|
Post by shantha on Jul 31, 2013 22:03:46 GMT 5.5
ராகம்:: ஹமீர் கல்யாணி தாளம்: ஆதி
பல்லவி: மலைமகள் மகனே மஞ்சரி மணாளனே அலைமகள் மனமகிழ் மருகனே முருகனே
சரணம் 1 விலையில்லாப் பொருளே தொலையாத நிதியே நிலையில்லா உலகில் நிலைத்து நிற்கும் கதியே அலைவாயமர்ந்த அழகனே எந்தன் விதியே மலைகளின் தலைவனே தங்கமலை பதியே
சரணம் 2 கைலையங்கிரியில் மதலையாகத் தவழ்ந்தாய் கலைமகள் கணவனின் கர்வம் கலைத்தாய் அலையரசனின் பெயெர்த்தியை மடலேறிக் கவர்ந்தாய் கலை நூல்கள் காணா ஞானமலையாக வந்தாய்
சரணம் 3 அலைந்தழியும் புலன்களை ஒரு நிலைப் படுத்துவாய் வலைபோல் பின்னும் சலனங்கள் அழிப்பாய் அலைபாயும் எண்ணங்களை அணையாகத் தடுப்பாய் குலைந்துருகும் உள்ளத்தில் சிலையாக அமர்வாய்
Shantha Rajan ஆடிக்ருத்திகை 31st July
|
|
|
Post by Amritha Varshini on Aug 1, 2013 6:37:40 GMT 5.5
excellent poem on Lord Skantha on the auspicious day. Kindly continue your valuable postings for the benefit of Amritha Varshini readers Pranams Anand Vasudevan
|
|