Post by jksivan on Aug 14, 2013 20:00:23 GMT 5.5
94 விட்டலனின் இரு கண்கள்"
நாம் தேவ் ஒரு விசித்திர குழந்தையாக பிறந்தவர். ரெண்டு வயசிலேயே பேசியவர். அவர் வாயில் உதித்த முதல் வார்த்தை "விட்டலா". பிறகு அவர் அந்த ஒரு வார்த்தையையே அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருந்தார். அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு பாண்டுரங்கனின் கோவிலுக்குச் செல்வது அவருக்குப் பிடித்த ஒரு காரியம். ஏழு வயசிலே தானே ஒரு ஜாலரா செய்து அதை ஒசைப் படுத்திக் கொண்டு ஆடிப் பாடிக்கொண்டு இருப்பார். குழந்தை பக்தர்களில் ப்ரகலாதனைப் போன்றவர் நாமதேவர். உணவிலோ, தூக்கத்திலோ. பள்ளிக்குச் சென்று கற்பதிலோ கொஞ்சமும் விருப்பமே இல்லை. விட்டலனை என்றும் ஒரு தெய்வமாக நாம் பார்ப்பதுபோல அவர் நினைக்கவே இல்லை. தோழனாகவும் சகோதரனாகவும் தான் விட்டலன் தோன்றினான். வயதானது. வேலை செய்வதிலோ, சம்பாதிப்பதிலோ கூட புத்தி போகவில்லை. மற்றவர்களுக்கு அவர்மேல் வீ ட்டில் வெறுப்பு தான் வளர்ந்தது. அவருக்கோ விடோபா மேல் விருப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. கல்யாணம் பண்ணி வைத்தார்கள் அப்போதாவது ஏதாவது திருப்பம் வருமா என்று. குழந்தையும் பிறந்தது.
"விட்டலா, நாளைக்கு வீட்டுக்கு வரியா? என் பிள்ளைக்கு பேர் வைக்கபோகிரார்களே, நீ இல்லாமல் என் வீட்டில் ஏதாவது விசேஷம் நடக்குமா? அவசியம் நீ வரவேண்டும். விட்டலன் வந்தானே. ஒரு பிராமணராக வந்து அந்தக் குழந்தைக்கு "நாராயணன்" என்ற பேரையும் சூட்டினானே.
குடும்பத்தில் பிடிப்பு இல்லை.வறுமை, பற்றாக்குறை தரித்திரம் எல்லாம் வாட்டியது பெற்றோர் காலமானார்கள். விட்டலனே அவ்வப்போது வேறு வேறு ரூபங்களில் வந்து அந்த குடும்பத்தின் வறுமையைப் போக்கினான் என்று பல கதைகளை நாம் படித்தாகி விட்டதே நாமதேவுக்கும் விடலனுக்கும் இருந்த நட்பு நகமும் சதையும் போல இருந்ததால் ஒருவரின்றி மற்றவ ரில்லை என்றாகிவிட்டது. சமகாலத்தவரான ஞானதேவ் அவரை க்ஷேத்ராடனத்துக்கு கூப்பிட்டார்
"எங்கெல்லாம் போகப்போகிறீர்கள்?"
"வடக்கே,மேற்கே தெற்கே எங்கெல்லாம் சிவாலயங்கள் விஷ்ணு ஆலயங்கள் இருக்கிறதோ
அங்கெல்லாம் சென்று தரிசனம் செய்து, புண்ய நதிகளில் நீராடித திரும்புவோம், வருகிறீர்களா?.
"நான் எதையும் பார்த்ததில்லை. என்னவோ எனக்கு பார்க்க வேண்டும் என்ற விருப்பமே இல்லையே"
"நாம் நமது வாழ்வில் ஒருநாளாவது இது போன்ற புண்ய க்ஷேத்ரங்களுக்கு செல்லவேண்டும் புண்ய நதிகளில் ஸ்நானம் செய்யவேண்டும் இது கிடைக்காத ஒன்று. கிடைத்தபோது விடக்கூடாத ஒன்று.'
