|
Post by Amritha Varshini on Sept 18, 2016 6:12:30 GMT 5.5
அனைவருக்கும் வணக்கம்
மஹாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த தினம் (செப்டம்பர் 11).
இதைக் கொண்டாடும் வகையில் அவரின் கவிதையை நம் அம்ரிதவர்ஷிணி அன்பர்களுக்கு பகிர ஆவல் கொண்டேன்.
பாரதியின் கவிதைகள் சாகாவரம் பெற்றவை. அவை படிக்க படிக்க நமக்கு ஆனந்தத்தை தரும் என்பதில் ஏதேனும் ஐயம் உண்டோ?
"காணி நிலம் வேண்டும்” என்ற கவிதையை உங்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கவிதை மற்றும் திரு உன்னிகிருஷ்ணனின் படலைக் கேட்க உறலியை சொடுக்கவும்.
ஆனந்த் வாசுதேவன் தருமமிகு சென்னை 18-09-2016
------------------------
காணி நிலம் வேண்டும் பராசக்தி - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்குத் தூணில் அழகியதாய் நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய் அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் அங்குக் கேணியருகினிலே தென்னைமரம் கீற்று மிளநீறும்
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கதிலே வேணும் நல்ல முத்துச் சுடர்போலே நிலாவொளி முன்பு வரவேணும் அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதிற் படவேணும் என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளந் தென்றல் வரவேணும்
பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு பத்தினிப் பெண்வேணும் எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தரவேணும் அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன் காவலுறவேணும் என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித் திடவேணும்
|
|