எழுதியிருக்கே படி ''
''இதோ முடிச்சுட்டேன் பா'' சுடர் விளக்கை தூண்டி விட்டு கடைசி வார்த்தையை திருத்தி எழுதிவிட்டு தனக்குள் ஒரு தடவை பாடிப் பார்த்துக்கொண்டே படிக்கிறாள் தனது கையில் உள்ள ஓலைச்சுவடியை கோதை.
''வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்''
''ரங்கநாதா'' என்று சாஷ்டாங்கமாக பெருமாளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறார் விஷ்ணு சித்தர்.
''அம்மா தாயே, எவ்வளவு சுலபமாக ஒன்றுமறியாத குக் கிராமத்து இடைப்பெண்கள் புரிந்து கொள்ளும்படியாக எளிய வார்த்தையில் எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிராயே. எவ்வளவு நேர்த்தி எவ்வளவு அழகு. '' பூரித்துப் போனார் விஷ்ணுசித்தர்.
இரண்டாவது பாசுரத்தில், பாவை நோன்பு விதிகளைச் சொல்லுகிறாள் கோதை நாச்சியார், (இதையே பின்னால் 27வது பாசுரத்தில், இந்த பெண்களின் நோன்பை சிறந்த விதமாக முடித்தால் அதன் பயனாக, நல்ல ஆடை, அணிமணிகள் அணிந்து கொள்வோம், நெய் மற்றும் அதோடு கலந்து நிறைய பால் சாதம் உண்ணுவோம். அதாவது எவற்றை எல்லாம் நோன்புக்காகத் விட்டுக்கொடுத்தோமோ அதையெல்லாம் மீண்டும் கைக்கொள்வோம் என்கிறாள் ஸ்ரீ கோதை நாச்சியார்.
நோன்பு நோர்கும்போது பக்தி நம்பிக்கை கலந்து அழகு சாதனங்கள்
நல்ல அலங்காரங்கள்,ருசியான உணவு வகைகளைத் தொடாமல் மனதில்உறுதியாக 'செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்'
அதாவது, செய்யக்கூடாதவற்றைச் செய்ய மாட்டோம் ,தீமை யானவற்றை, பொய் சொல்லுதல், புறங்கூறுதல் முதலியவற்றைச்
செய்யாதுநல்லனவற்றையே பேசுவோம் என்று திட மனது தேவை என்றுகோதை கூறுகிறாள்.
இது எவ்வாறு ஆயர்பாடியில் நடந்தது என்று பார்ப்போமா?
"'இதென்ன புதுசா இத்தனை நாள் இல்லாமல் இப்போ "பாவை நோன்பு? நாமெல்லாம் இதை பண்ணதே இல்லை?. அதை எப்படி பண்ணுவது, எதற்காக என்று சொன்னால் புரிந்து கொண்டு ' சாஸ்திரம் என்ன சொல்கிறதோ அப்படியே "மடி"யாக பண்ணலாம் , ஆண்டாள் நீயே சொல்லு?:
"கேளுங்க சொல்றேன்,
''பாற்கடலில் நாராயணன் பாம்பு மேலே படுத்துக்கொண்டு உலகத்தல் நாம் எல்லோரையும் ரட்சிக்கிறான் என்று உங்களுக்கே தெரியும். நாம்செய்யும் பாவை நோன்பு அவனைப் பாடி போற்றி வேண்டுவது
எப்படியென்றால், நாம் குளித்து தலையை வாராமல் அள்ளி முடிந்து கொண்டு, மை பவுடர் எல்லாம் போட்டுக்காமல், விரதம் இருக்கணும்..அப்போ பால், பழம், தயிர், வெண்ணை இதெல்லாம்
வயிற்றில் ரொப்ப கூடாது. உள்ளே மட்டும் இல்லை,வெளியேயும், பொய், பித்தலாட்டம், கோபம், ஆத்திரம் எல்லாம் யார் கிட்டயும் கூடாது. ''
"ஏண்டீ, நாம இவ்வளவு கஷ்டப்படணுமா? என்றாள் ஒரு சிறுமி.
"எனக்கு தெரியலை,ஆண்டாளையே கேட்போம், அப்படியென்ன அவர் பெரிய கடவுள், நீயே சொல்லேன்? என்றாள் மற்றொருவள்.
அதற்குள் அவர்கள் யமுனைக்கு சென்று குளித்து விட்டு நாராயணன்
மேல் பாடி வீடுதிரும்பினர்.
“என்னடி நான் கேட்டேன் நீ ஒன்றும் சொல்லவே இல்லை?
“நாளைக்கு காலம்பர உங்களுக்கு விவரமா சொல்றேன் நேரமாச்சு இப்போ. கன்னுக்குட்டி காத்திண்டிருக்கும் பசியா அதுக்கு பால் ஊட்டணும் முதல்லே'. பசு மடி நிறைய பால் வைச்சுண்டு கறக்க காத்திருக்கும் ' என்றாள் ஆண்டாள்.