"என்ன ஒன்றுமே பதில் இல்லை. வருகிறீர்களா என்னோடு"
"எனக்கு ஒரே க்ஷேத்ரம் பந்தர்பூர். ஒரே புண்ய நதி சந்திரபாகா. ஒரே தெய்வம் இந்த விட்டலன். அவனைப் பிரிந்து ஒரு நாளும் என்னால் தனியாக இருக்க முடியாதே. நான் வரவில்லை"
"எனக்கென்னவோ உங்களோடு க்ஷேத்ராடனம் சென்றால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். நானே விட்டலனைக் கேட்கிறேன் உங்களை என்னோடு அனுப்பச் சொல்லி !"
ஞானதேவ் சிறந்த விட்டல பக்தர். விட்டலனுக்கும் அவரை பிடிக்கும். அவர் நேராக விட்டலனிடம் சென்றார்.
"பாண்டுரங்கா, நான் க்ஷேத்ராடனம் செல்கிறேன் போகுமிடமெல்லாம் நாமதேவரும் வந்தால் மக்களுக்கு உன் நாம சங்கீர்த்தன் அமிர்தம் கிடைக்குமே. நீ தான் அவர் மனதில் என்னோடு வர அனுமதி அளிக்க வேண்டும்."
" சரி, அவ்வாறே செய்ய முயல்கிறேன்
" நாமதேவா நீ ஞான தேவரோடு க்ஷேத்ராடனம் செல்."
" விட்டலா, எனக்கு உன்னைப் பிரிந்து இருக்க முடியாதே.
"நான் தான் உன் மனதில் எப்போதும் இருப்பேனே, நீ செல்."
" இல்லை விட்டலா. பந்தர்பூர் ஒன்றே போருமே எனக்கு."
"ஞானதேவர் உன்னோடு செல்லவேண்டும் என்கிற விருப்பத்தில் இருப்பதால் அந்த மகானோடு நீ செல். உனக்கும் பார் அவரது நட்பு ரொம்ப பிடிக்கப்போகிறது"
அவர்கள் க்ஷேத்ராடனம் சென்ற அன்று விட்டலன் சோகமாக இருந்தான். ருக்மணி, "நாதா என்று மில்லாமல் உங்கள் கண்களில் ஏன் கண்ணீர்? என்று வினவினாள்
"என் உயிர் நண்பன் பக்தன் நாம்தேவ் இன்று என்னை விட்டு க்ஷேத்ராடனம் செய்யப் போகிறான். அவன் திரும்பி வர பல வருஷம் ஆகுமே. தினமுமே அவனோடு இருந்து பழக்கப்பட்ட எனக்கு அவனைப் பிரிந்து எவ்வாறு இருக்கப் போகிறேனோ தெரியவில்லை"
விட்டலன், போகு முன் ஞானதேவரைக்கூப்பிட்டு "உன்னை நம்பித்தான் நாமாவை அனுப்புகிறேன் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்னைத் தவிர, நீ தான் ரொம்ப ஜாக்ரதையாக அவரைப் பார்த்து அழைத்துக்கொண்டு ஜாக்ரதையாக என்னிடம் திரும்பக் கொண்டு சேர்க்க வேண்டும், புரிகிறதா?" என்றான்
அவர்கள் க்ஷேத்ராடனம், அங்கு அங்கு நடந்த ஆச்சர்ய சம்பவங்கள் வினோதங்கள் பற்றியெல்லாம் எல்லாம் நிறைய கதைகளில் ழுதியாச்சே. பல இடங்கள் சென்று பல வருஷங்கள் கழித்து திரும்பினார்கள். இணை பிரியாத நண்பர்களானார்கள். விட்டலனின் இரு கண்களானார்கள்.
