|
Post by Amritha Varshini on Jan 15, 2019 6:26:00 GMT 5.5
ராகம் - ஹம்சநாதம்
பல்லவி
தத்வமஸி மறை பொருள் உணர்த்திட வேண்டுகிறேன் - ஐயப்பா
அனுபல்லவி
பரம்பொருள் ஒன்று சபரியில் அமர்ந்தருள அலைகடலென வரும் அடியவர்க்கு நின்னருளால்
( தத்வமஸி )
சரணம்
இருமுடி கொண்டவரின் மனக்கவலை தீருமே திருநாமம் சொல்வோரின் வல்வினைகள் மாயுமே முவ்வாறு படி ஏற அழுக்காறு நீங்குமே அவ்வாறு மனமாசுகள் யாவும் ஒழியுமே
( தத்வமஸி )
அருட்பெருஞ்ஜோதி இங்கு மகர ஜோதியாய் ஒளிரும் தனிப்பெரும் கருணை கொண்டு பக்தர்களை காத்தருளும் அபயம் தேடி வருவோர்க்கு வேண்டுவது அருளுமே - வேறு உபாயமின்றி சரணடைய முக்தியது நல்குமே
( தத்வமஸி )
ஆக்கம் - ஆனந்த் வாசுதேவன் இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா
Soundcloud soundcloud.com/amritha-varshini-836751731/aud-20171123-wa0000
|
|