''எப்போ பொழுது விடியும்னு காத்திண்டிருக்கேன் கொழந்தே. இன்னிக்கு என்ன பாசுரம் எழுதியிருக்கே படி ''
''இதோ முடிச்சுட்டேன் பா'' சுடர் விளக்கை தூண்டி விட்டு கடைசி வார்த்தையை திருத்தி எழுதிவிட்டு தனக்குள் ஒரு தடவை பாடிப் பார்த்துக்கொண்டே படிக்கிறாள் தனது கையில் உள்ள ஓலைச்சுவடியை கோதை.
''வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்''
''ரங்கநாதா'' என்று சாஷ்டாங்கமாக பெருமாளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறார் விஷ்ணு சித்தர்.
''அம்மா தாயே, எவ்வளவு சுலபமாக ஒன்றுமறியாத குக் கிராமத்து இடைப்பெண்கள் புரிந்து கொள்ளும்படியாக எளிய வார்த்தையில் எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிராயே. எவ்வளவு நேர்த்தி எவ்வளவு அழகு. '' பூரித்துப் போனார் விஷ்ணுசித்தர்.
இரண்டாவது பாசுரத்தில், பாவை நோன்பு விதிகளைச் சொல்லுகிறாள் கோதை நாச்சியார், (இதையே பின்னால் 27வது பாசுரத்தில், இந்த பெண்களின் நோன்பை சிறந்த விதமாக முடித்தால் அதன் பயனாக, நல்ல ஆடை, அணிமணிகள் அணிந்து கொள்வோம், நெய் மற்றும் அதோடு கலந்து நிறைய பால் சாதம் உண்ணுவோம். அதாவது எவற்றை எல்லாம் நோன்புக்காகத் விட்டுக்கொடுத்தோமோ அதையெல்லாம் மீண்டும் கைக்கொள்வோம் என்கிறாள் ஸ்ரீ கோதை நாச்சியார்.
நோன்பு நோர்கும்போது பக்தி நம்பிக்கை கலந்து அழகு சாதனங்கள்
நல்ல அலங்காரங்கள்,ருசியான உணவு வகைகளைத் தொடாமல் மனதில்உறுதியாக 'செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்'
அதாவது, செய்யக்கூடாதவற்றைச் செய்ய மாட்டோம் ,தீமை யானவற்றை, பொய் சொல்லுதல், புறங்கூறுதல் முதலியவற்றைச்
செய்யாதுநல்லனவற்றையே பேசுவோம் என்று திட மனது தேவை என்றுகோதை கூறுகிறாள்.
இது எவ்வாறு ஆயர்பாடியில் நடந்தது என்று பார்ப்போமா?
"'இதென்ன புதுசா இத்தனை நாள் இல்லாமல் இப்போ "பாவை நோன்பு? நாமெல்லாம் இதை பண்ணதே இல்லை?. அதை எப்படி பண்ணுவது, எதற்காக என்று சொன்னால் புரிந்து கொண்டு ' சாஸ்திரம் என்ன சொல்கிறதோ அப்படியே "மடி"யாக பண்ணலாம் , ஆண்டாள் நீயே சொல்லு?:
"கேளுங்க சொல்றேன்,
''பாற்கடலில் நாராயணன் பாம்பு மேலே படுத்துக்கொண்டு உலகத்தல் நாம் எல்லோரையும் ரட்சிக்கிறான் என்று உங்களுக்கே தெரியும். நாம்செய்யும் பாவை நோன்பு அவனைப் பாடி போற்றி வேண்டுவது
எப்படியென்றால், நாம் குளித்து தலையை வாராமல் அள்ளி முடிந்து கொண்டு, மை பவுடர் எல்லாம் போட்டுக்காமல், விரதம் இருக்கணும்..அப்போ பால், பழம், தயிர், வெண்ணை இதெல்லாம்
வயிற்றில் ரொப்ப கூடாது. உள்ளே மட்டும் இல்லை,வெளியேயும், பொய், பித்தலாட்டம், கோபம், ஆத்திரம் எல்லாம் யார் கிட்டயும் கூடாது. ''
"ஏண்டீ, நாம இவ்வளவு கஷ்டப்படணுமா? என்றாள் ஒரு சிறுமி.
"எனக்கு தெரியலை,ஆண்டாளையே கேட்போம், அப்படியென்ன அவர் பெரிய கடவுள், நீயே சொல்லேன்? என்றாள் மற்றொருவள்.
அதற்குள் அவர்கள் யமுனைக்கு சென்று குளித்து விட்டு நாராயணன்
மேல் பாடி வீடுதிரும்பினர்.
“என்னடி நான் கேட்டேன் நீ ஒன்றும் சொல்லவே இல்லை?
“நாளைக்கு காலம்பர உங்களுக்கு விவரமா சொல்றேன் நேரமாச்சு இப்போ. கன்னுக்குட்டி காத்திண்டிருக்கும் பசியா அதுக்கு பால் ஊட்டணும் முதல்லே'. பசு மடி நிறைய பால் வைச்சுண்டு கறக்க காத்திருக்கும் ' என்றாள் ஆண்டாள்.