பண்டரிபுரம் அவர்கள் திரும்பியபோது விட்டலனே சந்திரபாகா நதிக்கரையில் அவர்களுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து சமாராதனை எல்லாம் பண்ணச் சொல்லி தானே ருக்மணியோடு சேர்ந்து அதில் சமைத்து பரிமாறினான்
நாமதேவர் விசொபா கேசார் என்பவரை குருவாகக் கொண்டார். ஒருமுறை நாம்தேவ் விட்டல நாம சங்கீர்த்தனத்தில் லயித்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்ட ஒரு ரொட்டித் துண்டை ஒரு நாய் அவர் கையில் இருந்து கவ்விக்கொண்டு ஓட அவர் ஓடி அதைத்தொடர அது இன்னும் வேகமாக ஓட, "ரொட்டித் துண்டுக்காகத் தானே என்னைத் துரத்துகிறாய்" என்று அதை வாயிலிருந்து கீழே போட்டு விட அவர் அதை எடுத்து அதில் நிறைய நெய் தடவி "இந்தா, விட்டலா, வெறும் ரொட்டி திங்காதே, நெய் தோய்த்து சாப்பிடு" என்று கடைசியில் அந்த நாயைப் பிடித்து நெய் தடவிய ரொட்டியை அதன் வாயில் அடைக்க அது சந்தோஷமாக உண்டது
நாமதேவரும் ஞானதேவரும் கடைசிவரை இணைபிராத தோழர்களாக வாழ்ந்து ஒருநாள் ஞானதேவர் ஆலண்டியில் தான் சமாதி அடைய முடிவெடுத்து அவரோடு இருந்து சமாதி யானவுடன் அவரது சகோதரர்கள் நிவ்ரித்தி, சோபன் மற்றும் சகோதரி முக்தாபாய் ஆகியோருடன் சிலகாலம் வாழ்ந்து அவர்களும் மறைந்த பின்னர் தானும் பண்டரிபுரத்திலேயே மறைந்தார். விட்டலன் நாம முள்ளவரை நாமதேவரும் வாழ்கிறார் இணைந்து.
நாம் தேவ் ஒரு விசித்திர குழந்தையாக பிறந்தவர். ரெண்டு வயசிலேயே பேசியவர். அவர் வாயில் உதித்த முதல் வார்த்தை "விட்டலா". பிறகு அவர் அந்த ஒரு வார்த்தையையே அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருந்தார். அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு பாண்டுரங்கனின் கோவிலுக்குச் செல்வது அவருக்குப் பிடித்த ஒரு காரியம். ஏழு வயசிலே தானே ஒரு ஜாலரா செய்து அதை ஒசைப் படுத்திக் கொண்டு ஆடிப் பாடிக்கொண்டு இருப்பார். குழந்தை பக்தர்களில் ப்ரகலாதனைப் போன்றவர் நாமதேவர். உணவிலோ, தூக்கத்திலோ. பள்ளிக்குச் சென்று கற்பதிலோ கொஞ்சமும் விருப்பமே இல்லை. விட்டலனை என்றும் ஒரு தெய்வமாக நாம் பார்ப்பதுபோல அவர் நினைக்கவே இல்லை. தோழனாகவும் சகோதரனாகவும் தான் விட்டலன் தோன்றினான். வயதானது. வேலை செய்வதிலோ, சம்பாதிப்பதிலோ கூட புத்தி போகவில்லை. மற்றவர்களுக்கு அவர்மேல் வீ ட்டில் வெறுப்பு தான் வளர்ந்தது. அவருக்கோ விடோபா மேல் விருப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. கல்யாணம் பண்ணி வைத்தார்கள் அப்போதாவது ஏதாவது திருப்பம் வருமா என்று. குழந்தையும் பிறந்தது.
