|
Post by Amritha Varshini on Aug 3, 2013 10:48:58 GMT 5.5
Postings by Sri Pattabi Raman (vijayakoti33@gmail.com) தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(2)
மனதிற்கு உபதேசம்
கீர்த்தனை(13)-கடதேர ராதா மனசா ராகம்-தோடி-தாளம்-தேசாதி
மனமே இடைவிடாமல் பஜனை செய்துகொண்டு உன்னிடம் தோன்றும் மோச சிந்தனைகளை நீயே அறிந்து கடைத்தேறலாகாதா?
தீய எண்ணங்களை அடிப்படையாகக் கொண்ட உலக வழக்கென்னும் சங்கிலியால் பிணைக்கப்படாமல் உரலில் கட்டுப்பெற்ற கண்ணனின் மெய்யடியவனாக விளங்கும் தியாகராஜனின் பேச்சை கேட்டு நீ கடைத்தேறலாகாதா?
மனதின் துணையில்லாமல் இறைவனிடம் முழுமையான பக்தி செய்தல் இயலாது.
அதற்க்கு மனமும் உடலும் ஒத்துழைக்கவேண்டும்.
மனம் உலக மோகத்தில் மூழ்கிவிட்டால் இறைவன் மீது நாட்டம் குறைந்துவிடும்
அதனால் இந்த கீர்த்தனையில் தன் மனதிற்கு ஸ்வாமிகள் உபதேசம் செய்கின்றார்.
அந்த உபதேசம் நமக்கும்தான்.
|
|