"விட்டலா, நாளைக்கு வீட்டுக்கு வரியா? என் பிள்ளைக்கு பேர் வைக்கபோகிரார்களே, நீ இல்லாமல் என் வீட்டில் ஏதாவது விசேஷம் நடக்குமா? அவசியம் நீ வரவேண்டும். விட்டலன் வந்தானே. ஒரு பிராமணராக வந்து அந்தக் குழந்தைக்கு "நாராயணன்" என்ற பேரையும் சூட்டினானே.
குடும்பத்தில் பிடிப்பு இல்லை.வறுமை, பற்றாக்குறை தரித்திரம் எல்லாம் வாட்டியது பெற்றோர் காலமானார்கள். விட்டலனே அவ்வப்போது வேறு வேறு ரூபங்களில் வந்து அந்த குடும்பத்தின் வறுமையைப் போக்கினான் என்று பல கதைகளை நாம் படித்தாகி விட்டதே நாமதேவுக்கும் விடலனுக்கும் இருந்த நட்பு நகமும் சதையும் போல இருந்ததால் ஒருவரின்றி மற்றவ ரில்லை என்றாகிவிட்டது. சமகாலத்தவரான ஞானதேவ் அவரை க்ஷேத்ராடனத்துக்கு கூப்பிட்டார்
"எங்கெல்லாம் போகப்போகிறீர்கள்?"
"வடக்கே,மேற்கே தெற்கே எங்கெல்லாம் சிவாலயங்கள் விஷ்ணு ஆலயங்கள் இருக்கிறதோ
அங்கெல்லாம் சென்று தரிசனம் செய்து, புண்ய நதிகளில் நீராடித திரும்புவோம், வருகிறீர்களா?.
"நான் எதையும் பார்த்ததில்லை. என்னவோ எனக்கு பார்க்க வேண்டும் என்ற விருப்பமே இல்லையே"
"நாம் நமது வாழ்வில் ஒருநாளாவது இது போன்ற புண்ய க்ஷேத்ரங்களுக்கு செல்லவேண்டும் புண்ய நதிகளில் ஸ்நானம் செய்யவேண்டும் இது கிடைக்காத ஒன்று. கிடைத்தபோது விடக்கூடாத ஒன்று.'
"என்ன ஒன்றுமே பதில் இல்லை. வருகிறீர்களா என்னோடு"
"எனக்கு ஒரே க்ஷேத்ரம் பந்தர்பூர். ஒரே புண்ய நதி சந்திரபாகா. ஒரே தெய்வம் இந்த விட்டலன். அவனைப் பிரிந்து ஒரு நாளும் என்னால் தனியாக இருக்க முடியாதே. நான் வரவில்லை"
"எனக்கென்னவோ உங்களோடு க்ஷேத்ராடனம் சென்றால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். நானே விட்டலனைக் கேட்கிறேன் உங்களை என்னோடு அனுப்பச் சொல்லி !"
ஞானதேவ் சிறந்த விட்டல பக்தர். விட்டலனுக்கும் அவரை பிடிக்கும். அவர் நேராக விட்டலனிடம் சென்றார்.
"பாண்டுரங்கா, நான் க்ஷேத்ராடனம் செல்கிறேன் போகுமிடமெல்லாம் நாமதேவரும் வந்தால் மக்களுக்கு உன் நாம சங்கீர்த்தன் அமிர்தம் கிடைக்குமே. நீ தான் அவர் மனதில் என்னோடு வர அனுமதி அளிக்க வேண்டும்."
" சரி, அவ்வாறே செய்ய முயல்கிறேன்
" நாமதேவா நீ ஞான தேவரோடு க்ஷேத்ராடனம் செல்."
" விட்டலா, எனக்கு உன்னைப் பிரிந்து இருக்க முடியாதே.
"நான் தான் உன் மனதில் எப்போதும் இருப்பேனே, நீ செல்."
" இல்லை விட்டலா. பந்தர்பூர் ஒன்றே போருமே எனக்கு."
"ஞானதேவர் உன்னோடு செல்லவேண்டும் என்கிற விருப்பத்தில் இருப்பதால் அந்த மகானோடு நீ செல். உனக்கும் பார் அவரது நட்பு ரொம்ப பிடிக்கப்போகிறது"
அவர்கள் க்ஷேத்ராடனம் சென்ற அன்று விட்டலன் சோகமாக இருந்தான். ருக்மணி, "நாதா என்று மில்லாமல் உங்கள் கண்களில் ஏன் கண்ணீர்? என்று வினவினாள்
"என் உயிர் நண்பன் பக்தன் நாம்தேவ் இன்று என்னை விட்டு க்ஷேத்ராடனம் செய்யப் போகிறான். அவன் திரும்பி வர பல வருஷம் ஆகுமே. தினமுமே அவனோடு இருந்து பழக்கப்பட்ட எனக்கு அவனைப் பிரிந்து எவ்வாறு இருக்கப் போகிறேனோ தெரியவில்லை"
விட்டலன், போகு முன் ஞானதேவரைக்கூப்பிட்டு "உன்னை நம்பித்தான் நாமாவை அனுப்புகிறேன் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்னைத் தவிர, நீ தான் ரொம்ப ஜாக்ரதையாக அவரைப் பார்த்து அழைத்துக்கொண்டு ஜாக்ரதையாக என்னிடம் திரும்பக் கொண்டு சேர்க்க வேண்டும், புரிகிறதா?" என்றான்
அவர்கள் க்ஷேத்ராடனம், அங்கு அங்கு நடந்த ஆச்சர்ய சம்பவங்கள் வினோதங்கள் பற்றியெல்லாம் எல்லாம் நிறைய கதைகளில் ழுதியாச்சே. பல இடங்கள் சென்று பல வருஷங்கள் கழித்து திரும்பினார்கள். இணை பிரியாத நண்பர்களானார்கள். விட்டலனின் இரு கண்களானார்கள்.
பண்டரிபுரம் அவர்கள் திரும்பியபோது விட்டலனே சந்திரபாகா நதிக்கரையில் அவர்களுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து சமாராதனை எல்லாம் பண்ணச் சொல்லி தானே ருக்மணியோடு சேர்ந்து அதில் சமைத்து பரிமாறினான்
நாமதேவர் விசொபா கேசார் என்பவரை குருவாகக் கொண்டார். ஒருமுறை நாம்தேவ் விட்டல நாம சங்கீர்த்தனத்தில் லயித்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு பிரசாதமாக கொடுக்கப்பட்ட ஒரு ரொட்டித் துண்டை ஒரு நாய் அவர் கையில் இருந்து கவ்விக்கொண்டு ஓட அவர் ஓடி அதைத்தொடர அது இன்னும் வேகமாக ஓட, "ரொட்டித் துண்டுக்காகத் தானே என்னைத் துரத்துகிறாய்" என்று அதை வாயிலிருந்து கீழே போட்டு விட அவர் அதை எடுத்து அதில் நிறைய நெய் தடவி "இந்தா, விட்டலா, வெறும் ரொட்டி திங்காதே, நெய் தோய்த்து சாப்பிடு" என்று கடைசியில் அந்த நாயைப் பிடித்து நெய் தடவிய ரொட்டியை அதன் வாயில் அடைக்க அது சந்தோஷமாக உண்டது
நாமதேவரும் ஞானதேவரும் கடைசிவரை இணைபிராத தோழர்களாக வாழ்ந்து ஒருநாள் ஞானதேவர் ஆலண்டியில் தான் சமாதி அடைய முடிவெடுத்து அவரோடு இருந்து சமாதி யானவுடன் அவரது சகோதரர்கள் நிவ்ரித்தி, சோபன் மற்றும் சகோதரி முக்தாபாய் ஆகியோருடன் சிலகாலம் வாழ்ந்து அவர்களும் மறைந்த பின்னர் தானும் பண்டரிபுரத்திலேயே மறைந்தார். விட்டலன் நாம முள்ளவரை நாமதேவரும் வாழ்கிறார் இணைந்து.